Saturday, April 24, 2010

ஒற்றைச் செருப்பு

நாற்சந்தியில்
நடுத்தெருவில்
நடைப்பாதையில்
எப்போதும் கிடக்கும்
ஒற்றைச் செருப்பு
எப்படித் தொலைந்தது
மற்றொன்று
எந்த நிர்ப்பந்தம்
பிரிக்குமவற்றை

கவனிப்பாரற்று
கிடந்துகொண்டேயிருக்கிறது
அடித்து புரட்டும்
அடைமழை வரும் வரை

போகும் ஊர் முழுதும்
பார்க்குமந்த
ஒற்றைச் செருப்பை
எண்ணப் புரியாத
ஏதோவொன்றின்
சீரழிவாய் எண்ணி
ஏங்கி விதிர்க்கும்
மனசு

- 16/05/92

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer