முற்றுப்பெறாத ஓவியத்தில்
திறக்கப்பட்டுவிட்ட விழிகளால்
பகலிலும் இரவிலும்
பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறாள்
உறக்கத்திலும் உணரும்
பார்வையின் இறைஞ்சுதல் ஒன்றே
என் கர்த்தாவே
என்று வரும் என் நிறைவு
எந்த விலா எலும்புக்காக
என் காத்திருப்பு
Every life has cyclical crests and troughs - reversals are caused by paradigm shifts, keeping the otherwise sedate life interesting...
முற்றுப்பெறாத ஓவியத்தில்
திறக்கப்பட்டுவிட்ட விழிகளால்
பகலிலும் இரவிலும்
பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறாள்
உறக்கத்திலும் உணரும்
பார்வையின் இறைஞ்சுதல் ஒன்றே
என் கர்த்தாவே
என்று வரும் என் நிறைவு
எந்த விலா எலும்புக்காக
என் காத்திருப்பு
https://solvanam.com/2021/04/10/%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
நல்லூழ்
நாடி வந்தன
நல்லனவெல்லாம்
ஆசிரியனும் ஞானமும்
இரசனையும் நட்பும்
இசையும் நூல்களும்
பயணங்களும் அனுபவங்களும்
தேடிவந்தமைகின்றன
அறியாமலேதும்
கிடைக்கின்றபோதும்
அற்புதமாய் உன்னதமாய்
அமையப்பெறுவது
நல்லூழ் அன்றி
வேறென்ன?
வேறுரு
மிக மெல்லிய மென்தென்றலின்
கடந்துபோய்விடும்
ஒரு வருடலில் பொதிந்திருக்கிறது
கரைப்பதும்
கரைந்துகொள்ள இசைவதுமான
முடிவு
சலசலத்து விரையும் ஆற்றின் போக்கில்
ஓரிடம் சிக்குண்டு
மேனியுரு மாறும் கல்லின்
போக்கற்ற தீர்வில்
அமைந்திருக்கிறது
நகர்ந்து செல்வதும்
நிலைகொண்டு எதிர்நிற்பதற்குமான
தெளிவு
முகம்வருடி மெய்தீண்டி
காலடியில் அறுந்துவீழும்
மலரின்
அழகிய அநித்தியத்தில்
மறைந்திருக்கிறது
பயன்பெறுவதற்கும்
பயன்மட்டும் படுவதற்குமுண்டான
முரண்
மேன்மை
சிற்றலைகள் வந்துவந்து
கால்கள் அலப்ப
மேவிக்கிடக்கும் மணற்பரல்களில்
ஒரு சிப்பியைத் தேடி
மிகமெதுவே காதங்கள் கடக்கும்
இந்த வாழ்க்கை
ஏனோ விருப்பமாகவேயிருக்கிறது
தரையூரும் புழுவைத் தவிர்க்க
கால்களும் கைகளும் தேய
சைக்கிளினின்று தரைவிழுவதிலும்
தயக்கமொன்றுமில்லை
நுண்ணுணர்வுகள் மென்ரசனைகள்
எத்தனையிருப்பினும்
இங்கிருந்து எதையும்
எதிர்நோக்காதிருத்தல்
மேலான உணர்வு
மென்மையான ரசனை
என்னவென்பது
நியதிகளேதுமற்றதே போல் தோன்றும்
இந்தக் கானகத்தில்
பற்ற ஒரு நியமம் தேடியலைகிறேன்
எப்போதும் உடுத்து அலையும்
வெண்ணிற உடையில்
களிகூடி மிதந்து
காடே சொந்தம்போல்
இறங்கிவரும் பட்டுப்பூச்சிகள்
அவ்வப்போது தீற்றிச் செல்வதை
கறையெனக் கொள்வதா
வண்ணமா
உயிர்பற்றிக் கொண்டாடும்
இவ்வாழ்வில்
கால்கள் இடறியும்
கலைகள் பயின்றும்
கைகள் பிணைக்குற்றும்
மாண்பை தரிசித்தும்
இன்னும்
இன்னுமோர் தருணம்
என்றலைதல்
ஆட்டத்தின் ஓரங்கம் என்பதா
அதுவே ஆட்டமென்பதா
பற்றிலேதும் வரவின்றி
உதித்து விரைந்து
உதிரும் நாட்களுக்குள்
கணக்கேதுமின்றி
எதையும் பதியாமல்
தடமெதுவும் இல்லாமல்
மகிழ்வேதும் தாராமல்
துயரதுவும் கொள்ளாமல்
மறைந்து போவது
குறைவென்பதா அன்றி அதுவே
நிறைவென்பதா

வீதியெங்கும் வழியும்
உன்னதம்பொழியும் இசை
யாருமுணரா வித்வம்
விரல்களின் நர்த்தனம்
அரங்கம் ஒன்றிருந்தால்
கோடிகள் பெறும் படைப்பு
தெருமுனையில் தன்னந்தனியே
தவிப்பேதுமின்றி
தன்னிலை நினைப்பேதுமின்றி
வாசிப்பவனின் யாசகம்
யாதாக இருக்கக்கூடும்
கடந்தவர் நின்றவர்
விரைந்தவர் இரந்தவர்
யாவரும் யாரவன்
என்றறியாதவரே
ஏந்திய குவளையில்
சிந்திய இக்காசுகள்
இழந்துபோன நுண்ணுணர்வுகள்
வீழ்ந்துபோன அறிதல்
வணிகமே வாழ்வென்றாதல்
காண்பதெதுவும் புதிதல்ல
யாரும் மாறிவிடவோ
மாற முயற்சிக்கவோ
ஒன்றுமில்லை
பதற வேண்டாம்
இருண்ட கண்டத்திலிருந்து
கிளம்பிப் பரவிய
காலங்களிலிருந்து
இப்படித்தான் இருந்திருக்கிறது
ஓரங்கள் வெடிப்புற
அடிப்பாதம் தேயத்தேய
நடந்து கடந்த
மலைகளும் நதிகளும்
வனங்களும் பாலைகளும்
எதையும் எப்போதும்
மாற்றி விடவில்லை
இணைப்பதை விட
பிரிப்பது எளிது
ஆக்குவதை விட
அழிப்பது
எளிய வழிகள்
எல்லாருக்குமானவை
எனவே என்றுமுள்ளவை
உங்கள் வழியை
இன்றே தேர்ந்தெடுங்கள்
அவ்வப்போது எழும்
அவ்வரிய குரல்களைக்
கேட்டு பதற வேண்டாம்
நம் வழி
மனிதத்தின் வழி
***
சொல்வனம் மின்னிதழில் வெளிவந்திருக்கும் மூன்று கவிதைகள்
https://solvanam.com/2020/11/08/%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/
இருபுற சாலையின்
ஒருபுற பாதையில்ஏன் உன்னை
இன்னும் யாரும்
அடித்துக் கொல்லவில்லை
என்று கொலைவெறியோடு கேட்கிறார்கள்
ஏன் இல்லை
இதோ என் முன்
கையில் பல கவிதைகளுடன்
வார்த்தை விளையாட்டுகளுடன்
இணையமும்
சிற்றிலக்கிய சாகசமும்
இருக்கிறது
தூக்குக் கயிற்றின்முன் நிற்கும்
மரணதண்டனைக் கைதியைப்போல்
அவற்றின்முன் நிற்கிறேன்
அவற்றின்
அறிவார்ந்த முதல் தொடுகையில்
உடலெங்கும்
அருவருப்பிலும் கூச்சத்திலும்
புல்லரித்து நடுங்குகிறது
ஒரே கணத்தில்
நடுக்கம் மறைந்து
நானும் அவற்றின் ஒரு பகுதியாக
கவிதையெழுதத் துவங்குகிறேன்
நான் எப்போதும்
முழு முட்டாள்தனத்துடன்
எதையும் எழுதுவதிலிருந்து
இத்தனைக் காலம்
தப்பித்து வந்துகொண்டிருந்தவன்
ஆயினும்
அள்ளிப்பூசும் அசூயை
என்னை மேலும் மோசமாக
எழுதத் தூண்டுகிறது
செய்வதறியாது
கவிதை என்றறிந்ததை செய்யாது
உறைந்துபோய்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
எவ்வளவு முயற்சித்தும்
அடித்து ஊற்றிக்கொண்டேயிருக்கும்
இத்தகைய கவிதைகளிலிருந்து
சட்டென்று
தப்பித்து விட முடிவதில்லை
கவிதை என்பது
கவிதை மட்டுமல்ல
புலன்களை உறைந்துபோகச் செய்யும்
வல்லமை கொண்ட
வன்முறையும் கூட
எழுதியும் அறிந்தும்
ஏற்றிக்கொண்டிருக்கும்
உன்னதங்களை
உருவியெடுத்து
வெளியில் வீசும்
வேலையையும்
கவிதை செய்கிறது
இலக்கிய வன்முறையின்
மிகப்பழைய படிமம்
யாவரும் எதுவும் தெரியாத
இரசனை அறிவிலிகள்
என்றெண்ணி
கவிதையெழுதுதல்
என்பதை இன்று
உணரவைத்த
கவிதை போல்
வேறேதேனும் உண்டா?
அள்ளிக்குடித்த காடியைப்போல்
அப்பட்டமான கவிதை
வாயெங்கும் கசந்து
உடலெங்கும் பரவுகிறது
படித்துமுடித்தபிறகும்
நினைவில் சிந்திச்சிதறும்
கவிதை வரிகள் வார்த்தை விளையாட்டுகள்
பற்பல நாட்கள்
புன்னகையும் வேதனையையும்
ஒருசேர விளைவித்துக்கொண்டிருக்கின்றன
ஒரு கவிதை
ஒரே கவிதை
இருந்தால் போதும்
ஈராயிர வருடங்களை
அற்றுப் போகச் செய்துவிடலாம்
மேலும் கவிதை
எவ்வித
எதிர்பார்ப்பும் இல்லாதது
சுயகட்டுப்பாடோ
அவைநாணமோ
என்றுமில்லாத அதற்கு
எப்போது நிறுத்திக்கொள்ள
வேண்டுமென்றும் தெரிவதில்லை
அந்தக் கவிதையின் பாதிப்பில்
நீங்களும் கவிதையெழுதினால்
அந்தக் கவிதையை ஏற்றுக்கொள்ளும்
அனைவரும்
உங்கள் கவிதையை
ஏற்க வேண்டுமென்பதில்லை
ஏனென்றால் அது அந்தக் கவிதை
இருப்பு ஆறறிவோடு ஒன்றிரண்டு சேர்ந்தால் என்ன குறை குறைந்தால் என்ன நிறை மலைக்காற்று வீசாத மாலைகளில் இதென்ன விசாரம் நடந்து நடந்து நடந...