Sunday, April 11, 2010

சகம்

இருள் புலரும்போது
கீழ்வானில் வெளிறிய சிவப்பு
முதலெழுந்த புட்கள் குரல்
யாருக்காகவும்
காத்திராத கடன்கள்
அதிலொரு நிறைவு

அறிந்தும் அறியாமலும்
நெருங்கியும் நெருங்காமலும்
அடித்தும் அணைத்துமாய்
ஒரு சகம்

எதுவும் தேவையற்று
விரைந்து பரவும்
ஒளியொன்ற வேண்டி
ஈடுகொடுக்க வேண்டும்
ஒரு சகம்

மனதுக்குள்
கண்டுபிடித்திராத
எண்ணிலடங்கா
நிறப்பிரிகைகள்
படிமங்கள்

கல்லை
புரட்டிப்பார்க்க
ஒவ்வொரு படிமமும்
அற்புத அழகுடன்
அகோர அவலச்சனத்துடன்
விரிந்த நிறக்கதிருடன்
பெருமைப்பட செதுக்கி
பூரணமாய்
மகிழ்ந்து கொள்ளும்
என் சகம்

- 05 / 5 / 91

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer