உயிர்களை உறிஞ்சிக்
கொண்டே
காற்றாடும் தாவரம்
தோலும் சதையுமற்ற
உடலங்கள்
உலவும் இடுகாடு
கெட்டிப்பட்ட அடுக்குகளில்
நேசமும் காதலும்
புதைந்திறுகும்
மணல் மேடு
நாளிலும் இரவிலும்
எண்ணிறந்த நிறங்களுடன்
உறவுகள்
புசிக்கும் பச்சோந்தி
உயிர்ப்பை மறந்த கருக்கூடு
ஆண்மை இறந்த சதைநீட்டம்
சிறகுடன் சேர்த்து
சுதந்திரமிழந்த
ஆயிரம் பறவைகள்
அடையுமொரு வீடு
Every life has cyclical crests and troughs - reversals are caused by paradigm shifts, keeping the otherwise sedate life interesting...
Friday, March 5, 2010
Monday, March 1, 2010
யன்னல்
கழுத்தின் பின்புறம்
தோல்
பின் சதை
நரம்புக் கூட்டம்
குருதிக் குழாய்கள்
மூச்சுக் குழல்
பின் சதை
தோல்
முடிந்தது
வெட்டுப்பட்டு தனியே
விழுந்தும் தலை
துடிக்கும் சிறிது நேரம்
மிச்சமிருக்கும்
உணர்வுத்துணுக்குகளின்
தன்னிச்சைத் தாண்டவம்
பாய்ந்து ஒழுகி
வெட்டுமேடை நனைக்கும்
என் குருதிக் கறை
எங்கும் படிவது
குறித்த கவலை
எனக்கில்லை
எப்போது
நிகழும் இது
அரசியல் கைதி
அறம் வெறுத்தவனை விடவும்
அபாயமானவன்
என் தனிமைச் சிறையில்
உயர்ந்து சூழ்ந்த
நான்கு சுவர்களிலொன்றின்
உச்சியில் இருந்தது
சதுரச் சன்னல்
உலகம் என்னை பார்க்கவில்லை
நான் அதை பார்த்துக்கொண்டிருந்தேன்
இரவன்று தனிமை
தோன்றும்
வளரும்
முழுமை பெறும்
தேயும்
மறையும்
என
தினமொரு உறவு
இரவொரு உயிர்ப்பு
எப்பொழுது வரும்
எனதழைப்பு
நொடியின் நூற்றில்
ஒரு பங்கில்
முடிந்து விடும்
என்றாலும்
ஒவ்வொரு நொடியும்
அதை மட்டுமே
எண்ணத்தில் சேமித்து
பற்பல கோணங்களில்
மெய்விதிர்க்க
இமையாது
நாடகமென நானே
நின்று
பார்க்கிறேன்
வந்துவிட்டது
ஆணை
ஆட்சிமாறிய
அரசியல் சதுரங்கத்தில்
கொலைக்கள மேடை
மறைந்துவிட்டது
பகலையும் இரவையும்
சேர்த்து சுகிக்கும்படி
கதவுகள் திறந்துவிட்டன
கருவியைத் தாண்டி
நடக்கிறேன்
எதிர்பார்ப்பில்
ஏதோ குறைந்த
ஏமாற்றம் ஊடாட
(Written in the influence of 'The Wall' by Jean Paul Sartre)
தோல்
பின் சதை
நரம்புக் கூட்டம்
குருதிக் குழாய்கள்
மூச்சுக் குழல்
பின் சதை
தோல்
முடிந்தது
வெட்டுப்பட்டு தனியே
விழுந்தும் தலை
துடிக்கும் சிறிது நேரம்
மிச்சமிருக்கும்
உணர்வுத்துணுக்குகளின்
தன்னிச்சைத் தாண்டவம்
பாய்ந்து ஒழுகி
வெட்டுமேடை நனைக்கும்
என் குருதிக் கறை
எங்கும் படிவது
குறித்த கவலை
எனக்கில்லை
எப்போது
நிகழும் இது
அரசியல் கைதி
அறம் வெறுத்தவனை விடவும்
அபாயமானவன்
என் தனிமைச் சிறையில்
உயர்ந்து சூழ்ந்த
நான்கு சுவர்களிலொன்றின்
உச்சியில் இருந்தது
சதுரச் சன்னல்
உலகம் என்னை பார்க்கவில்லை
நான் அதை பார்த்துக்கொண்டிருந்தேன்
இரவன்று தனிமை
தோன்றும்
வளரும்
முழுமை பெறும்
தேயும்
மறையும்
என
தினமொரு உறவு
இரவொரு உயிர்ப்பு
எப்பொழுது வரும்
எனதழைப்பு
நொடியின் நூற்றில்
ஒரு பங்கில்
முடிந்து விடும்
என்றாலும்
ஒவ்வொரு நொடியும்
அதை மட்டுமே
எண்ணத்தில் சேமித்து
பற்பல கோணங்களில்
மெய்விதிர்க்க
இமையாது
நாடகமென நானே
நின்று
பார்க்கிறேன்
வந்துவிட்டது
ஆணை
ஆட்சிமாறிய
அரசியல் சதுரங்கத்தில்
கொலைக்கள மேடை
மறைந்துவிட்டது
பகலையும் இரவையும்
சேர்த்து சுகிக்கும்படி
கதவுகள் திறந்துவிட்டன
கருவியைத் தாண்டி
நடக்கிறேன்
எதிர்பார்ப்பில்
ஏதோ குறைந்த
ஏமாற்றம் ஊடாட
(Written in the influence of 'The Wall' by Jean Paul Sartre)
Subscribe to:
Posts (Atom)
-
"Annai! Annai! Aadum Koothai Naada cheidhaai ennai!" These were the lines by Mahakavi Bharathi in his poem titled 'Oozhi ko...
-
The other day, I was searching for Aldous Huxley’s writings and chanced upon a century-old school of thought, propounded by Hermus Trismegis...
-
எ த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து... அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்...