Sunday, September 6, 2009

நீ-நான்

படியில்
தவறி விழவிருந்த
என்னை இழுத்து நிறுத்திய
உன்னில் நான்
என்னில் நீ

கற்பிதம்

உன்
கொள்கைகள வேறு
என்
சித்தாந்தன்களோ வேறு
பகிருமனைத்திலும்
தேவையில்லை
இணக்கம் என்பதில்
இணக்கம் உண்டு
நம்மிடம்

துணை

இருள்கவிந்து
இலைவழி சொட்டும்
முன்பனிக்கால மரத்தினடியில் நாம்
உறக்கம் குலைக்கும்
உன் குழறல் பேச்சு கேட்டு
அனைத்து செல்வேன்

உணவை சூடு செய்து
மேசையில்
எதிரெதிர் அமர்ந்து
கண்கள் பார்த்து உண்போம்
விடியும் நாளை
நினைக்க மறுத்து

நர்த்தகி



நாட்டிய நாடகம்
காணக் கிளம்புகிறோம்
மெல்லிய இசை
கசியுமுன்
படுக்கைஅறையில்
நீ
உடைமாற்றும் வைபவம்
நடந்தேறுகிறது

நளினங்களின் ஈர்ப்பில்
பார்த்திருக்கிறேன்
அழகும் ஆளுமையும்
மிளிரும்
அசைவுகளின் முடிவில்
கரமொதுக்கி
நீ சிரிக்கிறாய்
'நர்த்தகி நீ' என்கிறேன்

அவை

நீ கேட்டும்
நான் தரக்கூடாத
துயரங்களையும்
அவலங்களையும்
தாங்கியழுந்தி
அன்றொருநாள் வந்தேன்

தோள் உரச
அமர்ந்திருந்தோம்
நீ பேசவில்லை
நான் பேசவில்லை
நாளின் முடிவில்
கிளம்பினேன்
நீ அமர
விட்டுவிட்டு

நாம்

கலைந்த படுக்கையில்
ஆழ்ந்துறங்கும் நீ

சன்னலோரம்
புலரும் இருள்

கண்ணாடியில் மேசைவிளக்கின்
மஞ்சள் பிம்பம்

உன் வெம்மையை
போர்த்தியபடி
இந்தக்கவிதை
எழுதும் நான்

பெருகி


View !
Originally uploaded by shabgarde paezi ...
கொதித்துத் தகதகக்கிற
கடல்
பார்த்து அமர்ந்திருந்தோம்
பேசுவதற்கு
ஒன்றுமில்லை
என்றாலும் உணர்கிறோம்
காமம்
ஏனிப்படி
நுரைத்து வழிந்து
பெருகித் தளும்பி
பாதம் சீண்டுகிறது
என

Pandit Venkatesh Kumar and Raag Hameer