Sunday, December 13, 2015

கால்கள்

மழைக்கால நடைபாதைகளில்
கவனியாது விரையும்
மாபலிக் கால்களினூடே
கூன்சுமந்து ஊரும்
நத்தைகளை
பதைபதைத்து நோக்குகிறேன்

அறியாது அவை
மாபலிக்கும்
காத்திருக்கும்
பிறிதொரு வாமனக் கால்கள் 

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...