Every life has cyclical crests and troughs - reversals are caused by paradigm shifts, keeping the otherwise sedate life interesting...
Monday, August 19, 2019
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - காத்திருத்தல்
காத்திருத்தல்
சுருக்கங்கள் நிறைந்த கரங்கள்
வித்வம் நிறைந்தவை
புகைத்துக் கொண்டிருக்கின்றன
காலை நடைபயிலும் கால்கள்
சந்தைவந்த சிறார்
முகர்ந்தலையும் குட்டிநாய்கள்
நடுவே இரு நாற்காலிகளில்
ஒன்றில் அக்கரங்களின் தலைவன்
இன்னொன்றில்
நசுங்கிய ஆயினும் அழகிய குவளை
அருகில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது
வாழ்வைப்போல் அதிர்வுதளர்ந்த
தந்திகள் துவளினும்
எதை வேண்டுமென்றாலும்
இசைக்கக் காத்திருக்கும்
கிதார்
வித்வம் நிறைந்தவை
புகைத்துக் கொண்டிருக்கின்றன
காலை நடைபயிலும் கால்கள்
சந்தைவந்த சிறார்
முகர்ந்தலையும் குட்டிநாய்கள்
நடுவே இரு நாற்காலிகளில்
ஒன்றில் அக்கரங்களின் தலைவன்
இன்னொன்றில்
நசுங்கிய ஆயினும் அழகிய குவளை
அருகில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது
வாழ்வைப்போல் அதிர்வுதளர்ந்த
தந்திகள் துவளினும்
எதை வேண்டுமென்றாலும்
இசைக்கக் காத்திருக்கும்
கிதார்
Monday, June 10, 2019
சோஷல் மீடியாவும் சில மரணங்களும்
இறந்துவிட்டதாக முற்றாக
அறியப்பட்ட நண்பனொருவனின்
முகநூல் பக்கம் சிலநாட்களில்
உயிர்தெழுந்தது
விவாதங்கள் நிலைச்செய்திகள்
வாழ்த்துக்கள்
அனைத்தையும் வியப்புடன்
பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு
அவனது இறந்ததின
கண்ணீர் அஞ்சலி தோன்றி
சகிக்க முடியாமலாகியபோது
கண்டுபிடித்தோம்
அவன் மனைவி
அவன் நினைவில்
முகநூலில் எங்களுடன் பேசியது
முகநூல் பக்கம் சிலநாட்களில்
உயிர்தெழுந்தது
விவாதங்கள் நிலைச்செய்திகள்
வாழ்த்துக்கள்
அனைத்தையும் வியப்புடன்
பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு
அவனது இறந்ததின
கண்ணீர் அஞ்சலி தோன்றி
சகிக்க முடியாமலாகியபோது
கண்டுபிடித்தோம்
அவன் மனைவி
அவன் நினைவில்
முகநூலில் எங்களுடன் பேசியது
பள்ளிக்கூட நண்பர்களின்
வாட்ஸப் குழுவில்
நண்பனொருவனின் எண்ணிலிருந்து
நள்ளிரவில் செய்தி
இன்னாரின் மகன் எழுதுகிறேன்
அப்பா இறந்து விட்டாரென
ப்ரொபைல் படத்துடன்
அவன் மரண செய்தி
வாட்ஸப் குழுவில்
நண்பனொருவனின் எண்ணிலிருந்து
நள்ளிரவில் செய்தி
இன்னாரின் மகன் எழுதுகிறேன்
அப்பா இறந்து விட்டாரென
ப்ரொபைல் படத்துடன்
அவன் மரண செய்தி
எப்படி எதிர்கொள்வது
தொழில்நுட்பம் கொணரும்
புத்தம்புது பிரச்னைகளை
புரியாத இறப்புச் செய்திகளை
தொழில்நுட்பம் கொணரும்
புத்தம்புது பிரச்னைகளை
புரியாத இறப்புச் செய்திகளை
Tuesday, February 12, 2019
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 3 கவிதைகள்
பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 3 கவிதைகள்
https://padhaakai.com/2019/02/11/saranabhi-poetry-2/
https://padhaakai.com/2019/02/11/saranabhi-poetry-2/
நதி - 2
அத்வைதம் தேடிய
சங்கரனைத் தேடி
காலடி போனவொரு நாள்
பயணங்கள் திசைமறந்த நாட்கள்
பற்பல நாட்களில்
பேசிய முதல் வார்த்தை
அங்காமலி சங்கரன் அம்பலம்
பெரியாறின் படிகளிலிறங்கி
எதிர்கரை காணா
இருளும் தொலைவும்
நினைவில்லாது
மயக்கம்போலும் ஓருணர்வில்
முதலடி ஈரடி
பனிக்குட வெம்மைக்குள்
நாசியின்கீழ் உடலம்தழுவி
நகர்ந்த நீர் பொழிந்ததெங்கு
வழிந்ததென்று
புதைந்தமர்ந்திருந்தது
எத்தனைக் காலம்
நதி - 1
சாகச பயணம்போலும்
தலையில் கட்டோடும்
இடைநழுவும் முண்டோடும்
நகர்நீங்கி நான்காம்நாள்
கருமையும் பச்சையும் நீலமும்
கலந்தடர்ந்த கானகம்
புள்ளினங்களும் இயம்பா
புலரிளங்காலை
துயிலெழுப்பி விரிநீங்கி
தந்தையின் தோளமர்ந்து
மென்சருகென மினுங்கும்
பம்பையின் கரையோரம்
அடற்கருமையில் அசைவின்றி
நெளியும் நீரோரம் அமர்த்தி
நிகழ்வதென்ன அறியாதவன்
பனிக்குளிர்நீரில் முதல்முழுக்கு
ஆயிரம் ஊசிகள் ஓராயிம்துளைகள்
விறைத்துநின்ற சிறுஉடல்
சினம்கண்டு சிரித்த தகப்பன்
Subscribe to:
Posts (Atom)
-
"Annai! Annai! Aadum Koothai Naada cheidhaai ennai!" These were the lines by Mahakavi Bharathi in his poem titled 'Oozhi ko...
-
ஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்திருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங...
-
ஓரிரு வருடங்களுக்கு முன் , ஜானகியின் சிறந்த 50 பாடல்கள் என்ற பதிவை எழுதிய போது , ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு சிறிய குறிப்பு எழுத...