Sunday, April 11, 2010

நனவு மிச்சங்கள்

முகமற்றுப் போகப்போகிற
இரவுகளின் இறுக்கத்தில்
கண்ணீரில்
முகம்புதைத்துத் தூங்கியிருக்கிறேன்

தோள்களோ மெலிந்துபோய்
கையிடுக்கிலும் காலூன்றும்
கட்டைகளைக் காணோம்

முதுகும், கத்திகளும்
குருதிவழியும் புதைகுழிகளும்
இருண்ட முகங்களும்
அரட்டும் கனவுகளுக்காய்
நனவில் இரவு

எதிர்பார்ப்புக்கள்
புதைந்து கிடக்கும்
குழிக்குள்
கனவுப்புழுதியின்
மிச்சம் ஒட்டிய
முகமற்ற விரல்கள்
நடுங்கிக்கொண்டே நீளும்
உதவிக்கோ உட்தள்ளவோ

கண்மூடினாலும்
கருவிழியின் ஒளியில்
காலத்தை
கடந்தாலோசித்து விடுகிற
கலை மறந்து போனேன்
கனவு மறந்து போனேன்


என்
கால்களும் புதைகையில் அறிவேன்
உயிரற்று போவேன்
சுயமற்று போகும்முன்

- 29 /12 /91

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer