Sunday, September 6, 2009

நாம்

கலைந்த படுக்கையில்
ஆழ்ந்துறங்கும் நீ

சன்னலோரம்
புலரும் இருள்

கண்ணாடியில் மேசைவிளக்கின்
மஞ்சள் பிம்பம்

உன் வெம்மையை
போர்த்தியபடி
இந்தக்கவிதை
எழுதும் நான்

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...