Monday, April 12, 2010

அவள் நினைவுகள்

இருண்ட சந்துகளில்
குருடனாய்
கைத்தடியின் சத்தம் மட்டும்
அவ்வப்போது முனகுவதாய்
முன்னேயும் பின்னேயும்
ஆளின்றி
நடந்து போகும்
நானறியாது
இதோ
இச்சுவர்களிலும்
இழுத்து அடைக்கப்பட்ட கதவுகளிலும்
தரையிலும்
என்னைத் தொடர்ந்து வரும்
நிழலே
போய்விடு போ போய்விடு

என் பாதையே
நானறியாத போதில்
எங்கே நான்
சுமப்பது உன்னை

இருள் கவிந்த
கண்களுக்குள்
நிழல் துணை உணர்ந்து
புன்னகை மலரும்

கவனம் சிதறி
கண்ணீர் வர
விழும் வேளையில்
நீயொரு சுமை

போ போய்விடு

நிழலுமற்ற தனிமை
நான் மட்டுமே துணை
அடர்ந்த இரவுகளிலும்
என்னருகே இருக்க
நீ காட்டும்
விசுவாசம் கருதி
சில போதும்
விழத் தயாரில்லை

இந்த குருடனை
அந்தகாரத்தில் வாழவிடு
அதற்குள்
என்னை அரசாள விடு
நிஜன்தேடி நிழலணைக்க
ஆகாது

போ போய்விடு

- 26 / 10 /89

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer