Friday, April 7, 2023

ஓவிய முழுமை

முற்றுப்பெறாத ஓவியத்தில் 

திறக்கப்பட்டுவிட்ட விழிகளால் 

பகலிலும் இரவிலும் 

பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறாள் 

உறக்கத்திலும் உணரும் 

பார்வையின் இறைஞ்சுதல் ஒன்றே 

என் கர்த்தாவே 

என்று வரும் என் நிறைவு 

எந்த விலா எலும்புக்காக 

என் காத்திருப்பு 

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...