Showing posts with label Saravanan. Show all posts
Showing posts with label Saravanan. Show all posts

Monday, November 12, 2012

5 குறுங்கவிதைகள்

கற்றுக் கொண்டவைகளை கணக்கு வைத்திருக்கவில்லை
கணக்கும் கற்றுக் கொண்டது  தானே


ஒழுகி விழுந்தது ஒழுக்கம் இடையில்
நழுவித் தொலைந்தன கற்பிதங்கள்



என்னிலிருந்து இறங்கிச் சென்றவனை கண்டேன்
கண்டவனை கண்டு கொண்டேன்


சொற்களை சிந்தி எண்ணங்களை விதைத்து
செயல்களை வேண்டினேன்
அவநம்பிக்கை கிளைத்து அனர்த்தங்கள் விளைந்து
உன்மத்தம் சித்தித்தது


உடனுறைந்தும் தானுணரா தத்துவம்
அனைத்தும் நிறைந்தும் ஆருமறியா  சித்தாந்தம்
உணரக் கூடாத வினைகள்
புரிந்தவை கொண்டு
அளக்க முற்படும்
அறிவின்மை
அளக்க முடியா
அறிவின்மையை அறிவதே
அறிவல்லவா

 

Sunday, November 27, 2011

பொய்மெய்

புதுமை ஒன்றுமில்லை

உறவற்ற உறவையும்
நிரந்தரமான நிரந்தரமின்மையையும்
மறுதலித்தால்
எப்படி சித்திக்கும்
ஞானம்

Pandit Venkatesh Kumar and Raag Hameer