Friday, March 5, 2010

நகரம்

உயிர்களை உறிஞ்சிக்
கொண்டே
காற்றாடும் தாவரம்
தோலும் சதையுமற்ற
உடலங்கள்
உலவும் இடுகாடு
கெட்டிப்பட்ட அடுக்குகளில்
நேசமும் காதலும்
புதைந்திறுகும்
மணல் மேடு
நாளிலும் இரவிலும்
எண்ணிறந்த நிறங்களுடன்
உறவுகள்
புசிக்கும் பச்சோந்தி
உயிர்ப்பை மறந்த கருக்கூடு
ஆண்மை இறந்த சதைநீட்டம்
சிறகுடன் சேர்த்து
சுதந்திரமிழந்த
ஆயிரம் பறவைகள்
அடையுமொரு வீடு

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer