Monday, June 6, 2016

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:


நிறப்பிரிகை: ஐந்து - அரிசனம் 

https://padhaakai.com/2016/06/05/turmeric/

நிறப்பிரிகை: ஐந்து - அரிசனம்

இலைகள் தோறும் 
இழையாடைகள் சரிந்து 
மெதுவே மிக மெதுவே 
சருமம் போர்த்திய 
சருகுகள் ஒதுக்கி 
நிலம் மெல்ல நடுங்கிட 
காதல் செய்யும் வீர்யன் 

இருத்தலின் சுடர் 
இயக்கத்தின் தீ 
அளையிடை இருக்கவொன்னா 
அக்கினிக்குஞ்சு 

மேன்மையொன்றே கருதி 
எரிந்தழித்து 
முளைத்தெழும் 
அரிசனம் 

Wednesday, June 1, 2016

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

நிறப்பிரிகை: நான்கு - துய்யம்

https://padhaakai.com/2016/06/01/pale-white/


நிறப்பிரிகை: நான்கு - துய்யம்

இறையின் முன் 
கரைந்தொழுகும் கண்ணீர் 
 
இரவும் விடியலும் 
இல்லாதோரின் 
எதிர்நோக்கல் 
எளிமையின் திறப்பு
சாதனையின் உச்சம் 

எதுவும் அறியாத 
எதுவும் நிறையாத 
எதுவாகவும் இல்லாத 
எதுவாகவும் உருமாறும்  
உன்னதம் 
துய்யம் 

Monday, May 23, 2016

நிறப்பிரிகை: மூன்று - மரகதம்

நீர்தேடி 
வேர் நீளும் 
ஒளியாசித்து 
மரமேறும் 
சந்ததி நீள 
விழுதிறங்கும் 

நீரின்றி கருகினாலும் 
ஒரு துளி விழலை 
நினைவிற் பொதித்து 
பெருகிக் கொள்ளும் 




















போர்த்திப் புரந்து 
புரண்டு கொடுத்து 
கலைந்து தாங்கி 
கிளைத்து எழுந்து 
உழைப்பொன்றே கருதி 
உயிரீயும் 
மகிழ்வொன்றே கருதும் 
மரகதம்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: நிறப்பிரிகை: மூன்று – மரகதம்


https://padhaakai.com/2016/05/22/emerald/

Monday, May 16, 2016

நிறப்பிரிகை: இரண்டு - நீலம்

விரி வானை 
விஞ்சும் 
மனிதத்தின் 
மனவிரிவு 

கைவிரல் பற்றி 
படர விடும் 
நம்பிக்கை 

அமைதியற்ற உயிர்
காத்து நிற்கும் 
விடியற் கீற்று  




















கூரை
தாங்கிப்பிடிக்கும் தரை
சூழவமைந்த குடில் 

அகண்டவெளிப் பெருக்கு
அகத்தமைந்த ஞானச்செருக்கு

Pandit Venkatesh Kumar and Raag Hameer