Every life has cyclical crests and troughs - reversals are caused by paradigm shifts, keeping the otherwise sedate life interesting...
Sunday, September 1, 2019
Monday, August 19, 2019
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - காத்திருத்தல்
காத்திருத்தல்
சுருக்கங்கள் நிறைந்த கரங்கள்
வித்வம் நிறைந்தவை
புகைத்துக் கொண்டிருக்கின்றன
காலை நடைபயிலும் கால்கள்
சந்தைவந்த சிறார்
முகர்ந்தலையும் குட்டிநாய்கள்
நடுவே இரு நாற்காலிகளில்
ஒன்றில் அக்கரங்களின் தலைவன்
இன்னொன்றில்
நசுங்கிய ஆயினும் அழகிய குவளை
அருகில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது
வாழ்வைப்போல் அதிர்வுதளர்ந்த
தந்திகள் துவளினும்
எதை வேண்டுமென்றாலும்
இசைக்கக் காத்திருக்கும்
கிதார்
வித்வம் நிறைந்தவை
புகைத்துக் கொண்டிருக்கின்றன
காலை நடைபயிலும் கால்கள்
சந்தைவந்த சிறார்
முகர்ந்தலையும் குட்டிநாய்கள்
நடுவே இரு நாற்காலிகளில்
ஒன்றில் அக்கரங்களின் தலைவன்
இன்னொன்றில்
நசுங்கிய ஆயினும் அழகிய குவளை
அருகில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது
வாழ்வைப்போல் அதிர்வுதளர்ந்த
தந்திகள் துவளினும்
எதை வேண்டுமென்றாலும்
இசைக்கக் காத்திருக்கும்
கிதார்
Monday, June 10, 2019
சோஷல் மீடியாவும் சில மரணங்களும்
இறந்துவிட்டதாக முற்றாக
அறியப்பட்ட நண்பனொருவனின்
முகநூல் பக்கம் சிலநாட்களில்
உயிர்தெழுந்தது
விவாதங்கள் நிலைச்செய்திகள்
வாழ்த்துக்கள்
அனைத்தையும் வியப்புடன்
பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு
அவனது இறந்ததின
கண்ணீர் அஞ்சலி தோன்றி
சகிக்க முடியாமலாகியபோது
கண்டுபிடித்தோம்
அவன் மனைவி
அவன் நினைவில்
முகநூலில் எங்களுடன் பேசியது
முகநூல் பக்கம் சிலநாட்களில்
உயிர்தெழுந்தது
விவாதங்கள் நிலைச்செய்திகள்
வாழ்த்துக்கள்
அனைத்தையும் வியப்புடன்
பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு
அவனது இறந்ததின
கண்ணீர் அஞ்சலி தோன்றி
சகிக்க முடியாமலாகியபோது
கண்டுபிடித்தோம்
அவன் மனைவி
அவன் நினைவில்
முகநூலில் எங்களுடன் பேசியது
பள்ளிக்கூட நண்பர்களின்
வாட்ஸப் குழுவில்
நண்பனொருவனின் எண்ணிலிருந்து
நள்ளிரவில் செய்தி
இன்னாரின் மகன் எழுதுகிறேன்
அப்பா இறந்து விட்டாரென
ப்ரொபைல் படத்துடன்
அவன் மரண செய்தி
வாட்ஸப் குழுவில்
நண்பனொருவனின் எண்ணிலிருந்து
நள்ளிரவில் செய்தி
இன்னாரின் மகன் எழுதுகிறேன்
அப்பா இறந்து விட்டாரென
ப்ரொபைல் படத்துடன்
அவன் மரண செய்தி
எப்படி எதிர்கொள்வது
தொழில்நுட்பம் கொணரும்
புத்தம்புது பிரச்னைகளை
புரியாத இறப்புச் செய்திகளை
தொழில்நுட்பம் கொணரும்
புத்தம்புது பிரச்னைகளை
புரியாத இறப்புச் செய்திகளை
Tuesday, February 12, 2019
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 3 கவிதைகள்
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 3 கவிதைகள்
https://padhaakai.com/2019/02/11/saranabhi-poetry-2/
https://padhaakai.com/2019/02/11/saranabhi-poetry-2/
நதி - 2
அத்வைதம் தேடிய
சங்கரனைத் தேடி
காலடி போனவொரு நாள்
பயணங்கள் திசைமறந்த நாட்கள்
பற்பல நாட்களில்
பேசிய முதல் வார்த்தை
அங்காமலி சங்கரன் அம்பலம்
பெரியாறின் படிகளிலிறங்கி
எதிர்கரை காணா
இருளும் தொலைவும்
நினைவில்லாது
மயக்கம்போலும் ஓருணர்வில்
முதலடி ஈரடி
பனிக்குட வெம்மைக்குள்
நாசியின்கீழ் உடலம்தழுவி
நகர்ந்த நீர் பொழிந்ததெங்கு
வழிந்ததென்று
புதைந்தமர்ந்திருந்தது
எத்தனைக் காலம்
நதி - 1
சாகச பயணம்போலும்
தலையில் கட்டோடும்
இடைநழுவும் முண்டோடும்
நகர்நீங்கி நான்காம்நாள்
கருமையும் பச்சையும் நீலமும்
கலந்தடர்ந்த கானகம்
புள்ளினங்களும் இயம்பா
புலரிளங்காலை
துயிலெழுப்பி விரிநீங்கி
தந்தையின் தோளமர்ந்து
மென்சருகென மினுங்கும்
பம்பையின் கரையோரம்
அடற்கருமையில் அசைவின்றி
நெளியும் நீரோரம் அமர்த்தி
நிகழ்வதென்ன அறியாதவன்
பனிக்குளிர்நீரில் முதல்முழுக்கு
ஆயிரம் ஊசிகள் ஓராயிம்துளைகள்
விறைத்துநின்ற சிறுஉடல்
சினம்கண்டு சிரித்த தகப்பன்
நிகழும்
கருந்திரை கீழிறங்கியது
கண்முன் ஒளிந்து மறைந்தது ஒளி
சூழ நின்ற
மலையடுக்குகளின் இடுக்கினூடே
அலையென மிதந்து வரும்
மென்னீர காற்று
கமழும் உன் தோள் வாசம்
எப்போதோ முகர்ந்தது
இன்னும் புலன்களில்
அழியா தடம்
இப்போதும்
முகர்ந்துகொள்ளும் அண்மையில்
இடையில் எரியும் கணப்பு
வழியும் ஹரிப்ரஸாதின் குழலிசை
சகமொருத்தி சொன்னது
இன்று இப்போது இக்கணம்
நினைவில் மென்மையாய் அதிரும்
'ஒரு குழல்,
ஒரு முணுமுணுப்பு,
ஒரு பெருமூச்சு,
ஒரு முனகல்,
ஒரு மெல்லிய அழுகை,
ஒரு தேன்சிட்டின் சிறகசைவு,
சுவாசம்,
தென்றல்,
மரங்களின் உயிர்ப்பு,
இடையோடும் நிசப்தம்,
சொற்களேதுமற்ற இந்நிலை...'
அநித்யங்களின் காதல்
வலியது
Thursday, January 10, 2019
தொலைவில் வழியும் இசை
அலுவலகம் செல்லும்
அவசரத்தில் அனைவரும்
தத்தம் பேசியில் புத்தகத்தில் உரையாடலில்
அமர்ந்திருந்த எனக்கெதிரே
தலைநிமிர்ந்து அமர்ந்திருந்தாள்
மறுமுறை நோக்க வைக்கும் முகம்
ஏதோவோர் எண்ணம்
ஏதோவொரு நாடகம்
எங்கோ நோக்கிய
தளும்பிய விழிகள்
கணப்போதும் இமைக்காமல்
அவசரத்தில் அனைவரும்
தத்தம் பேசியில் புத்தகத்தில் உரையாடலில்
அமர்ந்திருந்த எனக்கெதிரே
தலைநிமிர்ந்து அமர்ந்திருந்தாள்
மறுமுறை நோக்க வைக்கும் முகம்
ஏதோவோர் எண்ணம்
ஏதோவொரு நாடகம்
எங்கோ நோக்கிய
தளும்பிய விழிகள்
கணப்போதும் இமைக்காமல்
பார்வையேதும் அசையாமல்
தன்னிச்சையாக மேலெழும்பும் கை
யாருமறியாமல்
நீரூறும் நாசியைத் துடைக்கும்
சிறிதே விரிந்த உதடுகளிலும்
உறைந்த சலனம்
தன்னிச்சையாக மேலெழும்பும் கை
யாருமறியாமல்
நீரூறும் நாசியைத் துடைக்கும்
சிறிதே விரிந்த உதடுகளிலும்
உறைந்த சலனம்
யாருமே அவளைப் பார்க்கவில்லை
அவளைத் தவிர யாரையுமே நான் பார்க்கவில்லை
இருக்கையைவிட்டு எழாமல்
வெறித்து எதுவும் பார்த்துவிடாமல்
வழியப்போகிற அந்தத் துளிகள்
ஏன் என் தோள் வீழக்கூடாது
அவளைத் தவிர யாரையுமே நான் பார்க்கவில்லை
இருக்கையைவிட்டு எழாமல்
வெறித்து எதுவும் பார்த்துவிடாமல்
வழியப்போகிற அந்தத் துளிகள்
ஏன் என் தோள் வீழக்கூடாது
Friday, December 28, 2018
இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்
எதிரும் புதிருமான
தெருக்களிலெல்லாம்
காலடி ஓசைகள்
தெருக்களிலெல்லாம்
காலடி ஓசைகள்
அதிகாலை
அத்தனை பாதங்களும்
அழகிய பெரும் வீடுகளின்
தானியங்கிக் கதவுகள் திறந்து
சாலைகள் நோக்கி
சாரி சாரியாக நடக்கும்
அத்தனை பாதங்களும்
அழகிய பெரும் வீடுகளின்
தானியங்கிக் கதவுகள் திறந்து
சாலைகள் நோக்கி
சாரி சாரியாக நடக்கும்
பேருந்து நிறுத்தங்கள்தோறும்
இந்தோனேசிய தலைமுக்காடுகள்
இந்திய கைப்பைகள் குளிர்க் கண்ணாடிகள்
பிலிப்பினோ விரிந்த கூந்தல் அலங்காரங்கள்
சந்தனச் சுண்ணம் பூசிய பர்மிய கன்னங்கள்
குறைவும் நிறைவுமாக விதவிதமான ஆடைகள்
ஏதேதோ மொழிகள்
இந்தோனேசிய தலைமுக்காடுகள்
இந்திய கைப்பைகள் குளிர்க் கண்ணாடிகள்
பிலிப்பினோ விரிந்த கூந்தல் அலங்காரங்கள்
சந்தனச் சுண்ணம் பூசிய பர்மிய கன்னங்கள்
குறைவும் நிறைவுமாக விதவிதமான ஆடைகள்
ஏதேதோ மொழிகள்
சுழலும் அத்தனைக் கண்களிலும்
ஒன்றே தாபம்
ஊடலும் கோபமும்
மகிழ்வும் பிணக்கும்
பேருந்து நிறுத்தங்களில் தொடங்கி
பேரங்காடிகளில் தொடர்ந்து
நிறுத்தங்களில் நிறையும் இன்று
சிங்கப்பூரில் ஞாயிறு
ஒன்றே தாபம்
ஊடலும் கோபமும்
மகிழ்வும் பிணக்கும்
பேருந்து நிறுத்தங்களில் தொடங்கி
பேரங்காடிகளில் தொடர்ந்து
நிறுத்தங்களில் நிறையும் இன்று
சிங்கப்பூரில் ஞாயிறு
இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்
https://padhaakai.com/2018/12/23/saranabhi-poetry/#two
Thursday, December 27, 2018
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - இருக்கலாம்
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - இருக்கலாம்
https://padhaakai.com/2018/12/23/saranabhi-poetry/
https://padhaakai.com/2018/12/23/saranabhi-poetry/
இருக்கலாம்
வடிவதற்கேதும் வழியின்றி
பொங்கி நிரம்பி
ஆவியாவதொன்றல்லாமல்
தன்னைக் கரைத்துக் கொள்ளவியலா
இந்தக் கடல்
ஈர்ப்பு விசையனைத்துக்கும் மேலென
ஏதோவொன்று அழுத்தி வைத்திருக்கும்
அத்தனை நீரும்
பொதிந்து வைத்திருக்கும் இருள் அறியா
அத்தனை அந்தகாரங்களும்
என் சுயமாகக்கூட இருக்கலாம்.
பொங்கி நிரம்பி
ஆவியாவதொன்றல்லாமல்
தன்னைக் கரைத்துக் கொள்ளவியலா
இந்தக் கடல்
ஈர்ப்பு விசையனைத்துக்கும் மேலென
ஏதோவொன்று அழுத்தி வைத்திருக்கும்
அத்தனை நீரும்
பொதிந்து வைத்திருக்கும் இருள் அறியா
அத்தனை அந்தகாரங்களும்
என் சுயமாகக்கூட இருக்கலாம்.
தொங்கும் திரைச்சீலை
அசைவற்ற நிசப்தம்
கொதித்தடங்கிய பாலின்
மென்சருகாடை மோனம்
கரையின் மீது காத்திருந்து
பறக்கத் துவங்கும்
முதல் சிறகசைவில்
கலையும் நீர்ப்பரப்பு
என் சிந்தையாகக்கூட இருக்கலாம்.
அசைந்து கொண்டேயிருக்கும் உணர்வுகளை
அசையா ஒரு காட்சியென
பிழையேதுமின்றி ஒரு முறை
ஒரே முறை
வடிக்க முடிந்துவிட்டால்
ஓய்ந்துவிடும் இதுவென்
ஆவியாகக்கூட இருக்கலாம்.
அசையா ஒரு காட்சியென
பிழையேதுமின்றி ஒரு முறை
ஒரே முறை
வடிக்க முடிந்துவிட்டால்
ஓய்ந்துவிடும் இதுவென்
ஆவியாகக்கூட இருக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)
-
"Annai! Annai! Aadum Koothai Naada cheidhaai ennai!" These were the lines by Mahakavi Bharathi in his poem titled 'Oozhi ko...
-
ஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்திருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங...
-
ஓரிரு வருடங்களுக்கு முன் , ஜானகியின் சிறந்த 50 பாடல்கள் என்ற பதிவை எழுதிய போது , ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு சிறிய குறிப்பு எழுத...