Sunday, April 11, 2010

சாயம் போன

தூண்டுதல் சட்டமிட்ட
மனப் பலகை
இருளடித்து
அகோரங்களும்
அழகுகளும்
அற்புதங்களும்
உன்னதங்களும்
எழுத
உடனே அழிபடும்

அழித்தழித்து
வெளுத்துப் போய்
அழிகிற வலிகளுக்காய்
எழுதுவதும் இற்று
பலகை பயனற்றுப் போமோ?

புதுக்கருமை கூட்ட வேண்டும்
இருளே தனிமை
தனிமையே அழகு
அழிவற்ற அழகு

- 26 / 06 / 91

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...