பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - 'தேவதைகளின் இன்றைய களம்' - https://padhaakai.com/2016/04/24/angels/
Every life has cyclical crests and troughs - reversals are caused by paradigm shifts, keeping the otherwise sedate life interesting...
Monday, April 25, 2016
தேவதைகளின் இன்றைய களம்
பலிகளம்
தயாராகி விட்டது
களமெழுதி திரையிறக்கி
வண்ணமும் சுண்ணமும் சார்த்தி
நான்மூலைகளில்
தீபமும் தூபமும் பொருத்தி
கொட்டும் முழக்கும் கூட்டி
பலிகளம்
தயாராகி விட்டது
அம்பும் வில்லும்
வாளும் சூட்டி
இளித்தும் அழுதும்
இன்முகம் காட்டி
கனலென எரியும்
காற்றில் நடிக்கும்
உடைகள் பூட்டி
பெருந்தெய்வங்களும்
குறுந்தேவதைகளும்
களமாடும் நியதி
கூடி வருவன தனித்து
ஆடி வருவன
என
அவையனைத்தும்
இந்தக் கதிர்மங்கும்
அந்தியில்
களம் வந்து சேர்ந்துவிட்டன
விடியும் வரை அல்லது
பலிகள் விழும் வரை
சந்நதம் அடங்காதாடும்
அவை
பெரும்பலிகள்
கொள்ள வேண்டி
சினந்தவை இணைவதும்
கூடியவை பொருதுவதும்
காத்திருக்கும் பலிகள்
கண்முன் நிகழ்வதுமோர்
ஆட்டமே
யாசித்தல் போல் கையேந்தும் சில
அபயஹஸ்தம் காட்டும் சில
உரத்த பாவனைகளில்
மறைந்து கொள்ளும் சில
முஷ்டி மடக்கி
காற்றில் சமர் புரிந்து
பலிகளை மகிழ்விக்கும் சில
எனினும்
கவலை வேண்டாம்
குழம்ப வேண்டாம்
தேவதைகளின் தெய்வங்களின்
தேவை ஒன்றே
களம்புகக் காத்திருக்கும்
பலிகளின்
சித்தத்தின் உறுதியை
அவ்வப்போது சோதித்துக்
கொண்டே ஆடுமவை
பலிகள்
ஒருநொடி
கண்கிறங்கி
உணர்வு மயங்கி
சிரம் சாய்ந்தால்
துள்ளிப் பாய்ந்து
முதற்பலி ஏற்கும்
துடிக்கும் தாளம்
துவளா ஆட்டத்திற்கும்
தடுமாறும் பிரக்ஞை
நிலைதவறும் சித்தத்திற்கும்
இடையில்
காத்திருக்கிறது
இந்த பலிகளம்
அவை ஆடும்
அந்தக் களம் காத்திருக்கும்
சித்தம் சோரும்வரை
Wednesday, April 13, 2016
தாவர வாழ்க்கை - ஒரு குறிப்பு
'வாடிய பயிரை கண்ட போதெல்லாம்' வாடியவனும், 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்று உவமை சொன்னவனும் பிற உயிர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவே சொன்னார்கள்.
மரங்கள் தன் சுயம் இழப்பதில்லை; பொறாமையில் போட்டியிடுவதில்லை; தன்னளவிலான நிறைவும், நிறைவின் பெருமிதமற்ற வெளிப்பாடும் நிறைந்தவை. நீர்தேடி வேரனுப்பும் சாகசமும் மண்ணுக்கடியே. மானுடம் கற்றுக்கொள்ள குரலின்றி அநேகம் உரைப்பவை.
ஒரு நான்-லீனியர் விவாதத்தின்படி, ஆறறிவில் குறைந்தவை இவ்வளவு ஆழமான பொருள் பொதிந்து நிற்கையில், ஆறறிவு கைகூடிய மானுடம் என்னவெல்லாம் சாதிக்கக் கூடும்? எத்தனை அணுக்கமான உறவு இப்புவியுடனும் சக மனிதருடனும், பிற உயிர்களுடனும் பேண இயலும்?
புலனடக்கத்தோடு, தீமைகளையும் துரோகங்களையும் செரித்து, நன்மை ஈயக்கூடிய ஒரு தாவரத் தன்மை மானுடத்திற்கு வாய்த்து விட்டால் எப்படியிருக்கும்...
Monday, April 11, 2016
தாவர வாழ்க்கை
என் குணங்களை
யாவரும் அறியும்வண்ணமே
வைத்திருக்கிறேன்
விருட்சம் தன்
அத்தனை இலைகளையும்
கதிரொளிக்கென
விரித்தே
அடுக்கியிருப்பது போல்
பழகுமிடம் தோறும்
பகை பொறுத்து
பண்பருளும்
விவேகம்
விதிக்கப்பட்டிருக்கிறேன்
கரியமிலம் உண்டு
உயிர்வளி தருதல் போல்
வேரோட்டம் போலவே
பசை தேடி
போராட்டம்
பட்டையைச்
செதுக்கினாலும்
சுரத்தல் கூடும்
பால் மரங்கள் போலும்
சேதம் சகித்தல்
ஆறிலொன்று குறைந்தால்
ஆகாதா என்ன
Padhaakai
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:
தாவர வாழ்க்கை - https://padhaakai.com/2016/04/10/arboreal/
தாவர வாழ்க்கை - https://padhaakai.com/2016/04/10/arboreal/
Friday, April 8, 2016
‘நிச்சலனம்’ குறித்து...
பின்னிரவில் ஓர் அழைப்பு. நண்பனின் தாய் இரு வருட புற்றுநோய் போராட்டத்தின் முடிவில் மறைந்த செய்தி. என் தாய் மிக நீண்ட நோய்ப்படுக்கையில் கிடந்து மறைந்த வருடத்திற்குள் இன்னொரு அன்னையின் ஈமச்செய்தி. சிறு வயதில் அவன் வீட்டிற்கு விளையாடச் சென்று எத்தனையோ நாள் அவள் கையால் பசியாறியிருக்கிறேன். கனிவே குரலும் உருவுமானவள்.
நண்பன் மிக அமைதியானவன்; உணர்வுகள் மீதான கட்டுப்பாடு பிடிகிட்டிய வரம் பெற்றவன். அழாமல், குரல் நடுங்காமல் சொன்னான் - 'அருகிலிருந்தேன், கையைப் பற்றியிருந்தாள். முகத்தைப் பார்த்தவாறிருந்தேன் - வேறெங்கும் நான் பார்த்திருந்திருக்கலாம். ஆனால் பார்க்கவில்லை. ஒரு விக்கல், இமையின் ஓர் அசைவு. என் கைவழியே போய்விட்டாள்'.
அவன் எப்படி அந்தக் கணத்தைக் கடந்தானோ தெரியாது.
நான் எப்படி அந்தக் கணத்தைக் கடக்கப் போகிறேன் என்றும் தெரியவில்லை.
யாரின் தாயும் யாவரின் தாய்தானே.
Monday, April 4, 2016
Padhaakai
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதை - நிர்ச்சலனம்
http://padhaakai.com/2016/04/03/stillness/
http://padhaakai.com/2016/04/03/stillness/
Subscribe to:
Posts (Atom)
-
"Annai! Annai! Aadum Koothai Naada cheidhaai ennai!" These were the lines by Mahakavi Bharathi in his poem titled 'Oozhi ko...
-
The other day, I was searching for Aldous Huxley’s writings and chanced upon a century-old school of thought, propounded by Hermus Trismegis...
-
எ த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து... அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்...