Sunday, January 17, 2010

இந்தக் கணம்

கொதிக்கும் தணல்
கடல் எழுந்து
வெண்ணிற உக்கிரம்
தருமந்த பகல்
விடும் மூச்சின்
ஆவி சூழ்ந்து
நாசி இறுக்கும்
நடந்து சலித்த
கால்கள் தேடும்
நிழலோ மஞ்சள்
மேனி எங்கும்
புதிதாய் முளைக்கும்
வியர்வை ஊற்றுகள்
நெற்றி மேடிறங்கி
புருவம் வழிந்து
கண்களில் கரைந்து
திரையிடும் பார்வை
மறையும் தருணம்
தோன்றி விடும்
அடுத்த அடி
விடுக்கும் மூச்சு
அல்ல என்
இறுதி மூச்சு
இருக்கலாம் ஒருவேளை
இருப்பினும் இருப்பினும்
தவழ்ந்தேனும் நகரும்
எனதிந்த அடி
ஒழுகியேனும் நழுவும்
விடுமிந்த மூச்சு

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer