நகராமல்
நின்று கொண்டிருக்கிறதோ?
ஆம்
காலம் அசைவற்று
இரைவிழுங்கி கிடக்கிறது
கால் தேடுகையில்
சிறகு முளைக்கும்
எத்தனங்கள்
கனவுகளின்
நாட்குறிப்புகள்
நிகழ்வுகளில் தானே
எழுதப்பட வேண்டும்
நான்
வென்றுவிட வேண்டும்
காலம் உறங்குகிறது
செஞ்சாந்து சுடர்
எழுமுன்
விழித்துக்கொள்ள வேண்டும்
- 15 /01 / 92
No comments:
Post a Comment