Saturday, April 17, 2010

வைபவம்

மேம்பாலம்
முழுக்க அலைமோதும்
கூட்டம்
வைகையின்
எப்போதுமே நீரற்ற
பரப்பில்
கள்ளழகர்
குதிரையிலிறங்கும்
வைபவம் காண
பக்கத்து கிராம
தகப்பனின் தோள்களில்
வந்து
பலூன் வாங்க
இறங்கி
திரளில் தொலைந்த
குழந்தையாய்
நான்

- 28/12/89

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer