Friday, January 6, 2017

அந்தக் கணம்


எத்தனையோ சொல்லிமுடித்தும்

எஞ்சி நிற்கிறது புரிதலின் குறை
குற்றம் உனதல்ல
அறிதலின் குறை
மொழியின் குறை
அசந்தர்ப்பங்களின் பங்கும்
இல்லாமலில்லை
பற்பல உறவுகளில்
புதுப்புது நிகழ்வுகளில்
புலன்களின் புரிதல்
மொழிகளின்றியும்
நிகழ்ந்தவண்ணமே
இருந்தபோதிலும்
இழந்ததும் பெற்றதும்
இவையென இத்தருணத்தில்
கடைவிரிக்க வேண்டியதில்லை
ஒரு திரியினின்று மற்றொன்று
பற்றிக் கொள்ளும்
அந்தக்
கணம் மட்டுமே வேண்டும்

Solvanam

சொல்வனம் மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதை: அந்தக் கணம்

http://solvanam.com/?p=47878

Monday, October 17, 2016

பதாகை

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: ஏதுமற்று
https://padhaakai.com/2016/10/16/shorn/

Pandit Venkatesh Kumar and Raag Hameer