Sunday, December 12, 2010

இறந்த ஒளியோடு

ஒளி

பிரபஞ்சத்தை
உய்விக்கின்ற ஒளி
விண்ணிலிருந்து
வெள்ளமாய் காற்றாய்
துகளாய் நுரையாய்
நுரைத்து வழிந்து
மூச்சுத் திணற
ஆக்கிரமிக்கிற ஒளி
சிகப்பாய் நீளமாய்
பச்சையாய் மஞ்சளாய்
நிறம்பிரிகிற ஒளி

எப்படியிருக்கும்?

தாயின் முகமும்
தாய்மொழி வரியும்
எப்படியிருக்கும்?

இருள்
எங்கும் கருமை
அதுவொன்றே நிரந்தரம்
ஒலியாலே
வாழப் பழகினோம்
இரவிற்கூட
கனவற்ற மலட்டு
நித்திரைகள்

கருவறையின்
இளஞ்சூட்டில்
தாயின் கனவோடு
கண்மூடி
இருள்விட்டுப் பிறந்து
இருளோடு வாழ்வோம்

அந்திம இருட்டையும்
சுவைபிரித்து
புதைகுழியின் இருளடங்கி
ஒளியோடு கலந்து மறைவோம்

ஒளி
அது எப்படியிருக்கும்?
- 11/08/90

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer