Monday, June 15, 2009

வழுவமைதி

தோஅள்முனைத் தொங்கல்
எனக் கவிஞன் சொல்லிய
என் கைகளைப் பார்த்தேன்
அசட்டையாக இருப்பின்
அடிக்கவும் செய்யும்
ஊர் கூடும் நேரம்
கண்ணில் நீர் சேர்க்க
அவையறியும்

வலது தோள்முனைத் தொங்கல் செய்வதை
இடது தோள் முனைத் தொங்கல்
அறியா வண்ணம் ஏற்பாடுகள் நடந்தன....

வடிவ உறுத்தல்கள்
தங்களுக்குள் அடித்து கொண்டன
என்னை விட்டுவிட்டு

1.00 am, 24/05/2001

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer