Every life has cyclical crests and troughs - reversals are caused by paradigm shifts, keeping the otherwise sedate life interesting...
Showing posts with label Saravanan Kavithaigal. Show all posts
Showing posts with label Saravanan Kavithaigal. Show all posts
Monday, February 20, 2017
Friday, January 6, 2017
அந்தக் கணம்
எத்தனையோ சொல்லிமுடித்தும்
எஞ்சி நிற்கிறது புரிதலின் குறை
குற்றம் உனதல்ல
அறிதலின் குறை
மொழியின் குறை
அசந்தர்ப்பங்களின் பங்கும்
இல்லாமலில்லை
பற்பல உறவுகளில்
புதுப்புது நிகழ்வுகளில்
புலன்களின் புரிதல்
மொழிகளின்றியும்
நிகழ்ந்தவண்ணமே
இருந்தபோதிலும்
இழந்ததும் பெற்றதும்
இவையென இத்தருணத்தில்
கடைவிரிக்க வேண்டியதில்லை
ஒரு திரியினின்று மற்றொன்று
பற்றிக் கொள்ளும்
அந்தக்
கணம் மட்டுமே வேண்டும்
Solvanam
சொல்வனம் மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதை: அந்தக் கணம்
http://solvanam.com/?p=47878
http://solvanam.com/?p=47878
Monday, October 17, 2016
ஏதுமற்று
மத்திய ஜாவாவின்
யோக்யகர்த்தா நகரில்
விரைந்து சாயும்
மழைஅந்திகளின்
முன்மாலைப் பொழுது
தொலைவில் எரிந்தடங்கும்
ஒளியின் முன்
விண்ணைத் தீண்டக் கிளம்பும்
மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்
பிரம்பனான் கோவிற்சிகரங்களை
நோக்கிக் கொண்டு
மதுவை அருந்திக் கொண்டிருக்கிறேன்
கருமையும் அடர்த்தியும்
கலந்து சாயும் மழைத்தீற்றலினூடே
தெருவின் இரைச்சலைப் பின்விட்டுவிட்டு
விடுதியின் சாளரத்தில்
தனித்து அமர்ந்திருக்கும்
என்னெதிரில் அமர்கிறாள் அவள்
சிறகை சிலிர்த்து நீர்த்துளிகள்
உதிர்க்கும் பறவைபோல்
நீவிக்கொள்கிறாள்
இந்தியனா என்கிறாள்
எனக்குத் தெரியும்
இதையும் இதற்கடுத்த
எந்த இரு கேள்விகளையும்
நான் எதிர்பார்க்கலாமென
ஆமோதிக்கும் புன்னகைக்குப்பிறகு
பிரம்பனான் கோவில்வளாகம் பார்த்தேனா
என்று வினவுகிறாள்
மழையின் ஓசை
ஒரு சுதியேறி சீரான கதியில் பெய்கிறது
பதிலாக
அவள் அருந்த
என்ன வேண்டுமென கேட்கிறேன்
இரு கோப்பைகள்
நிறைந்தும் குறைந்தும்
மழைச்சாரலில் நனைந்த
புன்னகைகள் கடந்தும்
இருவரும் தத்தம்
கோப்பைகளை ஏந்திக்கொண்டு
கவியும் இருளில்
கரைந்து கொண்டிருக்கிறோம்
Monday, September 19, 2016
அணைதல்
கண்கள் எரிய
பார்த்துக் கொண்டிருந்தேன்
வெளியும் இருளும்
கலங்கிக் குழம்பி
வண்ணங்கள் மறைந்து தோன்றி
வடக்குவான் ஒளித்திரையின்
நினைவையழிக்கும்
குழப்பச் சித்திரம் போல்
நிறமற்ற நிறம்
ஒளியற்ற ஒளி
தெளிவைத்
தேடவும் தோன்றா
சுயஅழிவின் கவர்ச்சி
திரைவிலக்கி இருள்கூர்ந்து
ஒற்றைச்சுடர் ஒளிர்வில்
நிலைக்கக் கண்டேன்
ஒரு சுடரின் பிறந்த சுடர்
ஓராயிரம் சுடரூட்டுதல்
உயர்வன்றி வேறென்ன
Monday, August 8, 2016
Monday, June 6, 2016
நிறப்பிரிகை: ஐந்து - அரிசனம்
இலைகள் தோறும்
இழையாடைகள் சரிந்து
மெதுவே மிக மெதுவே
சருமம் போர்த்திய
சருகுகள் ஒதுக்கி
நிலம் மெல்ல நடுங்கிட
காதல் செய்யும் வீர்யன்
இருத்தலின் சுடர்
இயக்கத்தின் தீ
அளையிடை இருக்கவொன்னா
அக்கினிக்குஞ்சு
மேன்மையொன்றே கருதி
எரிந்தழித்து
முளைத்தெழும்
அரிசனம்
Monday, May 16, 2016
பதாகை மின்னிதழ்
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:
நிறப்பிரிகை: கவிதை இரண்டு - நீலம்
https://padhaakai.com/2016/05/15/blue/
நிறப்பிரிகை: கவிதை இரண்டு - நீலம்
https://padhaakai.com/2016/05/15/blue/
Monday, April 25, 2016
தேவதைகளின் இன்றைய களம்
பலிகளம்
தயாராகி விட்டது
களமெழுதி திரையிறக்கி
வண்ணமும் சுண்ணமும் சார்த்தி
நான்மூலைகளில்
தீபமும் தூபமும் பொருத்தி
கொட்டும் முழக்கும் கூட்டி
பலிகளம்
தயாராகி விட்டது
அம்பும் வில்லும்
வாளும் சூட்டி
இளித்தும் அழுதும்
இன்முகம் காட்டி
கனலென எரியும்
காற்றில் நடிக்கும்
உடைகள் பூட்டி
பெருந்தெய்வங்களும்
குறுந்தேவதைகளும்
களமாடும் நியதி
கூடி வருவன தனித்து
ஆடி வருவன
என
அவையனைத்தும்
இந்தக் கதிர்மங்கும்
அந்தியில்
களம் வந்து சேர்ந்துவிட்டன
விடியும் வரை அல்லது
பலிகள் விழும் வரை
சந்நதம் அடங்காதாடும்
அவை
பெரும்பலிகள்
கொள்ள வேண்டி
சினந்தவை இணைவதும்
கூடியவை பொருதுவதும்
காத்திருக்கும் பலிகள்
கண்முன் நிகழ்வதுமோர்
ஆட்டமே
யாசித்தல் போல் கையேந்தும் சில
அபயஹஸ்தம் காட்டும் சில
உரத்த பாவனைகளில்
மறைந்து கொள்ளும் சில
முஷ்டி மடக்கி
காற்றில் சமர் புரிந்து
பலிகளை மகிழ்விக்கும் சில
எனினும்
கவலை வேண்டாம்
குழம்ப வேண்டாம்
தேவதைகளின் தெய்வங்களின்
தேவை ஒன்றே
களம்புகக் காத்திருக்கும்
பலிகளின்
சித்தத்தின் உறுதியை
அவ்வப்போது சோதித்துக்
கொண்டே ஆடுமவை
பலிகள்
ஒருநொடி
கண்கிறங்கி
உணர்வு மயங்கி
சிரம் சாய்ந்தால்
துள்ளிப் பாய்ந்து
முதற்பலி ஏற்கும்
துடிக்கும் தாளம்
துவளா ஆட்டத்திற்கும்
தடுமாறும் பிரக்ஞை
நிலைதவறும் சித்தத்திற்கும்
இடையில்
காத்திருக்கிறது
இந்த பலிகளம்
அவை ஆடும்
அந்தக் களம் காத்திருக்கும்
சித்தம் சோரும்வரை
Monday, April 11, 2016
தாவர வாழ்க்கை
என் குணங்களை
யாவரும் அறியும்வண்ணமே
வைத்திருக்கிறேன்
விருட்சம் தன்
அத்தனை இலைகளையும்
கதிரொளிக்கென
விரித்தே
அடுக்கியிருப்பது போல்
பழகுமிடம் தோறும்
பகை பொறுத்து
பண்பருளும்
விவேகம்
விதிக்கப்பட்டிருக்கிறேன்
கரியமிலம் உண்டு
உயிர்வளி தருதல் போல்
வேரோட்டம் போலவே
பசை தேடி
போராட்டம்
பட்டையைச்
செதுக்கினாலும்
சுரத்தல் கூடும்
பால் மரங்கள் போலும்
சேதம் சகித்தல்
ஆறிலொன்று குறைந்தால்
ஆகாதா என்ன
Monday, April 4, 2016
Padhaakai
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதை - நிர்ச்சலனம்
http://padhaakai.com/2016/04/03/stillness/
http://padhaakai.com/2016/04/03/stillness/
நிர்ச்சலனம்
அவளின்
ஒவ்வொரு இமை அசைவுக்கும்
பதறியபடி
அமர்ந்திருக்கிறேன்
இருவருட நோய்மையின்
இறுதியில் ஈன்றவள்
என்னையே நான் பார்ப்பது போல்
என்னை அவள் நோக்குகிறாள்
வலியினூடான பயணம்
வரைந்த நிரந்தரக் கோடுகளன்றி
வேறற்ற அழகிய முகம்
பிடித்திருக்கும் கரத்தின்வழி
ஏதோவொன்று
நழுவித்தொலைவது போல்
வயிற்றினின்று இறங்கி
முலையருந்தி
இடுப்பிலமர்ந்து
மடியிலுறங்கி
தோளிற்கரைந்து
கைபிடித்து
அமர்ந்திருக்கிறேன்
அவள் அயரவென்று
கடந்து போகும்
அளக்கவியலா ஒவ்வொரு நொடிக்கும்
அவள் கைவழி என்னுள் கூடும்
அமைதியின்மை
துடிக்கும் இமைகள்
வலியால் துடிப்பன
எனுமோர்
சலனம் கடந்து
ஓரிமைப் பொழுதில்
துடியா இமைகள்
திறந்தே அமையும்
என்னுள்ளும்
அந்த அறையுள்ளும்
நிர்ச்சலனம் நிறைத்து
ஒவ்வொரு இமை அசைவுக்கும்
பதறியபடி
அமர்ந்திருக்கிறேன்
இருவருட நோய்மையின்
இறுதியில் ஈன்றவள்
என்னையே நான் பார்ப்பது போல்
என்னை அவள் நோக்குகிறாள்
வலியினூடான பயணம்
வரைந்த நிரந்தரக் கோடுகளன்றி
வேறற்ற அழகிய முகம்
பிடித்திருக்கும் கரத்தின்வழி
ஏதோவொன்று
நழுவித்தொலைவது போல்
வயிற்றினின்று இறங்கி
முலையருந்தி
இடுப்பிலமர்ந்து
மடியிலுறங்கி
தோளிற்கரைந்து
கைபிடித்து
அமர்ந்திருக்கிறேன்
அவள் அயரவென்று
கடந்து போகும்
அளக்கவியலா ஒவ்வொரு நொடிக்கும்
அவள் கைவழி என்னுள் கூடும்
அமைதியின்மை
துடிக்கும் இமைகள்
வலியால் துடிப்பன
எனுமோர்
சலனம் கடந்து
ஓரிமைப் பொழுதில்
துடியா இமைகள்
திறந்தே அமையும்
என்னுள்ளும்
அந்த அறையுள்ளும்
நிர்ச்சலனம் நிறைத்து
Monday, March 7, 2016
யாரும் இறங்கா நிலையம்
கூரை நடைபாதை கற்குவியல்கள் இருப்புப் பாதை என எங்கும் உதிர்ந்த சருகுகள் நிறம் மங்கிய நீர்வண்ண ஓவியம் போலொரு களைத்த பொலிவு இற்றது போல்வன எனினும் இறாது நிற்கும் நிலையத்தின் மரவரிகள் ஒரு நூறு நினைவுகளின் மௌன சாட்சிகள் அவ்வப்போது பாதை தேய்த்து சலிப்புடன் பெருமூச்செறிந்து வந்து நின்று பொருமலுடன் நீர் சிந்தி வேண்டா வெறுப்பாக கிளம்பிச் செல்லும் புகையற்ற வண்டி தரும் கிளர்ச்சியின் குற்றவுணர்வுடன் இரவில் தனித்திருக்கும் பகிர்வுகளில் பேதமேதும் பாராட்டுவதில்லை இருப்புப் பாதையோரம் இன்று முளைத்த எருக்கம்செடிக்கும் நடைமேடையின் நடுவீற்றிருக்கும் முரட்டு அரசுக்குமிடையே செல்லமாய் வருடி செந்நிறப் புழுதியை வீசியடித்து கழுவும் எத்தனையோ மழைக்காலங்களில் ஒன்றைக் கடந்து செல்ல இன்று காத்திருக்கும் உடலம்
பதாகை இணைய இதழில்...
பதாகை இணைய இதழில் வெளிவந்திருக்கும் கவிதை:
http://padhaakai.com/2016/03/06/nobodys-station-saravanan-abi/
http://padhaakai.com/2016/03/06/nobodys-station-saravanan-abi/
Wednesday, January 20, 2016
அற்றது கேட்கின்
குறுகித் திணிந்த
முடியா துவாரம்
முடியா துவாரம்
பத்திரம் தேடி
நுழைய வேண்டுமொரு யோனி
ஓயத் துரத்தும்
அருவங்கள்
அருவங்கள்
விழுந்தும் தீரா
இருளடர்ந்த ஆழம்
இருளடர்ந்த ஆழம்
கால்கள் தளைத்தும்
படுக்கை நனைக்கும் நனவு
படுக்கை நனைக்கும் நனவு
சளைத்து அறும்
உடலவயங்கள்
உடலவயங்கள்
தொடவியலா முலைகள்
விழித்து எழினும் அதே
விழித்து எழினும் அதே
Thursday, December 10, 2015
திணை மயக்கம்
நாட்காட்டியில் தாள்கள் கிழியும் சத்தம்
நொடிகள் கழியும் சத்தம்
யன்னலின் வெளியே
நிறம் மாறி மாறித் தோன்றும்
இரவின் வெக்கையும்
பகலின் மழைஈரமும்
வாழ்வு என்பதும்
நகர்தல் என்பதும்
அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகள்
சருகாகவும் தளிராகவும்
மிக மென்மையாக
மிக மிக அமைதியாக
உதிர்த்துக் கொண்டிருக்கிறது
காலம்
திறந்தே கிடந்தும்
யாரும் நுழையா
இக்கதவுகள்
திங்களொரு முறை
தோன்றும் மகனோ மகளோ
வருவது கூட
அசையா கதவுகளின்
மன்றாடலின் பேரில்
அசையா நாற்காலி அஃறிணை
அசையா கட்டில் அஃறிணை
அவற்றினூடே
உயிர்ப்புடனொரு
நாட்காட்டியும் கடிகாரமும்
Wednesday, November 4, 2015
ஒற்றைப் பூ
மகிழ மரத்தினின்று
பூக்கள் உதிர்வது போல்
கிரணங்கள் அறைக்குள்
பெய்து கொண்டிருக்கின்றன
பூக்கள் உதிர்வது போல்
கிரணங்கள் அறைக்குள்
பெய்து கொண்டிருக்கின்றன
மௌனம் காத்திருந்த நம்மிருவரிடயே
இசை பேசிக் கொண்டிருந்தது
மெல்லிய
ஆவிபுகையும்
தேநீர்க்கோப்பையை உறிஞ்சிவிட்டு
ஆவிபுகையும்
தேநீர்க்கோப்பையை உறிஞ்சிவிட்டு
என்னை பார்க்கிறாய்
புலர்வெயிலின்
இளவெம்மையுடன்
மெதுமெதுவே மஞ்சள் மாறும்
அறையின் பரிமாணங்களை
ஹரி பிரசாதின் குழலிசை நிறைக்கிறது
தோடி ராகந்தானே
என வினவுகிறேன்
தலையசைக்கிறாய்
செவிமடல் பொதிந்த
அணிகள் ஆடுகின்றன
வர்ணங்களை வாரியிறைத்தபடி
என்னுள்ளும்
பொன்னிழைகளாய் மின்னும்
காதோர குழற்கற்றைகளை
ஒதுக்கிவிட
தவிக்கும் என் விரல்களின்
தகிப்பை ஏன் மறைக்க வேண்டும்
என எண்ணுகிறேன்
தகிப்பை ஏன் மறைக்க வேண்டும்
என எண்ணுகிறேன்
உன் இதழில் இருந்து முறுவலொன்று
நழுவிச் சிந்துகிறது
வெளியே
வெட்கமின்றி
பூக்கள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன
Subscribe to:
Posts (Atom)
-
"Annai! Annai! Aadum Koothai Naada cheidhaai ennai!" These were the lines by Mahakavi Bharathi in his poem titled 'Oozhi ko...
-
ஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்திருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங...
-
ஓரிரு வருடங்களுக்கு முன் , ஜானகியின் சிறந்த 50 பாடல்கள் என்ற பதிவை எழுதிய போது , ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு சிறிய குறிப்பு எழுத...