Saturday, April 17, 2010

சந்தர்ப்பம்

ஒவ்வொரு நாளும்
ரயில் நிலைய
பாலத்தின் படியேறுகையில்
பார்ப்பேன்
அந்தக் கிழவியை

மடிந்த மெலிந்த
கால்களின் முன்
என்றோ அவளுடல்
மீதிருந்த சாட்சியாய்
ஓர் அழுக்கு புடவை
விரித்திருக்க
எப்போதுமே
காலியாய் கிடக்கும்
அந்த தகரக்குவளையோடு
சூம்பிய கைகளில்
ஓரிரு சில்லறைக்காசுகள்

ஒவ்வொரு நாள்
படியேறும்போதும்
காசு போடணும் என்று
நினைப்பேன்
நேரமோ மனமோ
இருந்ததில்லை

இன்று
தீர்மானித்து
காசெடுத்து
போட்டு நிமிர்ந்தால்
விரித்த துண்டின் முன்
யாரோ

- 28/12/89

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer