என் கைகளுக்குள்
பலமுறை
கண்ணீர்க் கோடுகளை
ரேகைகளாய் வடித்துவிட்டு
பேச்சற்று
பகல்களிலும் ஒளியிழந்துபோன
என் கண்களை
செதுக்கிய
உன் கண்களைத் தேடி கொண்டிருக்கிறேன்
மன்னித்து விடு
தேடுவதை
நீ
விரும்பமாட்டாய்
என் அறிவேன்
வார்த்தைகளின்
வழியில் ஏதேனும்
விழுந்திருந்தால்
தயவு செய்து
எடுத்து வீசாதே
என் மேல்
சொற்களை
நீ அதிகம் செதுக்குகிறாய்
இதயங்கள்
நொறுங்கும் தன்மையான
என்னிடமுமிருக்கும்
வில்லும் கவசமும்
நினைவுக்கு வரும் அவ்வப்போது
ஆயினும்
நொறுங்கிப்போன இதயத்தின்
நினைவுகள்
என்னை
தொந்தரவு செய்கின்றன
கவனமின்றி
கவசத்தின்
விலாப் பகுதியை
உன் சொற்களுக்கு
பலி கொடுத்ததுண்டு
ஆனால்
நெற்றியை இலக்கெனக் கொண்ட
இந்த கணைக்கு
கண்களை பறிகொடுத்தது
என் கவனத்தின்
அனுமதியோடுதான்
பார்த்துக் கொள்
இந்தப் புண்களை
அவற்றில்
வழிகிற குருதியை
துடைத்திட
குறைப் பார்வையுடன்
தடுமாறுகிற
என் கையை
சொல்லி விடு,
அந்தக்
காரணத்தை மட்டும்
- 05/04/90
Every life has cyclical crests and troughs - reversals are caused by paradigm shifts, keeping the otherwise sedate life interesting...
Subscribe to:
Post Comments (Atom)
-
The other day, I was searching for Aldous Huxley’s writings and chanced upon a century-old school of thought, propounded by Hermus Trismegis...
-
"Annai! Annai! Aadum Koothai Naada cheidhaai ennai!" These were the lines by Mahakavi Bharathi in his poem titled 'Oozhi ko...
-
எ த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து... அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்...
1 comment:
In-depth search in human mind and remembrence is highly expressed in your poems. Well done
Post a Comment