Sunday, April 11, 2010

சிற்சிதைவுகள்

முகமற்ற சலனங்கள்
கருந்திரையில் பிம்பங்கள்
நேராய் தொங்கும்
வௌவால்
புகைபோக்கி வழியே
மனிதர்கள்
வான் முழுதும்
அசைகிற
ஒலியற்ற உதடுகள்
சிரிக்கும் போல் அழும்
அழும் போல் சிரிக்கும்

அந்தத்துக்குள்ளிருந்து
ஜீவசிசுவின் முனகல்கள்

தொட முடியாத
எரிச்சலூட்டுகிற மார்புகள்
படுத்தால்
இறந்து விடப் போகிற
பயங்கள்

முற்றுப்பெறாத
என்
அர்த்தச் சிதைவுகள்

- 15 / 10 / 93

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer