Showing posts with label Nostalgia. Show all posts
Showing posts with label Nostalgia. Show all posts

Wednesday, February 15, 2012

என் தாய்த் தமிழ் உணவு

திடீரென்று அம்மாவின் நினைப்பு வந்து விட்டது அன்றொரு நாள். உறங்காமல் படுத்திருந்தேன் அவளை நினைத்துக் கொண்டே. பழஞ்சேலை வாசத்தோடு எப்போதும் அவளைச் சுற்றி இருக்கும் சமையல் வாசம் வந்து சூழ்ந்து கொண்டது. சமையலில் பெரிய நிபுணி என்றெல்லாம் சொல்ல முடியாதென்றாலும் வகை வகையான சமையலில் கெட்டிக்காரி என்று தோன்றியது.

அப்படியே யோசித்துக்கொண்டிருந்தவன், நினைவிலேயே அம்மா சமைத்து நான், என் தம்பி, தங்கை அவரவர் திருமணம் வரை உண்டு வளர்ந்த உணவுகளை அடுக்க ஆரம்பித்தேன். அசந்து விட்டேன். கூட இருக்கும்போது எதன் அருமையும் தெரிவதில்லை.


நீண்டு கொண்டே போன பட்டியலில் ஒரு பகுதி இதோ:

காலை உணவு
இட்லி
தோசை
முட்டை தோசை
வெங்காய தோசை

உப்புமா
ரவா கஞ்சி
சேமியா கிச்சடி
இடியப்பம் - தேங்காய் பால்
ஆப்பம்
சப்பாத்தி
பூரி - உருளை கிழங்கு
கம்பங்கூழ்
வெந்தயக்களி
கேப்பைக்களி
உளுந்தங்கஞ்சி
பயத்தம்பருப்பு கஞ்சி
அவல் உப்புமா
அடை
குழாய்ப் புட்டு
கேப்பைப் புட்டு
சட்டினி - சுமார் 10 வகைகள்
பாசிப்பருப்பு சாம்பார்
எள்ளுப் பொடி

இட்லி மிளகாய் பொடி

மதிய உணவு
சாம்பார் - பல வகைகள்
புளிக்குழம்பு - பல வகைகள்
மிளகு ரசம்
வெந்தய ரசம்
பூண்டு ரசம்
வேப்பம்பூ ரசம்
பூண்டு குழம்பு
பருப்புருண்டைக் குழம்பு
மோர்க் குழம்பு
முட்டைக் குழம்பு
கழனிப் புளிச்சாறு

இதற்கு தொட்டுக்கொள்ள
வறுவல் வகைகள்
பொரியல் வகைகள்
அவியல் வகைகள்
கூட்டு வகைகள்
கீரை மசியல்
மாங்காய் பச்சடி
துவையல் - பல வகைகள்
ஊறுகாய்கள்
மாவடு
வத்தல் வகைகள்
வடகம்
மோர் மிளகாய்
உப்பு கண்டம்
அப்பளம்

அசைவம்
பிரியாணி - கோழி, ஆட்டிறைச்சி, வெஜிடபிள்
முட்டை வகைகள்
கோழி வகைகள்

ஆட்டிறைச்சி வகைகள்
நண்டு
மீன் - வறுவல், குழம்பு
இறால் - வறுவல், குழம்பு
சுறாப்புட்டு

குடிக்க
காபி
தேநீர்
பானகம்
மோர்
தயிர்
பால்
ஆட்டுக்கால் சூப் (உடல் நலமில்லை என்றால்)
இஞ்சிச் சாறு (எல்லா ஞாயிற்றுக் கிழமையும் காலை எழும்போதே அப்பா ஒரு கையில் தம்ப்லரையும் மறு கையில் சர்க்கரையையும் வைத்துக் கொண்டு, அழ அழ குடிக்க வைப்பார்)
நீராகாரம் (வெயிலில் சென்று விட்டு உள்ளே வந்தால்)
கிரிணிப்பழ சாறு
பருத்திப் பால்
சீம்பால்

வெளியூர் பயணம்/சுற்றுலாப் பயணங்கள்
புளியோதரை
எலுமிச்சைச் சாதம்
தேங்காய் சாதம்
தக்காளி சாதம்
வெஜிடபிள் சாதம்

மாலை சிற்றுண்டி/விடுமுறை சிற்றுண்டி
சோளம் - அவித்து, வாட்டி
வேர்க்கடலை - அவித்தும் வறுத்தும்
சுண்டல் - வகைகள்
தட்டாம்பயறு
சர்க்கரைவள்ளி கிழங்கு
மரவள்ளி கிழங்கு
கொள்ளு
எள்ளு
பயறு வகைகள்

தீபாவளி போன்ற விசேட நாட்கள் (முக்கியமாக கிருத்திகை விரதத்தின் போது)
வெள்ளைப் பணியாரம்
இனிப்புப் பணியாரம்
கொழுக்கட்டை - வகைகள்
மசால் வடை
உளுந்தம் வடை
பஜ்ஜி - வகைகள்
போண்டா
வாழைப்பூ வடை
கேசரி
 பாயசம் - வகைகள்
அதிரசம்
முறுக்கு
சீடை
மைசூர் பாகு
சோமாஸ்
எள்ளுருண்டை
ரவா லட்டு



எத்தனை உணவுகள், எத்தனை வகைகள்...

எத்தனை காய்கள், பழங்கள், கீரைகள், பருப்புகள், கிழங்குகள் உண்டோ, எவ்வெவற்றில் எல்லாம் நல்ல சத்தான சுவையான உணவு சமைக்க முடியுமா அவற்றிலெல்லாம் நம் தாய்மார்கள் சமைத்திருக்கிறார்கள் என்பது புலப்பட்டது. இவையனைத்தும் அப்பா கடையில் வாங்காமல், அம்மா வீட்டிலேயே சமைத்தவற்றின் தொகை.

எவ்வளவு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் நம்முடையது!

இன்று பற்பல கோளாறுகளுக்கு ஆளாகி மருத்துவரிடம் சென்றால், கிடைக்கும் அறிவுரை - நார்ச்சத்து மிகுந்த, இயற்கையான, கால பருவ நிலைக்கேற்ற, நீர் சதவிகிதம் அதிகமுள்ள உணவை ஒரு நாளைக்கு ஐந்து வேளை சாப்பிட வேண்டுமாம். இதைத்தான் நம் முந்தைய தலைமுறைத் தாய்மார்கள் நமக்கு தந்து வந்திருக்கிறார்கள் அல்லவா?


இந்த காலை உணவில் மட்டுமே இப்போது என் குடும்பத்தில் எத்தனை வகை பிழைத்திருக்கிறது என்று எண்ணிப் பார்த்து நொந்து விட்டேன். இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பூரி. மற்றவை வழக்கொழிந்து விட்டன.

நல்ல வேளை, தமிழகத்தில் இன்னும் இலட்சக்கணக்கான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இந்த அற்புத உணவு முறையை வழங்கி வருவார்கள் என்று என்னை நானே தேற்றிக் கொண்டு, தினப்படி செய்யும், அரைக்கப் ஓட்சில் கொஞ்சம் பாலை விட்டு சாப்பிட்டு விட்டு பணிக்கு கிளம்பினேன்.

Saturday, October 9, 2010

நானும் சில பாடல்களும் - 1


எல்லோருக்கும் திரைப்பாடல்கள் அவர்களது வாழ்வில் இயைந்திருக்கும் காலங்களை நினைவுகூர முடியுமாயிருக்கும். என்னைப் பொறுத்தவரை என் வாழ்வின் பல சுவையான கட்டங்கள், சில துன்பியல் நிகழ்வுகள் மற்றும் பருவ வளர்ச்சி பரிணாமம் அனைத்தும் தமிழ் திரை பாடல்களில் கலந்தே நகர்ந்திருப்பதை உணர்கிறேன்.
பல பாடல்கள் அறியாத வயதில் கேட்டவை. தொலைக்காட்சி இல்லாத காலம். வெறும் வானொலி மட்டும் வீட்டில். அடுத்து ரெகார்ட் ப்ளேயர் (ஜப்பானிய தயாரிப்பு - நல்ல ரத்த சிவப்பில் இருக்கும்) வந்தது. வானொலியோடு இணைந்தது. பல பாடல்கள் அதில் கேட்டது. அதே கால கட்டத்தில் நண்பர்கள் வீடுகளில் தொலைகாட்சி வர ஆரம்பித்து விட்டது. அங்கே சில பாடல்கள். மிக சிறு வயதில் திரை அரங்குகளில் பார்த்த பாடல்கள். கேசட் ப்ளேயர் வரவு அடுத்து. அவற்றில் பல வசதிகள், பல மாடல்கள். மறக்க முடியாத, வாழ்வின் பகுதியாகி இறுதிவரை வரப் போகிற ராஜாவின் பாடல்கள் எண்ணங்களுள் நுழைந்த காலம். இறுதியில் இப்போதிருக்கும் ஐ போன் வரை வந்து விட்டேன்.

இப்போது பகுத்து பார்க்கும் போது, இந்த பல தரப்பட்ட பாடல்கள், பற்பல ஊடகங்களின் மூலமாகவும், மிக பற்பல வயதுகளிலும், பல மனச் சூழ்நிலைகளிலும் என்னை வந்தடைந்திருக்கின்றன என்பதை உணர முடிகிறது. 

ஷங்கர் கணேஷ் தொடங்கி நான் மேதைகளாக கருதும் எம்.எஸ்.வீயும் ராஜாவும் ஆக்கிரமித்திருக்கும் இந்த பட்டியலில், ஜி.கே.வெங்கடேஷ், வீ.குமார், டி.ராஜேந்தர் என்று பல இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். பாடகர்களில், டி.எம்.எஸ், எஸ்.பி.பி, கே.ஜே. யேசுதாஸ்ஜெயச்சந்திரன் இவர்களினூடே மலேஷியா வாசுதேவன் என்னை மிகவும் பாதித்த, நினைவில் தங்கி விட்ட பல பாடல்களை பாடி இருப்பது (எனக்கே ஒரு வித ஆச்சர்யத்துடன்) காண்கிறேன். 

மிகச்சிறு வயது நினைவுகள் (மூன்று முதல் ஒன்பது வயது வரை) நிறைய எண்ணவோட்டங்கள் எனக்குள் பொதிந்த காலம். பாடல்களும் அவ்வாறே. பதின்ம வயதிலும், கல்லூரி மற்றும் காதல் கார்காலங்களிலும் மிகப் பல பாடல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை பல காரணிகளால் மெதுவே குறைந்து இப்போதிருக்கும் சிங்கப்பூருக்கு வந்து சேரும்போது ஒரு பாடலைக் கூட இந்தப் பட்டியலில் காண முடியவில்லை.

ஒரு விஷயம். ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர், பரத்வாஜ், ஜி.வி. பிரகாஷ் போன்ற பலரின் பல பாடல்கள் எனக்கு இப்போது பிடித்திருந்தாலும் அவை இந்த பட்டியலில் இல்லாததற்கு ஒரு காரணம் உண்டு. இது எனக்கு பிடித்த பாடல்களின் பட்டியல் அல்ல. (இவற்றுள், பல பாடல்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்குள் எவ்வித ரசனையை தூண்டாத பாடல்கள் ஒரு சிலவும், வெறுமனே நிகழ்வுகளின் தொடர்போடு கடந்து சென்ற பாடல்களும் உண்டு). இந்தப் பாடல்கள் எங்கேயோ, எப்போதோ கேட்டும், ஏதோ ஒரு வகையில் மனதின் உள்ளில் போய் உட்கார்ந்து கொண்டவற்றின்  தொகுப்பே.  
மற்றொரு விஷயம். பாடல்கள் திரைக்கோ அல்லது தொலைக்காட்சிக்கோ வந்த கால வரிசைக்கும் நானவற்றை முதன் முதல் கேட்ட காலத்திற்கும் சம்பந்தமில்லை. பாடல் வந்து ஐந்தாறு வருடம் கழித்து முதல் தடவை கேட்ட பாடல்களும் உண்டு, வாழ்வில் ஓரிரு தடவைகள் மட்டுமே கேட்ட பாடல்களும் உண்டு. 

இனி நானும் சில பாடல்களும்...

ராயபேட்டையில் குடியிருந்தார்கள் என் பெற்றோர். நான் மதுரையில் பிறந்து சென்னைக்கு என் அம்மா என்னைத் தூக்கிக் கொண்டு வந்த பிறகு இரு வேறு வீடுகளில் வசித்தோம். அவற்றிலொன்று ஐஸ் ஹௌஸ் அருகே முஸ்லிம்களும் தெருவின் கடைசியில் குயவர்களும் வசித்த ஒரு தெருவிலிருந்த வீடு. ஞாயிற்று கிழமை ஆனால் பானை செய்வோர் சூட்டம் போடுவார்கள். தெருவே நல்ல வெயில் காயும் அந்த நேரத்தில் வெண்ணிற புகை படர்ந்து கண்களையும் தொண்டையையும் எரிய வைக்கும். தணிந்து முடிந்த சாயங்காலங்களில், அந்த வெக்கை, காற்றில் சுற்றித் திரியத் தான் கூட்டாளிகளுடன் விளையாடுவது. வீட்டுக்கு எதிரே, வாசலில் பசு மாடு கட்டியிருக்கும், அந்த வீட்டினுள்ளே பல முஸ்லிம் குடும்பங்கள் குடியிருந்தன. அவர்களுக்கே உரித்தான நிறங்களில் உடைகள், வாசனைகள், உணவுகள்...

அந்தக் குடும்பத்திலொன்று பீடி சுற்றுவார்கள். இரவும் பகலும். முற்றத்தை ஒட்டி  இருக்கும் இருளடர்ந்த தூண்களில் ஆளுக்கொன்றாக சாய்ந்து கொண்டு, பக்கத்தில் வானொலியை வைத்து கொண்டு, முறத்தில் பீடி இலைகளையும், தூளையும், செந்நிற மெல்லிய நூலையும் கொண்டு கருமமே கண்ணாக பீடிகள் உருமாறும். வெளியே தெருவில் திருடன் போலீஸ் ஆடும்போது, மாநகராட்சி குழல் விளக்கின் ஒளியில் இருந்து தப்பிக்க அந்த வீட்டுக்குள் அடிக்கடி ஒளிவதுண்டு. மூன்று அல்லது நான்கு வயதிருக்கும் அந்த நேரத்தில் தான் அந்த பாடலை பீடிக்காரகளின் வானொலியில் கேட்டேன்.  
'என்னருகே நீயிருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்

அப்போது அதை பாடியது பி.பி.எஸ், சுசீலா என்றெல்லாம் தெரியாது. ஆனால் நினைவு தெரிந்து நினைவில் பதிந்த முதல் பாடல் என்ற பெருமை அந்த பாடலுக்கே உண்டு. முஸ்லிம் பின்னணி, இருள் சூழல், பாடல் ஆரம்பத்தில் வரும் பேஞ்சோ-வோ அல்லது புல் புல் தாரா - வோ, மிக இனிமையான மிக துரித கதி இசைக் கோர்வை - இவை தான் காரணமாக இருக்க வேண்டும்.  அந்த பாடலை எப்போது கேட்க நேர்ந்தாலும் வெக்கை சூழ்ந்த அந்த அந்திப் பொழுதும், அதனூடாக காற்றில் வந்த அந்த பாடலும், பீடி மணம் கமழும் இருண்ட வீடும் தெளிவாக என் மனக்கண்ணில்  காண முடிகிறது.

பைலட் திரையரங்கு அப்போது ஒரு வரப்பிரசாதம். நல்ல சிவாஜி படங்கள் அங்கு வெளியாகும். அப்பா அம்மா இருவரும் சிவாஜி ரசிகர்கள். எனவே பைலட்டுக்கோ கொஞ்சம் தள்ளி மவுண்ட் ரோடிலிருந்த சாந்திக்கோ மாதொருமுறை கணேசன் படத்திற்கு (அப்பா அப்படித்தான் உரிமையாக அழைப்பது) அழைத்து செல்வார். அதற்கு விதிவிலக்காக பைலட்டில் 'தீர்க்க சுமங்கலி' (முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்தது) படம் பார்க்கப் போனோம். அம்மாவுக்கு விஜயாவையும் அப்பாவுக்கு முத்துராமனையும் பிடிக்கும் என்பதை தவிர அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்த மற்றொரு காரணமும் நினைவில் இருக்கிறது. 'ஒரு அருமையான பாட்டு இருக்கு படத்தில'.
'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
என்று துவங்கும் வாணி ஜெயராம் பாடிய அந்த பாடலின் ஆரம்ப இசை எம்.எஸ்.வியின் மேதைமைக்கு ஒரு சான்று. பெண்ணின் அருகாமையும் மல்லிகை மலரின் மணமும் அறிந்தவர்கள் அந்த இசைக் கோர்வையின் இனிமையை நுகராமல்  இருக்க முடியாது.  குழல், வயலின் கூட்டமைப்பு, ரிதம் கிடாரின் 2x2நடை பின்னி மெதுவே தளர் நடை பயிலும் பாடல். அகண்ட திரையில் பாடல் படமாக்கப்பட்ட விதமும், அச்சிறு வயதில், ப்ராயிட் கூறுவது போல் ஏதோவொரு கிளர்ச்சியான பாலுணர்வை சுரக்கச் செய்திருக்க வேண்டும்.

 அங்கிருந்து சிறிது தொலைவில் இருந்த மற்றொரு வீட்டில் தான் என் பெற்றோர் நான் பிறப்பதற்கு முன் குடியிருந்தார்கள். பெரியம்மா என்று நான் அழைத்த ஒரு முதியவர் தான் குடும்பத்தலைவி. திருமணம் செய்து கொள்ளாதவர். அவரது தம்பியும் (அப்போதே ரயில்வேயில் இருந்து ரிடையராகி விட்டிருந்தார்), மற்றொரு விதவைத் தங்கையும் அவரது மூன்று மகன்கள், மற்றுமொரு மகளுமென பெரிய குடும்பமாக வசித்தார்கள். அந்த வீட்டிலிருந்த மற்றொரு போர்ஷனில் குடியிருந்து பிறகு வேறொரு வீடிற்கு சென்ற பிறகும் இரு குடும்பத்தின் நட்பு தொடர்ந்ததற்கு இரு காரணங்கள்: ஒன்று குழந்தையான நான், மற்றொன்று இன்னொரு குழந்தையான என் அம்மா (ஆம், என் அம்மா அப்போது படு வெகுளியாக இருந்ததாக சொல்லக் கேள்வி). 

சனியன்று என் தந்தை வேலைக்கு செல்லும் வழியில் என்னை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு செல்வார்; மறுபடியும் ஞாயிறு மாலை வந்து அழைத்து கொள்வார். அதுவரை சிறு பிள்ளை இல்லாத வீட்டில் நான் தான் ராஜா. அப்படிக் கொஞ்சுவார்கள் என்னை. எனக்கென்று ஒரு பெரிய சைஸ் மரத் தொட்டில் இருக்கும். அதற்குள் தின் பண்டங்களோடு ஏற்றி விட்டுவிட்டு பக்கத்தில் வீட்டின் ஆண்கள் சீட்டு விளையாடுவார்கள். ஞாயிறு மாலை நான்கு மணிக்கு யார் எங்கிருந்தாலும் வானொலியை சத்தமாக வைத்து விட்டு வேலைகள் நடக்கும். 'நேயர் விருப்பம்' - முழ நீளத்திற்கு விரும்பிக் கேட்டவர்கள் பெயர்களை வாசித்து விட்டு புதுப் பாடல்களை ஒரு மணி நேரம் ஒலிபரப்புவார்கள். 

மறக்க முடியாமல் பதிந்து போன சில பாடல்கள் அப்போது கேட்டவையே. கமல் ஹாசன் முதன் முதலில் பாடிய 'அந்தரங்கம்' பட, 'ஞாயிறு ஒளி மழையில்', எஸ்.பி.பி பாடிய 'உத்தமன்' பட 'படகு படகு ஆசைப் படகு' பாடல் வரிசையில் அபூர்வ ராகங்கள் பட பாடலான ' அதிசய ராகம் ஆனந்த ராகம்'.

ராஜாவும் சரி, விஸ்வநாதனும் சரி நல்ல மெட்டாக இருந்தால் வழக்கமான இரண்டு சரணங்களுக்கு பதிலாக மூன்று அல்லது நான்கு சரணங்கள் அமைப்பதை பார்த்திருப்பீர்கள். அதில்  அதிசய ராகம் ஆனந்த ராகம் உண்மையிலே ஒரு அபூர்வ பாடல். யேசுதாசின் கந்தர்வ குரலும், வயலின் இசைக் கோர்வைகளும், சரணத்துக்கு சரணம் மாறும் மெட்டும்... மைதிலி, மாதவி போன்ற அழகான பெயர்களை முதன் முதல் கேட்ட அனுபவமும் காரணமாக இருக்கலாம்.

படகு படகு ஆசைப் படகு - அப்போது கேட்ட மற்றொரு பாடல். மூன்று சரணங்களுடன், பாடலின் நடுவே, அரேபிய இசைப் பாணியில் எஸ். பி. பி. 'லைலா'  என்று இழுத்து ஏற்ற பாலைவன பின்னணி இசையுடன் படுவது ஒரு மாதிரி 'ஹான்டிங்' ஆக நினைவில் இருக்கிறது. பல மூடுகள் மாறும் அந்தப் பாட்டு எங்கும் கேட்க முடியாத அபூர்வம். 


Sunday, January 24, 2010

240 பீடா

பள்ளியில் படித்து கொண்டிருந்த பதின்ம பருவம். அப்போது என் மிக நெருங்கிய ஒரே தோழனின் பெயர் சுரேஷ். கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு அவன் வீட்டுக்கு முதல் நாளே சென்று விடுவேன்; இரண்டு நாட்கள் கழித்து தான் வீடு திரும்புவேன். அதே போல் அவனும், தீபாவளி, பொங்கலுக்கு எங்கள் வீட்டுக்கு வந்து விடுவான்.

அப்படி ஒரு தீபாவளி. வயது 15 அல்லது 16 இருக்கும் என நினைக்கிறேன். ஆளுக்கொரு சைக்கிள் இருந்தாலும், பல இடங்களுக்கு பேசியவாறே நடந்து செல்வதுதான் எனக்கும் அவனுக்கும் பிடித்திருந்தது. அயனாவரத்தில் இருந்த எங்கள் வீட்டில் இருந்து வாரக் கடைசியில் செல்லும் கன்னிமாரா நூலகமாகட்டும் அல்லது எப்போதாவது செல்லும் மெரீனா கடற்கரையாகட்டும், அப்படியே மெதுவாக பேசிக்கொண்டே நடையை போட்டு விடும் எங்கள் பழக்கம் எங்கள் வீட்டில் தெரிந்திருந்ததால், மதியம் அம்மா தந்த கறிச்சோறு சாப்பிட்டவுடன், "கெல்லீஸ் வரைக்கும் போயிட்டு வர்றோம்பா", என்று கிளம்பியதை யாரும் பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.


கைனேகாலஜியிளிருந்து கன் மேகிங் வரை பேசிக்கொண்டே கெல்லீஸ் வந்து அபிராமி திரைஅரங்கு வந்து சேர்ந்தோம். கூட்டத்தில் மிதந்து நுழைந்து, இந்தப் பக்கம் நாலு விளம்பர பலகைகள், அந்த பக்கம் நாலு என்று புதுப் படங்களுக்கு வைத்திருந்ததை வேடிக்கை பார்த்து கொண்டே படிகள் ஏறி உள்ளே சென்று, ஏதோ ஜேம்ஸ் பான்ட் படமும் அப்போது ஓடி கொண்டிருந்தது, ஸ்டில் பார்த்து விட்டு, மிதந்து மிதந்து சாலைக்கே வந்து விட்டோம்.

திரையரங்குக்கு எதிர் புறம் இருந்த கடைதொகுப்பின் ஓரம் ஒரு பான்பீடா கடை இருக்கும். கடை எல்லாம் இல்லை அது. குடை. குடையின் கீழ் ஒரு பெரிய சதுர பெட்டி; பேட்டியின் மேல் பற்பல நிறங்களில் டப்பாக்கள். அவை அடுக்கப்பட்டிருந்த அழுக்குப்படிந்த தாம்பாளத்தில் முரட்டு வெற்றிலைகள். அதே அள்வு முரட்டுத்தனமும் அழுக்கும் கொண்ட அவனிடம் தான் நானும் சுரேஷும், அபிராமிக்கோ அல்லது நாங்கள் வழமையாக புத்தகம் வாடகைக்கு பெறும் கந்தன் லென்டிங் லைப்ரரிக்கோ, வரும்போது ஸ்வீட் பீடா போடுவது.

கறிச்சோறு நெஞ்சை நிறைத்துகொண்டிருக்க, மிதப்போடு அவனிடம் சென்று, "ரெண்டு பீடா" என்றோம். அப்போதுதான் அவன் அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த அந்த கேள்வியை கேட்டான், "240 யா, 320 யா?" நானும் சுரேஷும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டோம். "என்னடா சொல்றே" என்றேன். "நீ என்ன சொல்றே' என்றான் அவன். ஒரு மிகச் சிறிய சிந்தனைக்கு பிறகு, "240 " என்றோம் கோரசாக. அதற்கு முன் வரை அந்த பீடாவை போட்டதில்லை. அதில் என்ன இருக்கும் என்றும் தெரியாது. ஹ, என்ன இருந்து விடப்போகிறது என்றுதான் சொன்னது. அப்போதும் அந்தப் பாவி கேட்டது ஞாபகம் இருக்கிறது, "இதுக்கு முன்னாடி போட்டிருக்கீங்க தான?' ஒரு கெத்தில் ஆமென்று விட்டோம்.




பின் மதிய வெயில். சாலையில் இருந்த கூட்டமெல்லாம் திரையரங்குக்குள் சென்று விட, அந்த தீபாவளி தெரு காலியாக இருந்தது. கையில் வாங்கியவுடன் அந்த பீடாவை வாயில் இடாமல், பேசிக்கொண்டே வீட்டை நோக்கி கிளம்பினோம். அப்போந்திருந்த உமா திரையரங்கு தாண்டி, கூவம் பாலம் தாண்டி மேடவாக்கம் நோக்கி இருந்கும் போது, ஆளரவமற்ற அந்த சாலையில், மிக அசால்டாக பீடாக்களை வாயில் போட்டோம்.

ஓரிரு நிமிடங்கள் சென்றிருக்கும். வழமையான ஸ்வீட் பீடா சுவைக்கும்போது எதையும் வெளியே உமிழ்வதில்லை. அதேபோல, வாயில் ஊறிய சாற்றினை கொஞ்சம் உள்ளே இறக்கியது தான் தெரியும். நின்ற இடத்திலேயே உலகம் தலை கீழாக சுற்றுவது போல் ஆடுகிறது. கால்களுக்கு கீழே தரையையே காணவில்லை; நெஞ்சை அடைக்கிறது; கண்கள் இருள்கிறது; ஒரே நொடியில் உயிர்பயம் வந்து விட்டது. 'சரவணா, தீபவளியோடு நீ காலி' என்று நெஞ்சை ஒரு கையால் பிடித்து கொண்டு, இன்னொரு கையால் நடைபாதையின் ஓரம் நிற்கும் சிமின்ட் தடுப்புகளை பற்றிக் கொண்டு, திரும்பி பார்த்தால், அங்கே நிலைமை இன்னும் மோசம். அதே சிமின்ட் தடுப்புகளை தலையால் முட்டு கொடுத்து கொண்டிருந்தான் சுரேஷ். என்னடா என்று கேட்பதற்குள் வாயில் மூக்கில் எல்லாம் வாந்தி. நிற்க வேறு முடியவில்ல இருவருக்கும். கிளாக் வொர்க் போல ஒரே நேரத்தில் பக்கத்தில் பக்கத்தில் நின்று கொண்டு கூட்டாக வாந்தி எடுத்து கொண்டிருந்தோம்.

அடிவயிற்றை சுருட்டி வெளியில் கொண்டு வந்து விடும் போலிருந்தது.
ஒரு நான்கைந்து தடவைகளுக்கு பிறகு மனிதபிறவியாக நின்று கொண்டு பேசுவதோ வாந்தி எடுப்பதோ இயலாத காரியமாகி, மெதுவாக அப்படி அப்படியே அவரவர் எடுத்த வாந்திகளுக்கு அருகிலேயே ஆளுக்கொரு திசையை பார்த்து கொண்டு, நடைப்பாதையிலேயே செட்டிலாகி விட்டோம். வாயில் வழிந்த எச்சிலை கூட துடைக்க திராணியில்லாமல், உள்மனது சிந்தனையின் வாயிலாக நம்மை தாக்கியது 240 பீடாதான் என்று கண்டுபிடித்தோம் (வெளிமனது முழுதும் சிந்திக்க முடியாமல் வாந்தி).

பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு மட்டுமல்ல, வேறெங்கும் போவதை நினைத்து பார்த்தாலே மீண்டும் ஒங்கரித்தது. ஆகவே இந்த முகங்களோடு வீட்டுக்கு இப்போது போக முயற்சிப்பதை விட, கொஞ்ச நேரம் சென்றால் தெளிந்து விடும், மீண்டும் நடந்து ஆசுவாசமாக போகலாம் என்று உட்கார்ந்திருந்தோம். இனி வெளியே வருவதற்கு குடலை தவிர வேறொன்றும் உள்ளே இல்லை என்றான பிறகு, வானம் மேலேயும் , பூமி கீழேயும் ஒருவாறு நிலைத்தது.

எழுந்து நின்றால், பயங்கரமாக ஆடியதை ஒருவர் தோள் மீது மற்றவர் கை போட்டுக் கொண்டு, ஒரு கூட்டு முயற்சியில் நகர்ந்து நகர்ந்து டீக்கடை ஒன்றிற்கு வந்து விட்டோம். 'என்ன தம்பிகளா, டீயா' என்று கேட்டவர்க்கு பதிலொன்றும் சொல்லாமல், ஆளுக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் முகர்ந்து முகத்தில் அடித்து கொண்டதை பார்த்ததும் புரிந்திருக்கும். ஒன்றும் பேசாமல் இரண்டு ஸ்ட்ராங் டீ போட்டு கொடுத்தார் அந்த நல்ல மனுஷன். குடித்து விட்டு டீக்கடையில் ஒரு மணிநேரம் உட்கார்ந்திருந்தோம் என்று மரியாதையாக சொல்வதை விட அவமரியாதையாக கிடந்தோம் என்று சொன்னாலும் தப்பில்லை.

இருட்டி விட்டது. ஆனால் தெளிந்து விட்டது. நாலு கிமீ தூரத்தை மூன்று மணிநேரம் நடந்து (உருண்டு என்றும் பாடம்) வீட்டுக்கு சென்று சேர்ந்தோம். நாங்களிருந்த கோலத்தை பார்த்து பதறிய அம்மாவை, அப்பா, என்ன புரிந்து கொண்டாரோ, 'விடு விடு, நடந்து களைப்பா வந்துருக்கானுங்க, கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடட்டும்' என்றார். என் அறைக்குள் சென்று இருவரும் விழுந்தது தான், நடுநிசியில் எழுந்து தான் அடுக்களையில் சாப்பாட்டுக்கு உருட்டினோம், மறக்க முடியாத அந்த தீபாவளியில்!

Sunday, September 13, 2009

The River Within – III

I endured that day to live and tell you the story. As I say this, I consider myself a privileged one to talk about the life, its pleasures, its learning and its end…well, not exactly the end but almost as close as it could get to that.

The rivers within and outside the human mind are always hard to resist. They flow within you, originating from your perceptions, evolve as they practice their art through you and end up, as they usually do, into a sea of consequences mired with wobbling fresh streams trickling out. If controlling them is out of lesser martyrs’ reach, I must admit that I rank among the top of them.

On many occasions, I have been consumed by rivers, both in their metaphysical and philosophical senses. However, the story I am to narrate was an absolute physical experience with a ferocious river, camouflaged only by a calm exterior. The experience could be termed ‘physical’, since it could have ended my worldly physical existence, in its entirety.

Six of us left from Chennai to Trichy, the fourth biggest town in Tamil Nadu, situated on the banks of River Kaveri. She starts her winding journey from Kodagu Hills, (Mercara), in Karnataka and flows through Tamil Nadu before draining herself into Bay of Bengal. When she reaches Musiri, a village in Trichy district, where my friend’s relatives had invited us for a gathering, she attains a very massive yet very deceivingly calm look.

I never imagined that Kaveri could look so flowing, carrying unfathomable quantities of water in those swirling currents of hers. My first reaction was one that of astonishment. Earlier encounters with Kaveri were very mild, I should say, as mild as meekly crossing over her majestic perennial waters every year during the summer vacations, which my father used to send us on, from Chennai to Madurai.

I am a person who grew up with River Cooum in Chennai, to which I am indebted since it had carried my refusals as well with other millions’ and River Vaigai in Madurai which seldom had flow in it, with an annual farcical irony of government releasing a trickling stream (!) of water to facilitate the grand festival of Lord Kallalaghar entering the river in his golden horse chariot. With such inspiring credentials and perceptions, I could not appreciate myself for the view which I was certainly unprepared for.

The small village road laid only with mud and dirt (or was it laid?) led to the bank of the mighty river from my friend’s huge bungalow. The late summer evening sun was bright and parching every leaf and living thing daring to resist its dominance, nonchalantly ushered us to the river.

The approach of stone steps was pleasant, as always to an impending thrill blended with beauty and danger. The shadowing canopy of banyan trees carelessly littered the steps with grayed dry leaves. The calm flowing river surface, though adorned with minute wavelets, conveyed somehow the depth it concealed.

It was revelry all over; all the six guys screeched, danced and sang loudly as there were no discernible souls in vicinity. The river spread out a breeze onto the shore tipped with coolness. I loved the sight of the river, the breeze, shading trees and the lonely steps leading into the water…

Inviting yet surreptitious…

The river was waiting for us and we splashed into the river. Guys who could swim went farther and me with another friend played around in the steps with water at chest high level, feeling the slippery steps often at the feet and hence comfort and assurance. The water was surprisingly swift and cold.

Our wisdom was limited in not noticing the colour of the river which was muddy brown, caused by an overnight downpour upstream. In a sudden moment, vividly etched in my memory to this day and will be till I breathe my last, I was swept off my feet, either by the slippery step or by the force of the current.

It was an eternity which had no coordinates, sense of direction…

Water, tinged with sunlight percolating in all possible directions, seemed pulling me away and away. Eyes, which were seeing blue sky and green trees awhile ago, were seeing water everywhere. The pressure of the water drained out the hearing capacity. I would never know whether my friends, up and above the water, in safety under the blue skies, had ever noticed my absence or my struggle inside the water.

I went up to the surface or that is what I thought I did, but again I was dragged in. I was gasping under the water and at that point, I realized that I am going to die, at this river, which has flown from time immemorial, which had seen thousands of lives lost on its banks in wars, thousands drowning and thousands more losing their lives to its flooded fury. I will be one among them, uncounted, unsung and unheard in millennia to come…

When my senses started dimming out and lungs aching for air, I felt that I was being dragged by my friends to the shore. I do not remember a thing, lying face down on the bank, except for the violent gasping for breath. I could recall the unbearable pain my lungs were experiencing in expanding and contracting to normalize my breathing…

I believe it took atleast another 5 minutes for my breathing to regularize. None of us knew anything like CPR, which could have eased my pain and anxiety.

We left after a while, not talking to each other, consoling hands slung over my shoulders, walking an empty walk.

Before we could turn the last curve on the mud road which could have obscured the river from our view, I just turned and took a glance of the Kaveri. It was just flowing.

Sunday, August 30, 2009

Bharath Engineering College's Light Music Troupe - 1986 -90

Passion of the small music team, we had formed in the second year of the institution itself (1986), flared up when we were sanctioned a complete set of music instruments - a drum set, a triple congos, tabla, keyboards, guitars etc. Principal Thiyagarajan sanctioned a princely sum of, I think, Rs. 15,000/-, which was indeed substantial then.

Roamed around and bought our instruments at Shruthi Musical, Madras Musicals, Burma Bazaar etc. The practice started at its earnest and Mechanical department's lab sheds - Materials Testing Lab and the fever pitch went up when the rookie team had won second prize in the light music competition in Madras Veterinary College's intercollege festival.

Apart from that the team had won prizes in MIT, Chromepet, Madras University and Stanley Medical College and particpated in as many as 10 competitions.

Following are the team members:

1. Mr. Suresh Bhaskar - Trainer and Co-ordinator, Lecturer - Electrical Engineering (The chain smoking Suresh Bhaskar is a good guitarist and vocalist too. His fervor for melody numbers and his skill in convincing us to take it up and train, I believe had our prizes)
2. Vanamaali - Percussions - Drums
3. I.B. Saravanan (Me) - Percussions - Triple Congos and Tabla
4. Samson - Rhythm guitar
5. Vinu Kuruvilla - Lead Guitar
6. Molly Chacko - Base Guitar
7. Prabhakar - Violin
8. Arun - Keyboards
9. Rajesh - Male Vocal
10. Bharathi - Female Vocal

Our main competition songs are the first five and the remaining are meant for our own colleges fests, gatherings and new year eves etc:

1. Raja Raja Cholan Naan – Rettaivaal Kuruvi
2. Ponmaanai Theduthe – Aduthaathu Albert
3. Mandram vantha thendralukku – mouna raagam
4. Rojappoo aadi vanthatho – agni natchatram
5. Singaara pennoruthi – oruvar vazhum aalayam
6. Naa maange sonaa chandhi – bobby
7. Vedhaalam vandhirukkudu – soorasamharam
8. Aadum neram idhudhan – soorasamharam
9. Kaadhal rajyam enadhu – mannavan vandhaanadi
10. Thaalattudhe vaanam – kadal meengal
11. Chella kiligalaam palliyilae – enga maama
12. Ennai theriyuma, naan sirithu – (old MGR song)
13. Jaane Jaan Thoondhuthaa Fir

Pandit Venkatesh Kumar and Raag Hameer