Sunday, October 16, 2011

கேள்வி(கள்)

ல்லா கேள்விகளுக்கும் 
விடையிறுக்கப்பட்டு விட்டது

கேட்பதற்கு யாரிடமும்
கேள்விகள் மீதம் இல்லை

கேள்விகளற்ற பதில்களை
சுமந்து திரிகிறார்கள்

மிச்சமிருந்த வினாக்களை
பிணங்களோடிட்டு
புதைக்கிறார்கள் 

எதிர்வரும் 
சுபிட்சத்தை கட்டியங்கூறி  
வார்த்தைகள் 

மூச்சிறுகும் விடையடர்ந்த 
வனங்களுள்
ஒற்றைக் கேள்விக்காக 
அனைவரும் தவமிருக்கிறார்கள்

கேட்பதெதுவென்றே அறியா சிலர்
எது கேட்பதென்றே அறியா சிலர்
விடையே கேள்வி என்றும்
கேள்வியே விடை என்றும் சிலர்

என்றோ வந்துவிடும்
ஒரு வினா
எப்படிக் காணும் 
பொருந்தும் ஒரு விடை  

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer