Sunday, April 11, 2010

கரிய தேவதைகள்

துர் அதிர்ஷ்டத்தின்
அழகிய கறை படிந்த
என்
கரிய தேவதைகள்
நான் போகுமிடமெல்லாம்
தொட்டுவிடப்போவதாய்
பாவனையில்
தொடாமல் ஒரு சரசம்
சிக்கிக் கொள்வதாய்
நிகழ்வில்
சிக்காமல்
மகிழ்ந்து கொண்டு நான்

எனத்
தொடர்கிறது

கறைகளை
அர்த்தப்படுத்திக் கொள்ள
தெரிவதோடு
முடிந்துவிடவில்லையோ
என் தேவதைகளின்
தொடர்வுகளை
அலட்சியப்படுத்தும் வழியாய்
கறைகளை
கண்களாக்கிக் கொண்டேன்

இனியெல்லாம்
இனிய கருமை
தொடாமலே விடுபட்டுப் போகும்
அன்றி சிக்குண்டு மூச்சிறும்

- 11 / 10/ 93

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer