Sunday, April 11, 2010

பாவத்தின் சம்பளம்

வடிக்கப்படாமல்
மடிந்து போகும்
கவிதைகளுக்காய்
இதயம்
இனிமையற்றுப் போன
இரவுகளில்
இரத்தம் சிந்துகிறது


மரணிப்பதற்கா வாழ்வு
முயற்சிகளும்
முயங்குதலும்
முகிழ்ச்சிகளும்
அர்த்தமறுமா

போற்றிக்காத்து
மயங்கிச் சுமந்து
குருதிச் சதைப்பிண்டமாய்
செத்து விழும்
குறைப் பிரசவமா

ஆமெனில்
இங்கு கலவி எதற்கு

இல்லாத பொருள் கூறாதீர்

விழிகளுக்காக
காத்துக் கிடக்கிற
காட்சிகளும்
வீழ்ச்சிகளுக்காக
உயர்ந்து கொண்டிருக்கிற
உன்னதங்களும்
அதிகமிங்கு


வாழ்வதற்குள் முடிந்துவிடும்
முடிவதற்குள் வாழ்ந்துவிடு

கைகளுக்கு
கத்திகளையும், கீதைகளையும்
தயக்கமின்றி
பழக்கிவிட்டேன்
இனி,
பயமின்றி இருக்கலாம்
இறக்கலாம்

- 29 /01 /92

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer