Sunday, April 26, 2015

நானெழுதிய வெளிவராத திரைப்பாடல்

நீ நான் ஏன்
பொல்லாத  இன்பங்கள் கொண்டாடும்போது

ஆண்:

இவள் இதழ் அது சிந்தும் துளியில்
இதோ இதோ உன் காலடியில்
அவள் விரல் அது அசையும் திசையில்
உயிரே உயிரே போய் விடு போ

இவள் அங்கம் என் தேகம் தீண்ட
விலை விலையென உயிர் பிரிவேன்
அவள் மேலென் வாசம் விரவ
பாதங்கள் மேவிட உடல் விரிப்பேன்

சரணம் 1

வா என் வாசல் வந்து
நீ காத்திரு
என் என் தேவை தந்து
நீ வேர்த்திரு
நான் ஓர் வேகம் கொண்ட
தீ காட்டுத்தீ
ஆண் தேகம் அது எல்லாம்
நுனி புல் நுனி
நீ - என் பார்வை பட்டு
நீ - என் வாடை சுட்டு
நீ - என் பாதம் தொட்டு
வா ஒரு ராமனா





விடுமுறை விடுகதை

சனி ஞாயிறு காலைப் பொழுதுகள்
ஏன்
சனி ஞாயிறு காலைகளைப்
போலிருக்க வேண்டும்
வார நாட்களில்  எப்போதாவது
வரும்
விடுமுறைகளின் காலைகளைப்
போல் ஏன்
இருக்கக் கூடாது 

Pandit Venkatesh Kumar and Raag Hameer