ஒவ்வொரு நாளும்
ரயில் நிலைய
பாலத்தின் படியேறுகையில்
பார்ப்பேன்
அந்தக் கிழவியை
மடிந்த மெலிந்த
கால்களின் முன்
என்றோ அவளுடல்
மீதிருந்த சாட்சியாய்
ஓர் அழுக்கு புடவை
விரித்திருக்க
எப்போதுமே
காலியாய் கிடக்கும்
அந்த தகரக்குவளையோடு
சூம்பிய கைகளில்
ஓரிரு சில்லறைக்காசுகள்
ஒவ்வொரு நாள்
படியேறும்போதும்
காசு போடணும் என்று
நினைப்பேன்
நேரமோ மனமோ
இருந்ததில்லை
இன்று
தீர்மானித்து
காசெடுத்து
போட்டு நிமிர்ந்தால்
விரித்த துண்டின் முன்
யாரோ
- 28/12/89
Every life has cyclical crests and troughs - reversals are caused by paradigm shifts, keeping the otherwise sedate life interesting...
Saturday, April 17, 2010
வைபவம்
மேம்பாலம்
முழுக்க அலைமோதும்
கூட்டம்
வைகையின்
எப்போதுமே நீரற்ற
பரப்பில்
கள்ளழகர்
குதிரையிலிறங்கும்
வைபவம் காண
பக்கத்து கிராம
தகப்பனின் தோள்களில்
வந்து
பலூன் வாங்க
இறங்கி
திரளில் தொலைந்த
குழந்தையாய்
நான்
- 28/12/89
முழுக்க அலைமோதும்
கூட்டம்
வைகையின்
எப்போதுமே நீரற்ற
பரப்பில்
கள்ளழகர்
குதிரையிலிறங்கும்
வைபவம் காண
பக்கத்து கிராம
தகப்பனின் தோள்களில்
வந்து
பலூன் வாங்க
இறங்கி
திரளில் தொலைந்த
குழந்தையாய்
நான்
- 28/12/89
என்றாலும்
யாருக்காவது
புரிந்து விடுகிற
ஒரு கவிதையை
படைக்கிற துடிப்பு
எனக்குள்ளே
இன்னும்
என் சிதறல்களை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது
முற்றுப் பெறாத வாசகங்கள்
மோனங்கலையாத உறவுகள்
என
என் வெளிப்பாடுகள்
தொடர்ந்த போதும்
- 28/12/89
புரிந்து விடுகிற
ஒரு கவிதையை
படைக்கிற துடிப்பு
எனக்குள்ளே
இன்னும்
என் சிதறல்களை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது
முற்றுப் பெறாத வாசகங்கள்
மோனங்கலையாத உறவுகள்
என
என் வெளிப்பாடுகள்
தொடர்ந்த போதும்
- 28/12/89
Monday, April 12, 2010
யாராம்
பாலாடையின் மேல்பரப்பு
மெல்லிய மிக
மெல்லிய காற்றில்
மிருதுவாய் சலசலப்பதை
கண்டும்
அரைக் கோவணத்தின்
சுதந்திரத்தோடு
தூண்டில் வீசி
வெயில் காயும்
சிறுவர்களை
ரசித்துக் கொண்டும்
இழப்பு எது
மீட்பு எது
என்றே தெரியாத
பாவனையோடும்
நான்
இழத்தல் ஏன் மீட்சியில்லை
மீட்பு ஏன் இழத்தலில்லை
எனும் இறுக்கம் கொள்கையில்
நிகழ்வின் தொடர்வில்
என் பங்கு ஏதுமில்லை
எனப் புரிந்தது
- 28/12/89
மெல்லிய மிக
மெல்லிய காற்றில்
மிருதுவாய் சலசலப்பதை
கண்டும்
அரைக் கோவணத்தின்
சுதந்திரத்தோடு
தூண்டில் வீசி
வெயில் காயும்
சிறுவர்களை
ரசித்துக் கொண்டும்
இழப்பு எது
மீட்பு எது
என்றே தெரியாத
பாவனையோடும்
நான்
இழத்தல் ஏன் மீட்சியில்லை
மீட்பு ஏன் இழத்தலில்லை
எனும் இறுக்கம் கொள்கையில்
நிகழ்வின் தொடர்வில்
என் பங்கு ஏதுமில்லை
எனப் புரிந்தது
- 28/12/89
முகத்திரை
அகந்தைகளாலும்
அவமானங்களாலும்
அடைக்கப்பட்டிருந்த
கம்பிகளை விளக்கி
வெளியே பார்த்தேன்
ஒரு நாள்
எதிரே ஒரு நான்
மலைத்து பார்த்த
என்னை
எள்ளி நகையாடி
அவன் செய்த காரியங்கள்
இதுவரை
நானாடி வந்திருக்கும்
வேடத்திற்கோ
சிறிதும் பொருத்தமில்லை
எதிர்க்க முயன்ற
என் முகத்தில்
ஓர் அடி விழுந்தது
வேடத்திற்குள்
இன்னொரு வேடத்தின்
அவசியம்
புரிந்தது போலிருந்தது
மறுகணம்
விலகிய கம்பிகள்
இறுக
சாத்திக் கொண்டன
சிறிதே
குற்றவுனர்ச்சியுடன்
பத்திரமாக நான்
மறுபடியும்
- 28 / 12 / 89
அவமானங்களாலும்
அடைக்கப்பட்டிருந்த
கம்பிகளை விளக்கி
வெளியே பார்த்தேன்
ஒரு நாள்
எதிரே ஒரு நான்
மலைத்து பார்த்த
என்னை
எள்ளி நகையாடி
அவன் செய்த காரியங்கள்
இதுவரை
நானாடி வந்திருக்கும்
வேடத்திற்கோ
சிறிதும் பொருத்தமில்லை
எதிர்க்க முயன்ற
என் முகத்தில்
ஓர் அடி விழுந்தது
வேடத்திற்குள்
இன்னொரு வேடத்தின்
அவசியம்
புரிந்தது போலிருந்தது
மறுகணம்
விலகிய கம்பிகள்
இறுக
சாத்திக் கொண்டன
சிறிதே
குற்றவுனர்ச்சியுடன்
பத்திரமாக நான்
மறுபடியும்
- 28 / 12 / 89
அவள் நினைவுகள்
இருண்ட சந்துகளில்
குருடனாய்
கைத்தடியின் சத்தம் மட்டும்
அவ்வப்போது முனகுவதாய்
முன்னேயும் பின்னேயும்
ஆளின்றி
நடந்து போகும்
நானறியாது
இதோ
இச்சுவர்களிலும்
இழுத்து அடைக்கப்பட்ட கதவுகளிலும்
தரையிலும்
என்னைத் தொடர்ந்து வரும்
நிழலே
போய்விடு போ போய்விடு
என் பாதையே
நானறியாத போதில்
எங்கே நான்
சுமப்பது உன்னை
இருள் கவிந்த
கண்களுக்குள்
நிழல் துணை உணர்ந்து
புன்னகை மலரும்
கவனம் சிதறி
கண்ணீர் வர
விழும் வேளையில்
நீயொரு சுமை
போ போய்விடு
நிழலுமற்ற தனிமை
நான் மட்டுமே துணை
அடர்ந்த இரவுகளிலும்
என்னருகே இருக்க
நீ காட்டும்
விசுவாசம் கருதி
சில போதும்
விழத் தயாரில்லை
இந்த குருடனை
அந்தகாரத்தில் வாழவிடு
அதற்குள்
என்னை அரசாள விடு
நிஜன்தேடி நிழலணைக்க
ஆகாது
போ போய்விடு
- 26 / 10 /89
குருடனாய்
கைத்தடியின் சத்தம் மட்டும்
அவ்வப்போது முனகுவதாய்
முன்னேயும் பின்னேயும்
ஆளின்றி
நடந்து போகும்
நானறியாது
இதோ
இச்சுவர்களிலும்
இழுத்து அடைக்கப்பட்ட கதவுகளிலும்
தரையிலும்
என்னைத் தொடர்ந்து வரும்
நிழலே
போய்விடு போ போய்விடு
என் பாதையே
நானறியாத போதில்
எங்கே நான்
சுமப்பது உன்னை
இருள் கவிந்த
கண்களுக்குள்
நிழல் துணை உணர்ந்து
புன்னகை மலரும்
கவனம் சிதறி
கண்ணீர் வர
விழும் வேளையில்
நீயொரு சுமை
போ போய்விடு
நிழலுமற்ற தனிமை
நான் மட்டுமே துணை
அடர்ந்த இரவுகளிலும்
என்னருகே இருக்க
நீ காட்டும்
விசுவாசம் கருதி
சில போதும்
விழத் தயாரில்லை
இந்த குருடனை
அந்தகாரத்தில் வாழவிடு
அதற்குள்
என்னை அரசாள விடு
நிஜன்தேடி நிழலணைக்க
ஆகாது
போ போய்விடு
- 26 / 10 /89
Sunday, April 11, 2010
கரிய தேவதைகள்
துர் அதிர்ஷ்டத்தின்
அழகிய கறை படிந்த
என்
கரிய தேவதைகள்
நான் போகுமிடமெல்லாம்
தொட்டுவிடப்போவதாய்
பாவனையில்
தொடாமல் ஒரு சரசம்
சிக்கிக் கொள்வதாய்
நிகழ்வில்
சிக்காமல்
மகிழ்ந்து கொண்டு நான்
எனத்
தொடர்கிறது
கறைகளை
அர்த்தப்படுத்திக் கொள்ள
தெரிவதோடு
முடிந்துவிடவில்லையோ
என் தேவதைகளின்
தொடர்வுகளை
அலட்சியப்படுத்தும் வழியாய்
கறைகளை
கண்களாக்கிக் கொண்டேன்
இனியெல்லாம்
இனிய கருமை
தொடாமலே விடுபட்டுப் போகும்
அன்றி சிக்குண்டு மூச்சிறும்
- 11 / 10/ 93
அழகிய கறை படிந்த
என்
கரிய தேவதைகள்
நான் போகுமிடமெல்லாம்
தொட்டுவிடப்போவதாய்
பாவனையில்
தொடாமல் ஒரு சரசம்
சிக்கிக் கொள்வதாய்
நிகழ்வில்
சிக்காமல்
மகிழ்ந்து கொண்டு நான்
எனத்
தொடர்கிறது
கறைகளை
அர்த்தப்படுத்திக் கொள்ள
தெரிவதோடு
முடிந்துவிடவில்லையோ
என் தேவதைகளின்
தொடர்வுகளை
அலட்சியப்படுத்தும் வழியாய்
கறைகளை
கண்களாக்கிக் கொண்டேன்
இனியெல்லாம்
இனிய கருமை
தொடாமலே விடுபட்டுப் போகும்
அன்றி சிக்குண்டு மூச்சிறும்
- 11 / 10/ 93
Subscribe to:
Comments (Atom)
இருப்பு
இருப்பு ஆறறிவோடு ஒன்றிரண்டு சேர்ந்தால் என்ன குறை குறைந்தால் என்ன நிறை மலைக்காற்று வீசாத மாலைகளில் இதென்ன விசாரம் நடந்து நடந்து நடந...
-
The other day, I was searching for Aldous Huxley’s writings and chanced upon a century-old school of thought, propounded by Hermus Trismegis...
-
"Annai! Annai! Aadum Koothai Naada cheidhaai ennai!" These were the lines by Mahakavi Bharathi in his poem titled 'Oozhi ko...
-
ஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்திருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங...