Every life has cyclical crests and troughs - reversals are caused by paradigm shifts, keeping the otherwise sedate life interesting...
Monday, July 14, 2025
இருப்பு
Monday, November 9, 2020
சொல்வனம் மின்னிதழில் மூன்று கவிதைகள்
சொல்வனம் மின்னிதழில் வெளிவந்திருக்கும் மூன்று கவிதைகள்
https://solvanam.com/2020/11/08/%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/
Sunday, September 6, 2020
ஷிவர்
ஏன் உன்னை
இன்னும் யாரும்
அடித்துக் கொல்லவில்லை
என்று கொலைவெறியோடு கேட்கிறார்கள்
ஏன் இல்லை
இதோ என் முன்
கையில் பல கவிதைகளுடன்
வார்த்தை விளையாட்டுகளுடன்
இணையமும்
சிற்றிலக்கிய சாகசமும்
இருக்கிறது
தூக்குக் கயிற்றின்முன் நிற்கும்
மரணதண்டனைக் கைதியைப்போல்
அவற்றின்முன் நிற்கிறேன்
அவற்றின்
அறிவார்ந்த முதல் தொடுகையில்
உடலெங்கும்
அருவருப்பிலும் கூச்சத்திலும்
புல்லரித்து நடுங்குகிறது
ஒரே கணத்தில்
நடுக்கம் மறைந்து
நானும் அவற்றின் ஒரு பகுதியாக
கவிதையெழுதத் துவங்குகிறேன்
நான் எப்போதும்
முழு முட்டாள்தனத்துடன்
எதையும் எழுதுவதிலிருந்து
இத்தனைக் காலம்
தப்பித்து வந்துகொண்டிருந்தவன்
ஆயினும்
அள்ளிப்பூசும் அசூயை
என்னை மேலும் மோசமாக
எழுதத் தூண்டுகிறது
செய்வதறியாது
கவிதை என்றறிந்ததை செய்யாது
உறைந்துபோய்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
எவ்வளவு முயற்சித்தும்
அடித்து ஊற்றிக்கொண்டேயிருக்கும்
இத்தகைய கவிதைகளிலிருந்து
சட்டென்று
தப்பித்து விட முடிவதில்லை
கவிதை என்பது
கவிதை மட்டுமல்ல
புலன்களை உறைந்துபோகச் செய்யும்
வல்லமை கொண்ட
வன்முறையும் கூட
எழுதியும் அறிந்தும்
ஏற்றிக்கொண்டிருக்கும்
உன்னதங்களை
உருவியெடுத்து
வெளியில் வீசும்
வேலையையும்
கவிதை செய்கிறது
இலக்கிய வன்முறையின்
மிகப்பழைய படிமம்
யாவரும் எதுவும் தெரியாத
இரசனை அறிவிலிகள்
என்றெண்ணி
கவிதையெழுதுதல்
என்பதை இன்று
உணரவைத்த
கவிதை போல்
வேறேதேனும் உண்டா?
அள்ளிக்குடித்த காடியைப்போல்
அப்பட்டமான கவிதை
வாயெங்கும் கசந்து
உடலெங்கும் பரவுகிறது
படித்துமுடித்தபிறகும்
நினைவில் சிந்திச்சிதறும்
கவிதை வரிகள் வார்த்தை விளையாட்டுகள்
பற்பல நாட்கள்
புன்னகையும் வேதனையையும்
ஒருசேர விளைவித்துக்கொண்டிருக்கின்றன
ஒரு கவிதை
ஒரே கவிதை
இருந்தால் போதும்
ஈராயிர வருடங்களை
அற்றுப் போகச் செய்துவிடலாம்
மேலும் கவிதை
எவ்வித
எதிர்பார்ப்பும் இல்லாதது
சுயகட்டுப்பாடோ
அவைநாணமோ
என்றுமில்லாத அதற்கு
எப்போது நிறுத்திக்கொள்ள
வேண்டுமென்றும் தெரிவதில்லை
அந்தக் கவிதையின் பாதிப்பில்
நீங்களும் கவிதையெழுதினால்
அந்தக் கவிதையை ஏற்றுக்கொள்ளும்
அனைவரும்
உங்கள் கவிதையை
ஏற்க வேண்டுமென்பதில்லை
ஏனென்றால் அது அந்தக் கவிதை
Wednesday, December 13, 2017
ஆதி கதை

கதை சொல்லத் தொடங்குகிறேன்
இன்று போலல்ல
அது தேவதைகளும் யக்ஷிகளும்
மிருகங்களும் மனிதர்களும்
தத்தமது உலகம் வாழ்ந்த காலம்
கூடியும் ஊடியும்
களியென யக்ஷிகள்
ஒருநாள் மனிதத்தடம் பதிந்திராத
கருமலைகளின் விண்பொதிந்த
உயரங்களினின்று
மண்வந்து சேர்ந்தன
சிகரங்களின் பனிமுகில்கள்
கொடுமுடிகள் விட்டிறங்கி
கானகத்தின் இலைப்படுகை
கால்நுனி தீண்டிப்பார்க்கும்
அந்நீர்தொடர்ந்து ஆடிவந்த
தேவதைகளும் யக்ஷிகளும்
பிறிதொரு கரைநின்ற
விலங்குகளும் மனிதமும்
கண்டுகொண்டன
அதன்பின் கடந்துமறைந்த
காலங்கள்தோறும்
யாருக்கு பூசனை யாரிடும் படையல்
யாருக்கு ப்ரீதி யார் செய்வதென
கனவுகளிலும் தீரா போர்களில்
கழிந்தன தலைமுறைகள்
ஒருபோது மனிதம் வேண்டி
யக்ஷிகள் தெண்டனிடும்
மறுபோதோ
படையலும் பலியும் கொள்ளுமவை
எழுந்தும் அமிழ்ந்தும்
அவை சன்னதம்
அடங்காதாடும்தோறும்
அவற்றிலொன்றென ஆயினும்
இதுவேதும் கலவா தேவதைகளோ
கூர்பார்வையும் அரிதென சிரியுமென
பனிமூடிச்சிகரங்கள் ஏறியவாறிருந்தன
போர்களில்
படைப்பும் காதலும் ஊக்கமும்
அழிந்துகிடந்த
யக்ஷிகள் மனிதர்கள்முன்
தோன்றின தேவதைகள் ஒருநாள்
யாரும் கேட்டிரா ஒலிகளில் உன்னதம்நிறைத்து
யாரும் கண்டிரா வினைகளில் மர்மம்புதைத்து
தேவதைகள் கூறும்
வேடம் மாற்றுக
முகமூடி களைக
யக்ஷியும் நீ மானுடமும் நீவிர்
விலங்கினமும் நாம்
அனைத்தும் நாமே
வீழ்ந்தன அனைத்தும்
பணிந்தன பாதம்
கதைமுடிந்தது
எனினும்
கனவுமுடியாதென
நாமும் அறிவோம்
அவையும் அறியும்
Wednesday, October 4, 2017
வேட்கை
கையகல நீர்த்தேக்கத்தை
துளித்துளியாய் அருந்துகிறாய்
அடுத்தப் பேருந்து வந்து
நீர்த்தேக்கத்தை சிதறடிக்குமுன்
உன்சிறு நாவின் வேட்கை
தணியுமோ ஆறாதோ
தவித்தவாறு நடைமேடையில் நிற்கும்
என்னருகே தாவி நின்று
வந்த பேருந்து கிளம்பக் காத்திருக்கிறோம்
நீயும் நானும்
Padhaakai - Kavithai
https://padhaakai.com/2017/10/04/desire/
Monday, April 24, 2017
புலன்மயக்கம்
விழிகளுக்குள் தேங்கி நிற்கும் உறவு
கூப்பிய கரங்களின் விரல்நுனிகள்
பார்த்தவாறிருந்தேன்
சொல்லென இல்லாமலேனும்
உணர்வொன்று
விரல்வழி வழிந்துவிடாதா
மென்மயிர் அடர்ந்த உன்
முன்வளைக்கரம் தொட்டு
உணர்த்திவிடாதா
அனிச்சையாகவேனும்
ஏதேனும் நிகழ்ந்துவிடாதா
தீண்ட நீளும் விரல்களின் முன்
சுருங்கும் என் புலன்கள்
சூழலின் உறுத்தல் மீதூற
கழுத்தை அழுத்தித் தேய்த்துக் கொள்கிறேன்
நிறமும் வளைவும் மினுமினுப்பும்
உன் கழுத்தை நினைவூட்டும்
யாரும் இதுவரை தொடாத
தேநீர்க்குவளை புகைகின்றது.
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - புலன்மயக்கம்
https://padhaakai.com/2017/04/23/sensory-illusions/
Monday, February 20, 2017
Thursday, December 10, 2015
திணை மயக்கம்
Wednesday, November 4, 2015
பதாகை மின்னிதழ்
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 'ஒற்றைப் பூ'
http://padhaakai.com/2015/11/04/flower/
Thursday, October 8, 2015
இன்மையின் எண்
Sunday, November 27, 2011
பொய்மெய்
உறவற்ற உறவையும்
நிரந்தரமான நிரந்தரமின்மையையும்
மறுதலித்தால்
எப்படி சித்திக்கும்
ஞானம்
இருப்பு
இருப்பு ஆறறிவோடு ஒன்றிரண்டு சேர்ந்தால் என்ன குறை குறைந்தால் என்ன நிறை மலைக்காற்று வீசாத மாலைகளில் இதென்ன விசாரம் நடந்து நடந்து நடந...
-
"Annai! Annai! Aadum Koothai Naada cheidhaai ennai!" These were the lines by Mahakavi Bharathi in his poem titled 'Oozhi ko...
-
The other day, I was searching for Aldous Huxley’s writings and chanced upon a century-old school of thought, propounded by Hermus Trismegis...
-
எ த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து... அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்...