Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts

Sunday, September 6, 2009

காட்சி


solitary
Originally uploaded by totomai
உறக்கம் கலைந்த
இரவொன்றில்
நீயற்ற தனிமை
கடக்கும்
ஒவ்வொரு நொடியும்
நானிழந்த
உன் சுவாசம்
சாளரத்தின் வெளியே-
கொஞ்சம் கொஞ்சமாய்
ஒளிபெறும்
துயரக்காட்சி
அரங்கேறும் வெளி
அழைக்காத
கைபேசியும்
நானும்

உன் போல்


VALISES OUBLIEES
Originally uploaded by Boccacino
சினம் கொண்டிருக்கிறோம்
இருவரும்
வெவ்வேறு காரணங்களுக்காக
மடி சாய்ந்திருக்கும்
தலைகோதா
உன் விரல்களின்
கோபம் புரிகிறது
ஆனாலும்
தரையூன்றியிருக்கும்
உன் கைவளைகள்
ஏன் சிணுங்குகின்றன?

ஏற்பு


Tear!
Originally uploaded by ::: *TearS* :::
இழப்பொன்றை எண்ணி
மறுகுகிறாய்
அமைதியாய்
பார்த்திருக்கிறேன்
ஒற்றைவரி விசும்பலொன்று
உன் கன்னத்தில்
எழுதப் பெறுகிறது
துடைக்காமலும்
காத்திருக்கிறேன்
அதை
என்
உள்ளத்தில் ஏந்தவென்று

இயைவு



கைகோர்த்து நடக்கிறோம்
என் மன அழுத்தங்கள்
உனக்குள் பரிமாறிவிடாதபடி
தற்காத்து கொள்கிறேன்
விரல்களின் அதிர்வில்
கேட்கிறாய்
என்ன துன்பமென

Sunday, August 30, 2009

உன் துணையாய் நான்



ற்றொரு நாள் கழிந்தது
தனிமையில் நான் இன்னும்
எப்படி இது கூடும்
என்னுடன் நீ இல்லாத இத்தனிமை

நீ விடை பெறவுமில்லை

யாரேனும் இது ஏனென்று
கூறுங்கள்

நீ போகத்தான் வேண்டுமா
என்னுலகை குளிர்க்கடலில்
ஆழ்த்தி விட்டு

னியே அமர்ந்து
தினமும் என்னையே நான்
கேட்டு கொள்கிறேன்
எப்படி நேசம்
என் விரல்வழி நழுவியது

ஏதோ என் செவியில்
கூறும் சேதி
நீ தனித்து வாடவில்லை
உன்னுடன் நானிங்கு
எங்கோ வெகு தொலைவில் நீ
ஆயினும்
உன்னுடன் நானிங்கு

ஆயினும்
உன்னுடன் நானிங்கு
தூரங்கள் நம்மை பிரித்தாலும்
என் நினைவில்
நீ மட்டுமே

எனவே
நீ தனிமையில் வாடவில்லை
என்பதை நானறிவேன்

ன்று மற்றொரு இரவு

என்னை உன்னருகில்
வரவழைத்து
நேசத்துடன் அணைக்க வேண்டியதாய்
உன் கண்ணீர்க் குரலை
கேட்டதோர் உணர்வு

உன் வேண்டுதலை
மன்றாடலை நான் கேட்கிறேன்
என் தோள் தாங்கும்
உன் சுமைகள் அன்பே

ஆயினும்
முதலில் உன் கரத்தை
பற்றிக் கொள்ள
அனுமதி

தனியே அமர்ந்து
தினமும் என்னையே நான்
கேட்டு கொள்கிறேன்

எப்படி நேசம்
என் விரல்வழி நழுவியது

ன் நேசத்தை அறிவாய்
என நீ உணர்ந்தாலும்
போதும் அன்பே
உடன் உன்
அருகிருப்பேன்
உன்னுடனிருப்பேன்
(மைக்கேல் ஜாக்சனின் 'You Are Not Alone' என்ற பாடலின் மொழியாக்கம்...)

Sunday, June 29, 2008

indru


கனவுகள்
உதிர்ந்து கிடக்கும்
சாலையில்
உன் காலடி
புதையுறும்
பூக்களின்
இதழ் நிறங்கள்
உன் பாத சிவப்பை
ஒற்றாவா?
காற்றில்
மிதந்து திரியும்
மகரந்தம்
உன்
சுவாச நறுமணம்
பற்றாதா?
இழக்க பெறாமல்
கைமிஞ்சும்
யாசகனின்
காசுகள் போல்
இறுகி கிடக்கும்
அந்தரத்துக்குள்
இன்று
உடையும்
மகரக்கட்டு

Friday, February 15, 2008

As You Are!


Hello!

The steely resolve wrapped in those thin lips
The unhurting courage hid under the smile
Romanticism perfected through searching eyes
Search for truth ridden in nectory voice....

You may be unsung now.
You are born to win;
bred to conquire

Be as you are;
Thats how you could be.

Angum Ingum Paadhai Undu (You are on Crossroads)


Dear Love,


How are things there?

Eyes and ears have taken over from other senses;

Seeing and hearing you precedes
over other ways of realizing you;

Mails and chats are losing importance;
they carry less of you.

Not able to foresee the future -
when sense and touch will overtake eyes and ears

Then....
A picture painted with all senses
cherished through years,
over and over
in days and nights
in conscience and dreams
in joy and sorrow
in life and death

will be there for us.

Pandit Venkatesh Kumar and Raag Hameer