Saturday, April 24, 2010

என் - துளி

என் கண்களுக்குள்
நானுணரும் வெப்பம்
கரித்தபடி
நகர்கிறது ஒரு துளி

உன் கண்ணில்
ஒற்றி
பகிர்ந்து கொள்ள
ஆவியாகுமுன்
வருமோவுன்
குவிந்த கைகள்

- 13/05/2001

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...