Sunday, April 11, 2010

எங்கெங்கு காணினும்

அதுபோன்ற ஊர்வலங்களில்
கலந்து கொண்டு பழக்கமில்லை
என்று சொல்லியிருந்தும்
அழைத்து சென்றார் நண்பர்

பார்த்ததும்
வெளியே தினத்தந்தியோடு
போட்டிருந்த பெஞ்சு எழுந்து
கைகுலுக்கிய பழைய நண்பர்கள்
சேமநலம் விசாரித்து
டீக்குடிக்கும்போது
மாலை மூன்று மணி

போதிய கூட்டம் சேர்ந்தது
சைக்கிளுருட்டி
மெதுவே பேசி நடந்தோம்
'பழைய பாட்டுகள் தான் அருமை'
வாதிட்டார் அன்று பழக்கமானவர்
என்னோடு அணிசேர்ந்து
புதுபாட்டுக்கோ ஓரிருவர்

நடந்து கொண்டிருந்தோம்

வந்து சேர்ந்து விட்டோம்
ஏற்பாடுகள் முடிந்ததும்
எங்கிருந்தோ ஓர்
அழுகுரல் கேட்க
அமைதியாக
ஒருநிமிடம் நின்றோம்

- 14 / 01 /92

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer