Thursday, March 17, 2016

அனைத்தும் உடலில் ஆரம்பித்து உடலில் முடிந்து விடுகிறது

யாரும் சீண்டாத, முதுமை குடியேறி, காலத்தால் நரை கண்டு விட்ட ஒரு ரயில் நிலையம்; 

துணை யார், நாள் பொழுது எப்படிக் கழியும், அதன் இருப்பில் வரும் போகும் வரும் போகும் வெயிலும், பனியும், கோடையும், கொடும் மழையும் ஆயினும், எவ்வித சலனமுமில்லாமல் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் அதன்  வெளியுருவை எங்ஙனம் காட்சிப்படுத்துவது என எண்ணினேன்.

நடைமேடையும், நிறம் மங்கிய சருகுக் கூட்டமும், வரியோடிய விலா எலும்புகள் தெரியும் கட்டிடமும் துலங்கி கவிதை நகர்ந்தது. 

கிளர்ச்சி தரும் வருகை; அது தரும் குற்றவுணர்ச்சி என்ற படிமங்கள் தோன்றி அமைந்ததும், மற்ற வரிகள் அடுத்தடுத்து அமைந்து கொண்டன. 

ரயிலின் சலிப்பிலும், நிலையத்தின் குற்றவுணர்வு சூழ்ந்த கிளர்ச்சியிலும், அதை நினைத்துத் தனித்திருக்கும் இரவுகளிலும் - ஒரு முதிய மனித வாழ்வின் பொருந்தாக் காமத்தையும், அந்திமத்தை நோக்கி நகரும் ஒரு வழிப் பயணத்திலும் பகிரும் சகம் தேடும் இயல்பையும் காண்பதாய்த் தோன்றியது.

அனைத்தும் உடலில் ஆரம்பித்து உடலில் முடிந்து விடுகிறது  என்றொரு வரியும் இறுதியில் தோன்றியது.

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer