Monday, April 12, 2010

யாராம்

பாலாடையின் மேல்பரப்பு
மெல்லிய மிக
மெல்லிய காற்றில்
மிருதுவாய் சலசலப்பதை
கண்டும்

அரைக் கோவணத்தின்
சுதந்திரத்தோடு
தூண்டில் வீசி
வெயில் காயும்
சிறுவர்களை
ரசித்துக் கொண்டும்

இழப்பு எது
மீட்பு எது
என்றே தெரியாத
பாவனையோடும்
நான்


இழத்தல் ஏன் மீட்சியில்லை
மீட்பு ஏன் இழத்தலில்லை
எனும் இறுக்கம் கொள்கையில்
நிகழ்வின் தொடர்வில்
என் பங்கு ஏதுமில்லை
எனப் புரிந்தது

- 28/12/89

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer