Showing posts with label Death. Show all posts
Showing posts with label Death. Show all posts

Friday, January 31, 2014

என் நாள்

தெய்வம் மறிக்கின்ற வழியெனது
சாத்தான் திறக்கின்ற வழியுமெனது

மழை கலங்கும் நீர்த்தேக்கங்களில்
மறையப்போகும் முகங்கள்

எதையோ இழக்க நேரிடுமென்றே
எதையும் சேர்க்காதொழிந்த காலம்

எஞ்சுவன எண்ணும்  விரல்களுள்
கூட சேர்ந்தெண்ணும் காலனின் கைவிரல்

தொலைவில் எனக்கான
அழைப்பு விடுக்கப் பட்டுவிட்டது

எனக்கேயான என் பெயர் பொறித்த
மாற்றவியலா அழைப்பு

பிறந்ததும் செய்யத் துவங்கும்
பருவந்தோறும் எண்ணி எழுத்தேறும்

நிறமும் செம்மையும்
நிதமும் மாற

மறிக்கின்றதும் மரிக்கின்றதும்
கரைகின்ற நாள்

என் நாள் அதுவென்
அழைப்பின் நாள்


இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...