Wednesday, June 1, 2016

நிறப்பிரிகை: நான்கு - துய்யம்

இறையின் முன் 
கரைந்தொழுகும் கண்ணீர் 
 
இரவும் விடியலும் 
இல்லாதோரின் 
எதிர்நோக்கல் 
எளிமையின் திறப்பு
சாதனையின் உச்சம் 

எதுவும் அறியாத 
எதுவும் நிறையாத 
எதுவாகவும் இல்லாத 
எதுவாகவும் உருமாறும்  
உன்னதம் 
துய்யம் 

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...