எச்சில் ஒழுகும்
கடைவாயோரம்
வெறிப்பார்வை
சதை புசிக்கும்போது
முலைகளும் தொடைகளும்
பட்சபாதமின்றி இரையாகும்
பிறன் மனை
பிறன் சொத்து
பிறன் பெருமை
உள்ளம் கொதித்து
கவிழ்த்து பிடுங்கி
தரை சாய்க்க
அணு பதறும்
என் உணர்ந்து
சுயம் தேடி
முகம் வரைந்து
முகம் கலைத்து
பணம் பெற்று
உடல் விற்று
கலையென பொய்பேசி
பெரியோர் பெரிகழ்ந்து
அவர் விற்று
உயிர் வளர்த்து
நம் பேரெழுத
ஆசை வரும்
அப்போந்தந்த
அந்தி வரும்
ஞானம் உணர்ந்து
ஊருக்கு பங்கிட்டு
தன்னைப் பிரித்து
பகடைகளுக்கு கொடுத்து
ஊனழித்து குருதிசிந்தி
முட்சுமந்து
காலம் சுமக்கும்
முடிவு நோக்கும்
துள்ளிக் குதித்து
தோள் தூக்கி
போரெடுத்து கடன்முடித்து
தலைகொய்து
சிரம் தாழ்த்தி
மண்டியிட்டு மானம் விற்று
மலம் தின்று
உயிர்மட்டும் சுமந்து
பிறவனைத்தும் இழந்து
வாழும்
எங்கே இதில்
என்னுயிர் என்னிருப்பு
என்னுடல்
வலி பொறுப்பேன்
துயரிழைப்பேன்
என்னுயிர் பொறுக்கும்வரை
எல்லாம் எறிந்துவிட்டு
உன் என் வக்ரங்களுக்காய்
நிர்வாணமாய் நிற்கையில்
இழந்துவிட
பெரிதாய் எதுவுமில்லையே
இந்த
உயிரைத் தவிர
- 17/05/90
Every life has cyclical crests and troughs - reversals are caused by paradigm shifts, keeping the otherwise sedate life interesting...
Monday, May 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
-
"Annai! Annai! Aadum Koothai Naada cheidhaai ennai!" These were the lines by Mahakavi Bharathi in his poem titled 'Oozhi ko...
-
The other day, I was searching for Aldous Huxley’s writings and chanced upon a century-old school of thought, propounded by Hermus Trismegis...
-
எ த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து... அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்...
No comments:
Post a Comment