Thursday, January 10, 2019

தொலைவில் வழியும் இசை


அலுவலகம் செல்லும்
அவசரத்தில் அனைவரும்
தத்தம் பேசியில் புத்தகத்தில் உரையாடலில்
அமர்ந்திருந்த எனக்கெதிரே
தலைநிமிர்ந்து அமர்ந்திருந்தாள்
மறுமுறை நோக்க வைக்கும் முகம்
ஏதோவோர் எண்ணம்
ஏதோவொரு நாடகம்
எங்கோ நோக்கிய
தளும்பிய விழிகள்
கணப்போதும் இமைக்காமல்
பார்வையேதும் அசையாமல்
தன்னிச்சையாக மேலெழும்பும் கை
யாருமறியாமல்
நீரூறும் நாசியைத் துடைக்கும்
சிறிதே விரிந்த உதடுகளிலும்
உறைந்த சலனம்
யாருமே அவளைப் பார்க்கவில்லை
அவளைத் தவிர யாரையுமே நான் பார்க்கவில்லை
இருக்கையைவிட்டு எழாமல்
வெறித்து எதுவும் பார்த்துவிடாமல்
வழியப்போகிற அந்தத் துளிகள்
ஏன் என் தோள் வீழக்கூடாது

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...