Sunday, April 25, 2010

இரண்டாம் விற்பனைக்கு

மோனங்கலைதற்கஞ்சி
முகத்திரைகள்
முகங்களானதை
நான் எதிர்பார்த்தேன்

எனவே
நானுமொன்று செய்துகொண்டேன்

ஆயினும்
அவ்வப்போது வெளிப்பட்டவண்ணமிருந்தன
என் வெளிப்பாடுகள்

திரைகளை தூக்கிஎறிந்தேன்

கசகசவென்று
கனவிலும், நேரிலும்
வீட்டிலும், வெளியிலும்
முகத்தருகே
எப்போதும் முகங்கள்
அன்று, முகத்திரைகள்

திரைகளுக்காய்
திறந்து விடுகிற
என் நுட்பங்களை
எப்படிக் கரைத்து கொள்வது

கவலையில்
கையிருந்த ஓரிரு திரைகளையும்
விற்றேன்
வயிறு வளர்க்க

வெளிப்பாட்டு வறுமை
வறுத்தெடுக்க
செல்லாக்காசு மோனத்தை
நுட்பமறந்து போய்
விற்றுத் தொலைக்க
அல்லாடி கொண்டிருக்கிறேன்
இந்த வேளைக்கு


- அஞ்சலிக்குரல்கள் கேட்கும்
   அந்த
   அறைக்கதவை மூடிவிட்டு

- 26/02/91

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer