Monday, April 12, 2010

முகத்திரை

அகந்தைகளாலும்
அவமானங்களாலும்
அடைக்கப்பட்டிருந்த
கம்பிகளை விளக்கி
வெளியே பார்த்தேன்
ஒரு நாள்

எதிரே ஒரு நான்

மலைத்து பார்த்த
என்னை
எள்ளி நகையாடி
அவன் செய்த காரியங்கள்
இதுவரை
நானாடி வந்திருக்கும்
வேடத்திற்கோ
சிறிதும் பொருத்தமில்லை

எதிர்க்க முயன்ற
என் முகத்தில்
ஓர் அடி விழுந்தது

வேடத்திற்குள்
இன்னொரு வேடத்தின்
அவசியம்
புரிந்தது போலிருந்தது

மறுகணம்
விலகிய கம்பிகள்
இறுக
சாத்திக் கொண்டன
சிறிதே
குற்றவுனர்ச்சியுடன்
பத்திரமாக நான்
மறுபடியும்
- 28 / 12 / 89

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer