Showing posts with label Tamil Film Music. Show all posts
Showing posts with label Tamil Film Music. Show all posts

Sunday, April 26, 2015

நானெழுதிய வெளிவராத திரைப்பாடல்

நீ நான் ஏன்
பொல்லாத  இன்பங்கள் கொண்டாடும்போது

ஆண்:

இவள் இதழ் அது சிந்தும் துளியில்
இதோ இதோ உன் காலடியில்
அவள் விரல் அது அசையும் திசையில்
உயிரே உயிரே போய் விடு போ

இவள் அங்கம் என் தேகம் தீண்ட
விலை விலையென உயிர் பிரிவேன்
அவள் மேலென் வாசம் விரவ
பாதங்கள் மேவிட உடல் விரிப்பேன்

சரணம் 1

வா என் வாசல் வந்து
நீ காத்திரு
என் என் தேவை தந்து
நீ வேர்த்திரு
நான் ஓர் வேகம் கொண்ட
தீ காட்டுத்தீ
ஆண் தேகம் அது எல்லாம்
நுனி புல் நுனி
நீ - என் பார்வை பட்டு
நீ - என் வாடை சுட்டு
நீ - என் பாதம் தொட்டு
வா ஒரு ராமனா





Saturday, December 27, 2014

LINGAA and the fading of a Superstar

With so much anticipation of watching a Rajinikanth starrer, I headed to the cinemas. After buying the hiked special rates (even in Singapore!), I could not wait to see his magical on-screen performance, especially after the return from brief illness.

The movie started and after the initial euphoria died down, the theatre fell silent. Much like my bubbling enthusiasm.


Oh what a let down!

By all those concerned, the movie is a sham and hotch-potch arrangement of everything.

The Kollywood inside news confirmed to me that the project was approved by Rajini to be completed within 6 - 7 months to make up for the losses run up by his daughter Soundharya's childishly ambitious 'Kochadaiyan'.

Who could do a decent job within that time frame? K. S. Ravikumar was commissioned who, in my opinion, is a smart, commercial project leader and less of a tactful creator. Nonetheless, he ideally suited the project.

With all the internal machinations of Kollywood distribution/settlement nuances, the film was produced, dubbed in multiple languages, screens acquired, rights sold, audio launched and released world-over - all within 7 months!

Either the effort of such humongous nature showed badly or every contributor to the film took their role for granted, riding on Rajini's presence, we do not know.  The result is a 3 hours dragging, non-technical, not at all creative waste of resources.

The film has a beaten down, cliched storyline (even this reference about Tamil big star movie scripts is becoming cliched), which follows the line of Rajini doing good for the community, sacrificing all his wealth and goodwill. In the process, he gets ostracized by the same people and bound by an oath (to a non-determinant English collector!), he leaves the dam that he helped build and the community and leads a simpleton life.

His grandson, also Rajini, a petty thief, comes back after 70 years and restores the pride of his grandpa by fighting the useless looking villain, Gajapathi Babu, the local MLA.

Rajini looks so old that all the efforts to make him look younger by graphics, wigs (with that unkempt extra tuft of hair on all sides), scarves always around the neck, fancy dresses - all highlight his inability to walk fast, deliver dialogues fast, emote adequately, in short, show his age.

I felt pity, without knowing for whom.

Is he stretching himself for more money? Or more achievements in the industry? Or to further the secretly nurtured political ambitions? Or is he being goaded to accept these projects by the industry, family or friends?

Whatever it is, the writing seems clear to me. Lingaa should be his last or one among the last of the projects of an illustrious career.

Now the other non-contributing factors of the film:

A R Rahman should stop accepting Rajini projects for he had not done anything satisfactorily for him. There is reason to believe that he is one composer who needs creative space and ample time to bring out better albums - both rare commodities in a Rajini film.

The songs of Lingaa - better not to mention. A poor shadow of past and certain tunes (sung by SPB) are so lacklustre that it baffles an ARR fan in particular and a music lover in general. BGM scoring though ambles through the 3 hour film, it is unobtrusive and hence non contributory.

The Santhanams, Vijayakumars, Ponvannans, Sundarrajans... what a crowd! and what a waste!

Why would a director/casting consultant have two huge (literally) heroines, Anushka and Sonakshi Sinha paired against a weak looking, paunch-protruding hero? Both the leads look so fat and a complete misfit to the hero.

When Tamil film industry is doing a turnaround with low budget, technically solid and decent scripted movies, why would a team put this film out with all the best resources possible to be commanded?

Sunday, October 14, 2012

Ilaiyaraja - The Composer Par Excellence

Haven’t we all seen enough farcical interviews with celebrities, dishing out the same archaic questions with formulaic patterns and clichéd expressions? Have we not wondered on the credibility and the preparedness of the interviewers? On why interviews can’t be more thought provoking? On why can’t, instead of being superficial on issues or delving on only the laurels of the interviewee, the interaction be honest and bring out the unknown secrets of the accomplished who is sitting across the table?

I have seen scores of such empty conversations laden with empty euphemisms or stage-managed outpouring of emotions. This is so true, especially with Indian filmdom and more so in the Tamil filmworld.


In previous interviews of Ilaiyaraja, as always is the case, questions were asked by lesser mortals on how he wrote that score or this; how he met that director or this musician; how he felt about that success or this failure.

None had ever moved closer to the man’s genius or for that matter ever attempted to unravel the mystery surrounding his working style, thought processes in writing music and only felt too enamoured to unfacade his philosophical utterances. 


Till I saw Gautam Vasudev Menon’s interview with Ilaiyaraja in the pretext of Neethaane En Ponvasantham’s audio launch, this remained so true that I started watching this interview with oh-no-not-again feeling.

I was wrong. Pleasantly so.

The interview, which lasted 45 minutes in all, was refreshing, eloquent and was a well-planned search of Ilaiyaraja’s musical philosophy.

All that I had longed to know about his creative process, his comfort zones and his understanding of music and its creation was queried by Goutam.  Goutam was a class act in the process, equal in task, in the unnerving presence of Raja and deftly stayed clear of the 'throw-you-off-the -guard' philosophical expressions of Raja.

The thoroughness of Goutam’s seemingly questionnaire (though he never looked at one), stemmed from the fact that he is an accomplished writer himself. His eloquence was to the fore when his questions, even when they were long and were about complex themes, as it was clear and precise in argument too. His style was not flowery, not rustic and not at all adulatory.

Raja, on the other hand, was relaxed, welcoming and approving of Goutam’s searching questions. It was as though he was waiting for such a moment to happen and was ready to share his understanding of music and its creation. Surprising, as Raja is known for his uninteresting interviews where he usually turns out to be a nervous man, always ready to jump at a discordant note or return back to his disarming philosophical reverse questioning mode.

Probably the rarity of the musical score of Neethaane En Ponvasantham, as he admits, did the trick.

Raja’s thought process in creating music

There are certain elements, which he describes as his basis while writing music, while Goutam asks him pointedly about the thought process.

“I need to be true to myself first”, says Raja and continues, “I should not fall into any fixation that a given director needs/deserves this music”. This, I feel, has more toward his equality and commitment to all the directors with whom he had worked - irrespective of their merits, and towards his own creative conviction. He further elaborates that he should not have any motivation while he starts writing the music! 

A very deep observation.  Best understood by a factual expansion of his first statement - which he does not show any emotion to the cast, crew or budget or to any other extraneous parameters but is only commissioned on the theme and what it demands from him.

“Music should happen on the spot; at that moment”, he says, an often repeated system of Raja, this time with an analogy. “A sculpture transforming at the hands of the sculptor, freezes in time when it attains its finality. It stays that way for centuries to come; music should happen and it happens to me thus. It has to flow spontaneously”.

Discerning the Discipline and Dedication in Music Creation

When Goutam admits that his understanding of music was defined by Raja’s songs through his youth, he also mentions that he was hesitant to approach the man with whose music he grew up with. He was only waiting to attain a stage (after 12 successful films) when Raja would feel comfortable working with a him, now a seasoned creator, a successful one with a reasonable music-to-visual sense.

 “The creation and presentation of NPV’s (Neethaane En Ponvasantham) music is a new experience to me; it has never happened to me with anyone…” was what Raja says - a very strong statement for a man whose career had spanned more than 36 years and with scores for over 950 films.

“I know the dedication of the musician to his instrument; I also know how it should sound when a group of musicians play a single note in unison,” defining the musical discipline, which he is often feared for.

The Process of Writing Music

Raja’s method of writing scores is self-balanced, he says. The aural volumes of different instrument sections are built into the score and hence the engineers do not need to balance the volumes after the recording. He further explains that as he writes the score, he decides, again spontaneously, which instruments groups need to be engaged at which point, and how many instruments are needed in each group. It was amazing when he said that for a certain song in NPV he had originally written the music for 12 string instruments but on inspecting the recording theatre, he had to cut down on the number of violins to engage as he felt so many would sound harsh.

Musical Genre of Neethaane En Ponvasantham


“I realized that I am capable of writing this kind of music after I finished writing this…” said Raja. He and Goutam discuss about how the Hungarian conductor and the British musicians and engineers, while working for the NPV album, had said that the music was not western classical music nor could it be classified as Indian music.

“Watch out for this new genre of music, Goutam. This sounds new. And this is Raja’s music” was what the conductor from Budapest had said. “This is world music and you cannot name it”, should have been nostalgic to Raja’s ears who had called his first non-film album, ‘How to name it?’ 25 years ago.

Differentiating between Similar Situations and Creating New Musical Scores – Avoiding ‘Musical Intention’

How does he differentiate between what to offer for a specific situation –even when he had to listen to hundreds of directors demanding thousands of tunes for romantic scenes? How had he ensured that he delivered a different sounding song every time?

Here is where the mastery, the unbelievable precision and the razor-sharp memory weigh in. While writing the score, he says he could realize whether the incumbent tune resembled any of his other tunes. What results is a spontaneous rendering of an alternative tune. “There should be no intention” he says.

The Musical Journey

“How can I define? I have lived my life. I followed it, committed mistakes, learnt from them and disciplined myself”, Raja muses. Philosophically, he states that, “Raja is dead. I am lost. How can I bear myself praising myself? Haven’t I learnt only this much? With all my limitations, I do not know how my composition pours out as music. The moment I could decipher that mystery, I will stop”.

Resonance with the Masses

Thousands everyday listen to his music. He has provided solace and happiness tomillions through his compositions. How does he see this contribution?

A wonderful analogy then flows from the Maestro. He uses the ‘Alpha Rhythm’ principle which states that one of the two instruments, placed close to each other, will resonate in accordance, when the other is strung – if both are in tune.

He, another rarity of this interview, muses, “In the beginning (of my career), I used to wonder. After the success of Annakili (his first film 36 years ago), I used to ask myself - why do the masses like this music? Why do they accept that this is good? I have not canvassed them. I did not persuade them to listen to my music. Yet why are they loving this?

In a profound statement, Raja then declares that that was not him who made the millions happy by providing the music. It was the people who have made themselves happy by identifying themselves with his music. His music was theirs. They were already attuned and his music touched that right concordant note.

Profound indeed. And brilliantly presented.

Legacy of Raja’s Melodies

Signifying the anguish of many original creators who feel that the current generation is often fed with lesser music – living the short-lived life purely by the packaging and by the different sounding recording, Goutam felt that ‘this (Raja’s) is music; this is classic; and this is style. This should be taken to the younger generation. In a bold new sound, Raja's melodies, as heart and soul, will be the new music of the new generation.’

“I want to talk to them. Interact with them. I want to reach out to the people and pass my experience to the future generation”, Raja’s statement concludes as the well-choreographed interview draws to a close.

I could see that it was Goutam’s easy approach which made the great man reveal so much about his beliefs and processes. The interview, I am sure, would have been a first for Raja too, as he often emphasizes about the uniqueness of NPV's music and about its creation process.

Kudos to Goutam Vasudev Menon!

Saturday, October 13, 2012

விருமாண்டி - நேர்மையின் காதல்

த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து...


அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்தில் பார்க்க முடியுமோ அத்தனைக் கோணத்திலும் பார்த்து விமர்சனங்கள் வந்ததுண்டு.  தேவரினத்தை தூக்கிப் பிடிக்கும் கதை, தென் தமிழகத்தில் நிலவும் கடிய சாதிய அமைப்பை விமர்சிக்கும் படம், இனக்குழுக்களுக்குள் பலியாடாக மாறியலையும் இளைஞர்களின் கதை, மடிந்து வரும் விவசாயத்தை பற்றிய விமர்சனம், காவல் துறை/நீதித் துறை/சிறைத்துறைகளுக்குள் நிலவும் ஊழலைப் பற்றிய விமர்சனம்...

இது போக, அந்தத் திரைப்படமே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் 'மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம்' என்பதுவும் ஒன்று.

ஆனால், பற்பல வருடங்கள் கழித்து மீண்டும் விருமாண்டியை மீண்டும் பார்த்த போது இயக்குனர் கமல் ஹாசன் அந்த கதைக்குள் பொதிந்திருக்கும் ஒரு மிக அழகிய காதல் - எவ்வித தயக்கங்களுமில்லாத, நேரடியான, உணர்வுபூர்வமான, அதனாலேயே பச்சை வாசனை அடிக்கிற காதல், என்னை தாக்கியது.

என்னைக் கேட்டால் மேற்கூறிய விருமாண்டியை பற்றிய அத்தனை அடையாளங்களையும் மீறி, தமிழ் திரையில் வந்த மிக உணர்வு பூர்வமான ஒரு காதல் கதை என்று ஐயமில்லாமல் கூறுவேன். படத்தின் நீளக் கணக்குப்படி பார்த்தால், அன்ன லட்சுமியும் விருமாண்டியும் திரையில் காதலர்களாக வரும் பகுதி மிகக் குறைவு. ஆனால், அவர்களின் பாத்திரப் படைப்புகளும், வசனங்களும், அபிராமி-கமல் நடிப்பும் என் புலனில், அன்ன லட்சுமி-விருமாண்டி காதலை செதுக்கி விட்டன.

மிகக் குறைந்த உரையாடல்கள்...

இத்தனைக்கும், அவர்களிருவரும் ஒன்றாக இருக்கும் போதெல்லாம் அவனின் துடுக்குத் தனமான பேச்சே முன்னிற்கிறது; அவளின் வெட்டி விடும் வார்த்தைகள். நெருக்கம் கூடக் கூட, அவன் அவளிடம் தன் இயலாமைகள், ஆதங்கங்கள், பொருமல்கள் என தன்னைத் திறக்கிறான். அவள் மெதுமெதுவே ஒரு தோழியாக மாறுகிறாள். கொலைகள் நடக்கும் போது, கிணற்றுக்குள் அமர்ந்து, அன்னலட்சுமியின் மடியில் தலை புதைத்து விருமாண்டி அழுதவாறே பேசும் இடம்!

ஊரை விட்டு கிளம்பி, நள்ளிரவில் நிலவொளியில் காட்டுக்குள் முயங்கும் போதும் ஓர் ஆழமான புரிதலே வெளிப்படுகிறது. அவள் நகத்தால் தன் மார்பில் காயமேற்படுத்தி காமம் கூடக் கூடும் காட்சியில், அப்படியோர் அந்தரங்கத்தை, காதலின் தனிமையை, வஞ்சிக்கப்பட்ட காதலை நான் எப்போதும் உணர்ந்ததில்லை.

யன்னல் கம்பிகளை பிடித்தவாறு நிலவை ஏக்கத்துடன் பார்த்து நிற்கும் புதுக் காதல் மனைவியை, விருமாண்டி கேட்கிறான் - 'என்ன விசனமா இருக்க? என்னடா, இப்படி ஒரு அசட கல்யாணம் பண்ணிக்கிட்டோமேன்னு நினைக்கிறியா?'. ஊரே பயப்படும் சண்டியர், சல்லிக்கட்டு காளையடக்கும் வீரன், ஊரில் பெரிய பணக்காரர்களில் ஒருவன் - கதை முழுதும் மற்றெல்லாவரிடமும் இதுதான் அவன் முகம்; முகங்கள். அவளிடம் மட்டும்தான் - அவன் தன் சுயத்துடன் நிற்கிறான். அவளை முழுமையாக நம்புகிறான்; விளையாட்டுதனத்துக்கும், சிரிப்புக்கும், குறும்புகளுக்கும், நையாண்டிக்கும் இடையே எப்போதும் அவன் கண்களில் அவள் மேலான மதிப்பும் (ஆம், மதிப்பு), நேசமும், காதலும் வழிந்து கொண்டேயிருக்கிறது.

காதலி/மனைவி இறந்து நாயகன் தனித்து வாழும் எத்தனை படங்களை பார்த்திருப்பீர்கள். விருமாண்டி, படத்தில் பேச்சு போக்கில் - 'அன்ன லட்சுமி இல்லாத வாழ்க்கை',  'அன்ன லட்சுமி இல்லாத இந்த வாழ்க்கை', என்று கூறுவதில் தெரியும் அவன் உணர்வு; அவன் நேசம்; அவர்களின் காதல். 'என்ன பெத்தா! (என் தாய் - அன்ன லட்சுமியை சொல்கிறான்), அவ இருந்தா, நான் இன்னிக்கு இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன்', என்று அவன் கூறும் போது என் மனதில் எழுந்த உணர்வுகளுக்கு வடிவமில்லை.


ஏஞ்சலாவிடம், சிறைக்கூடத்தில் தன் கதையை விவரிக்க ஆரம்பிக்கும் போது கூட, அன்ன லட்சுமியிலிருந்துதான் அவன் விவரணை தொடங்குகிறது. (மாறாக, கொத்தாளன் அவன் கதையை கூற ஆரம்பிக்கும்போது, தன் குல பெருமை, தன் ஊர் பெருமையில் தொடங்கி விருமனை பழிசொல்லி நகர்வதைக் காணலாம் - இது போல் படம் முழுதும் அவ்வளவு ஒப்புமை விவரங்கள் பொதியப்பட்டிருக்கிறது) மார்பில் அவள் நகத்தால் கீறி ஏற்பட்ட வடுவைக்காட்டி, "இது என்ன தெரியுதா? என்னோட ஆயுள்ரேகை;என் விதி; அன்ன லட்சுமியோட ஞாபகம்; அவ நகம்" என்கிறான்.


ஒரே ஒரு வடு - ஆயுள் ரேகையாகவும், விதிக் கோடாகவும், காதலியின் ஞாபகமாகவும் மாற வேண்டுமென்றால் அந்த காயமும் அதை உண்டாக்கிய காதலும் என்ன வலுவும், வலியும் நிறைந்ததாக இருக்க வேண்டும்! அந்த காட்சியில் ராஜாவின் பின்னணி இசை அத்தனை அவலமும், தன்னிரக்கமும் கூட்டி மறக்க முடியாத நிகழ்வாக மாற்றி விடுகிறது.


என்ன ஓர் உண்மை! வெளிப்பாடுகளில் அற்புதமான நேர்மை!

கொத்தாளத் தேவர், நல்லம நாயக்கர், கொண்ட ராசு, கோட்டைச் சாமி - என ஒவ்வொரு பாத்திரப் படைப்பும், எடுத்துக் கொண்ட கதைக்கான நேர்மையின் உச்சம். இதில் கொத்தாளத் தேவர், நல்லம நாயக்கர் இவ்விருவரிடையே உள்ள போட்டியை - நல்லம நாயக்கரின் வார்த்தைகளிலோ, அவரது ஆட்களின் வசனமாகவோ, கமல் நிரூபிக்கவில்லை. விருமாண்டி - கொத்தாளன் இருவரின் கோணங்களில் சொல்லப்படும் கதையிலும் அதுதான் நிலை. கத்தி மேல் நடப்பது தான் இது! தென் தமிழ் நாட்டில் முக்கிய சாதிய அமைப்பாக விளங்கும் முக்குலதோரியிடையே ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட கதைஅமைப்பு, கமலின் திரைக்கதை அமைப்புக்கு ஒரு சான்றே.

கொத்தாளன் மற்றும் விருமாண்டியின் பாத்திரங்களின் உளவியல் கூறுகளை, இத்திரைக்கதையின் மூலமாகவும், உரையாடல்கள் மூலமாகவும் ஆய்ந்து யாராவது எழுதினால், நல்ல திரைகதை மற்றும் பாத்திர படைப்புகளுக்கு பழகுவோர்க்கு உதவியாக இருக்கும்.

கொத்தாளனின் பாத்திர வார்ப்பு - தமிழ் திரைப்படங்களில் இல்லாத ஒன்று; இனியும் வரும் என்று தோன்றாத ஒன்று. மூக்குத்துவார முடி திருத்தி, அக்குள் மயிர் வழித்து, எப்போதும் நீறணிந்து, சுத்தமான உடைகளில் - வஞ்சமும், வெறியும் வழியும் வார்த்தைகள்! என்ன ஒரு நடிப்புத் திறன், உயரிய நேர்த்தி!


இதற்கிடையே, விருமாண்டியின் (கொரிய திரைப்பட விழாவில்  "ஆசிய சிறந்த திரைப்பட விருது' வழங்குகையில் குறிப்பிட்டது போல்) சிறப்புகளில் மிக முக்கியமானதொன்றாக நான் கருதுவது - பேச்சியம்மா, பேய்க்காமன் முதலிய நாட்டார் காவல் தெய்வங்களின் பின்னணியும், பூசைகளும், நம்பிக்கைகளும், பாடல்களும் படத்தில் பயன்படுத்தியிருக்கும் விதம் விருமாண்டி காலம் கடந்த நிற்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.

பாடல்கள், பின்னணி இசை, தள அமைப்பு, படப்பதிவு - போன்றவற்றின் ஆதிக்கம் தெரியா வண்ணம் கதையும், பாத்திரங்களும் இருந்தும் ராஜாவின் அற்புத பின்னணி இசை - சிறைக்கூட காட்சிகளில் அபாரம்.

கமல் என்ற அரிய கலைஞனிலும், அரியதாகவே கைகூடும் வெளிப்பாட்டு நேர்மை 'விருமாண்டி'யை ஓர் உன்னத காவியமாக்குகிறது.

Tuesday, June 26, 2012

S. ஜானகியின் சிறந்த பாடல்கள்


ஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்திருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங்கள் மற்றும் மக்கள் விரும்பிய பாடல்களில் அவரின் பங்களிப்பு என பற்பல வகைகளில் பகுத்திருக்கக் கூடும்.

நானும் என் மனதுக்கு பிடித்த ஜானகியின் தமிழ் திரை இசைப் பாடல்களை தொகுத்திருக்கிறேன். இந்தத் தொகுப்புக்கு மேற்கூறிய எவ்வித மேதைமை பொருந்திய அளவீடுகள் இல்லை. இவை முழுக்க முழுக்க என் கணிப்பில், என் ரசனையின் குறைபட்ட வட்டத்துக்குள் என்னை மகிழ்வுடன் உலவ வைத்த தனித்துவம் கொண்ட பாடல்கள் மட்டுமே.

எனக்குப் பிடித்த ஜானகியின் தமிழ் திரை இசைப் பாடல்களின் பட்டியல்

- என்ன மானமுள்ள பொண்ணுன்னு மதுரையில - சின்ன பசங்க நாங்க


- சின்னத்தாயவள் தந்த ராசாவே - தளபதி


- மெட்டியொலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட - மெட்டி, ராஜாவுடன்


- நதியிலாடும் பூவனம் - காதல் ஓவியம்


- ராசாவே உன்ன நம்பி - முதல் மரியாதை


- தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே -


- கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும் - அவள் ஒரு தொடர்கதை


- பூமாலையே தோள் சேரவா - பகல் நிலவு


- வைதேகி ராமன் கை சேரும் காலம் தை மாத நன்னாளிலே - பகல் நிலவு


- நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை - பாலூட்டி வளர்த்த கிளி


- கனவோடு ஏங்கும் இளம் பூங்கிளி - அன்பே ஓடி வா


- மஞ்சக்குளிச்சு அள்ளி முடிச்சு - பதினாறு வயதினிலே


- புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை - அலைகள் ஓய்வதில்லை


- பூவே பனிப் பூவே நானும் மலர் தானே -


- நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே - ஆத்மா


- கொத்தமல்லிப் பூவே புத்தம்புது காத்தே - கல்லுக்குள் ஈரம்


- எண்ணத்தில் ஏதோ சில்லென்றது - கல்லுக்குள் ஈரம்


- செந்தூரப்பூவே - பதினாறு வயதினிலே


- குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய் - கவிக்குயில்


- அடடட மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலியே - சிட்டுக்குருவி


- தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் சிந்தும் - நிழல்கள்


- என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது


- பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் - கழுகு


- ஓலைக்குடிசையிலே பழஞ் சேலைக்குள் - ஆனந்த்


- அழகு ஆயிரம் உலகம் முழுவதும் - உல்லாச பறவைகள்


- எந்தப் பூவிலும் வாசம் உண்டு - முரட்டுக் காளை


- அன்னக்கிளி உன்னத் தேடுதே - அன்னக்கிளி


- மச்சானப் பாத்தீங்களா - அன்னக்கிளி


- பொன் வானம் பன்னீர் தூவும் இந்நேரம் -


- நாதம் என் ஜீவனே - காதல் ஓவியம்


- காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே - ஜானி


- வசந்தக் கால கோலங்கள் - தியாகம்


- நதியோடும் கடலோரம் ஒரு ராகம் அலைபாயும் - ஆவாரம்பூ


- பூவரசம்பூ பூத்தாச்சு - கிழக்கே போகும் ரயில்


- இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ - கொக்கரக்கோ


- தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு


- வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம் - முதல் மரியாதை


- நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு


- தேன் சிந்துதே வானம் - பொண்ணுக்கு தங்க மனசு


- உள்ளம் எல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குளே ஏதேதோ - தூரத்து இடி முழக்கம்


- சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி


- எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ


- சின்னக் கண்ணன் அழைக்கிறான் - கவிக்குயில்


- ஏதோ மோகம் ஏதோ தாகம் - கோழி கூவுது


- நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில்



- காற்றுக்கென வேலி கடலுக்கென்ன மூடி - அவர்கள்


- இப்படியோர் தாலாட்டு பாடவா - அவர்கள்


- நினைத்தாலே இனிக்கும் - நினைத்தாலே இனிக்கும்


- பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் - நினைவில் ஒரு சங்கீதம்


- போட்டேனே பூவிலங்கு - பூவிலங்கு


- வான் மேகங்களே வாழ்த்துங்கள் - புதிய வார்ப்புகள்


- அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை


- மௌமான நேரம் இள மனதில் என்ன பாரம் - சலங்கை ஒலி


- பால கனகமய - சலங்கை ஒலி


- தேவன் கோயில் தீபம் ஒன்று - நான் பாடும் பாடல்


- தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ - தூறல் நின்னு போச்சு


- உறவெனும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் - நெஞ்சத்தைக் கிள்ளாதே


- அழகிய கண்ணே உறவுகள் நீயே - உதிரிப் பூக்கள்


- வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் வேண்டும் - அவள் அப்படித்தான்


- நான் உந்தன் தாயாக வேண்டும் - உல்லாசப் பறவைகள்


- தேனருவியில் நனைந்திடும் மலரோ - ஆகாய கங்கை


- மலர்களே நாகஸ்வரங்கள் மங்கள தேரில் - கிழக்கே போகும் ரயில்


இந்தப் பட்டியலை எழுதி முடித்துப் வாசித்து பார்க்கையில் சில குறிப்புகள் தோன்றுகின்றன:

- ராஜாவின் இசையில்தான்  ஜானகியின் குரல் வளம், வீச்சு மற்றும் நுட்பம் உச்சத்தில் இருந்திருக்கிறது மற்றும் ராஜா ஜானகியின் திறமையை மிக ரசித்து, தெரிந்து அவரை பாட வைத்திருக்கிறார்

- ராஜா ஜானகிக்கென்றே பாடல்களை உருவாக்கி தந்திருக்க வேண்டும்

- வெற்றி பெற்ற ஜானகியின் பாடல்கள் இரண்டு மூன்று பாடல்களாக சில  வெற்றி  பெற்ற படங்களில் இடம் பெற்றிருக்கின்றன - அவர்கள், கவிக்குயில், தளபதி, உல்லாசப் பறவைகள் - இப்படி

இவற்றில் ஒவ்வொரு பாடலுக்கான என் சுய அனுபவ குறிப்புகளுடன் எழுத வேண்டுமென்ற ஆவலிருக்கிறது. பார்ப்போம்.


Sunday, October 16, 2011

இளையராஜாவின் 'வானம் எங்கே மேகம் எங்கே'

இளையராஜாவின் இசை ஓர் அரிய ஞானம் போல். எது எப்போது தேடி வர வேண்டுமோ அப்போது வரும். எப்போது வரும், வர வேண்டும் என்று யாரும் சொல்லி விட முடியாது.

இந்த ஞானம் எனக்கு மிகச் சமீபத்தில் தான் வாய்த்தது.

அந்த நிகழ்ச்சியை சொல்கிறேன்.

பிறந்ததிலிருந்து (நான் பிறந்ததை சொல்கிறேன்) ராஜாவின் இசையோடு தான் வாழ்ந்து வருகிறேன். அன்னக்கிளி தொடங்கி இப்போதைய 'குன்னத்தே கொன்னைக்கும்' வரை அவரின் பாடல்கள் இல்லாமல் என் காதல்கள், நட்புகள், துக்கங்கள், இழப்புகள், வரவுகள் எதுவும் இருந்ததில்லை. 

எத்தனையோ நல்ல பாடல்களை (உருப்படாத படங்களினால்) கேட்கத் தவறி, மிக பிற்பாடு கேட்டதுண்டு. இன்னும் கேட்காத சில பாடல்கள் இருக்கக் கூடும். நம்ப முடியாத பல சந்தர்ப்பங்களில் அவற்றை தேடி அடைந்திருக்கிறேன். 

ஆனால் 'நெஞ்சிலாடும் பூ ஒன்று' என்ற படத்தில் வரும் 'வானம் எங்கே மேகம் எங்கே' என்ற பாடலை இந்த மாதம் நான் கண்டடைந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சி கரை காண முடியாதது. 

கர்நாடக சங்கீத ராகங்களில் அமைக்கப்பட்ட ராஜாவின் பாடல்களை தேடி கொண்டிருந்த போது இந்த வைரம் சிக்கியது. அமிர்தவர்ஷிணி ராகத்தில் அமைக்கப்பட்டு, ஜானகி - ஜெயச்சந்திரன் பாடிய பாடல். முதல் முறை கேட்ட போது எப்படி இத்தனைக் காலம் இந்தப் பாடலை கேட்காமல் பிரிந்திருந்தோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. 

மீண்டும் மீண்டும் கேட்க, ராஜாவின் இசை ஓர் அரிய ஞானம் போல என்ற தெளிவு தோன்றியது.

அப்படி என்ன விசேஷம்?

நான் முன்பொரு பதிவில் கூறியிருந்தது போல், ராஜாவின் பல அருமையான வெற்றி பாடல்களில் ஒரு கிரியேடிவ் ரஷ் இருக்கும்; சில பாடல்களில் மட்டுமே மிக மென்மையான நிதானம் கூடும். 'வானம் எங்கே மேகம் எங்கே' அப்படியொரு பாடல்.

பல்லவி, இரு சரணங்கள் மற்றும் இரு இடையீடு இசைக்கோர்வைகள் அனைத்தும் மிக மென்மையாக, மிக நளினமாக மிதக்கின்றன. ஆரம்பம் பேஸ் கிடாரோடு ஆரம்பித்து ஒவ்வொரு இசைக்கருவியாக சேர்ந்து வேறொரு தளத்திற்கு போக ஆரம்பிக்கும் போது, குழுவின் கோரஸ் சேர்க்கிறது. 

கவுன்ட்டர் பாயிண்ட் உத்தியில் இசைக்கப்பட்டது என்று தோன்றும் வண்ணம் அந்த கோரசுடன் ஜானகி லீடில் சேர்ந்து பாட, பாடல் மெதுவே எடை குறைந்து லேசாகிறது. நம் மனமும்.

பல்லவி முடிந்து முதல் இடையீடு இசையில் ஆரம்பிக்கும் ஒரு பிரமாத வயலின் பிட் முடிந்ததும் மீண்டும் கோரஸ். இந்தப் பாடலின் அற்புதத் தன்மைக்கு முக்கிய காரணிகளில் ஒன்று கோரஸ். ராஜா கோரசை வயலின் ஆர்கெஸ்ட்ரா போன்றே உபயோகித்திருக்கிறார். 

அவரது பாடல்களில் வரும் விரிவான வயலின் ஆர்கெஸ்ட்ரா இசையை ஏறக்குறைய கோரசுக்கும் ஜானகிக்கும் பிரித்து பின்னணி-லீட் என்று அமைத்திருக்கிறார்.

முதல் இடையீடு இசை முடிந்து ஜெயச்சந்திரன் 'விண்மீன்கள் தாலாட்ட' என்று ஆரம்பிக்கும்முன்னால் வரும் குழல் இசை வழக்கம் போல் ஒரு பாரில் முடியாமல் இரண்டு பார் வரை நீள்கிறது. 

இரண்டாம் இடையீடு இசையில் காம்போ ஆர்கனை அடுத்து வரும் ஓர் வயலின் ஆர்கெஸ்ட்ரா மனதை தடவ, கோரஸ், அடுத்து ஜானகியின் ஹம்மிங் உருக்குகிறது. மிக மிக எளிமையான ரிதம். 

தவற விடவிருந்த இந்த வைரத்தை நான் கண்டு கொண்டது முதல் ஒரு நாள் ஒரு தடவையேனும் கேட்காமல் இருப்பதில்லை. நீங்களும் ஆளரவமற்ற இரவின் தனிமையில் கேட்டுப் பாருங்கள் - விழிகளின் அடைப்பில் மனம் திறப்பதை உணர்வீர்கள்.





Click to hear music file

Sunday, May 15, 2011

உயிர்க்கலைஞன்

ராகங்கள் நாவடக்கி 
சேவகம் செய்வதை பார்க்கிறேன்
தனிமனிதன் இசையின்
தரணி ஆள்வதை காண்கையில் 
இவன் எந்த
பரணியில் பிறந்திருப்பான் என
எண்ணத் தோன்றுகிறது

எவருக்கும் இளையாதவனாய்
இசைக்கு மட்டும் வளைபவனாய்
வந்துதித்த தேசத்தில்
வாழ்கின்ற பேறு பெற்ற
எம்மையும்
இசை வந்து தீண்டட்டும்
கருவிகளை இசை
அருவிகளாய் ஆக்குபவனும்
எம் நாத தேவனுமாகிய
இளையராஜா
நீடூழி வாழ்க
நல்லிசை தருக. 

- 23/07/86

Saturday, October 9, 2010

நானும் சில பாடல்களும் - 1


எல்லோருக்கும் திரைப்பாடல்கள் அவர்களது வாழ்வில் இயைந்திருக்கும் காலங்களை நினைவுகூர முடியுமாயிருக்கும். என்னைப் பொறுத்தவரை என் வாழ்வின் பல சுவையான கட்டங்கள், சில துன்பியல் நிகழ்வுகள் மற்றும் பருவ வளர்ச்சி பரிணாமம் அனைத்தும் தமிழ் திரை பாடல்களில் கலந்தே நகர்ந்திருப்பதை உணர்கிறேன்.
பல பாடல்கள் அறியாத வயதில் கேட்டவை. தொலைக்காட்சி இல்லாத காலம். வெறும் வானொலி மட்டும் வீட்டில். அடுத்து ரெகார்ட் ப்ளேயர் (ஜப்பானிய தயாரிப்பு - நல்ல ரத்த சிவப்பில் இருக்கும்) வந்தது. வானொலியோடு இணைந்தது. பல பாடல்கள் அதில் கேட்டது. அதே கால கட்டத்தில் நண்பர்கள் வீடுகளில் தொலைகாட்சி வர ஆரம்பித்து விட்டது. அங்கே சில பாடல்கள். மிக சிறு வயதில் திரை அரங்குகளில் பார்த்த பாடல்கள். கேசட் ப்ளேயர் வரவு அடுத்து. அவற்றில் பல வசதிகள், பல மாடல்கள். மறக்க முடியாத, வாழ்வின் பகுதியாகி இறுதிவரை வரப் போகிற ராஜாவின் பாடல்கள் எண்ணங்களுள் நுழைந்த காலம். இறுதியில் இப்போதிருக்கும் ஐ போன் வரை வந்து விட்டேன்.

இப்போது பகுத்து பார்க்கும் போது, இந்த பல தரப்பட்ட பாடல்கள், பற்பல ஊடகங்களின் மூலமாகவும், மிக பற்பல வயதுகளிலும், பல மனச் சூழ்நிலைகளிலும் என்னை வந்தடைந்திருக்கின்றன என்பதை உணர முடிகிறது. 

ஷங்கர் கணேஷ் தொடங்கி நான் மேதைகளாக கருதும் எம்.எஸ்.வீயும் ராஜாவும் ஆக்கிரமித்திருக்கும் இந்த பட்டியலில், ஜி.கே.வெங்கடேஷ், வீ.குமார், டி.ராஜேந்தர் என்று பல இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். பாடகர்களில், டி.எம்.எஸ், எஸ்.பி.பி, கே.ஜே. யேசுதாஸ்ஜெயச்சந்திரன் இவர்களினூடே மலேஷியா வாசுதேவன் என்னை மிகவும் பாதித்த, நினைவில் தங்கி விட்ட பல பாடல்களை பாடி இருப்பது (எனக்கே ஒரு வித ஆச்சர்யத்துடன்) காண்கிறேன். 

மிகச்சிறு வயது நினைவுகள் (மூன்று முதல் ஒன்பது வயது வரை) நிறைய எண்ணவோட்டங்கள் எனக்குள் பொதிந்த காலம். பாடல்களும் அவ்வாறே. பதின்ம வயதிலும், கல்லூரி மற்றும் காதல் கார்காலங்களிலும் மிகப் பல பாடல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை பல காரணிகளால் மெதுவே குறைந்து இப்போதிருக்கும் சிங்கப்பூருக்கு வந்து சேரும்போது ஒரு பாடலைக் கூட இந்தப் பட்டியலில் காண முடியவில்லை.

ஒரு விஷயம். ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர், பரத்வாஜ், ஜி.வி. பிரகாஷ் போன்ற பலரின் பல பாடல்கள் எனக்கு இப்போது பிடித்திருந்தாலும் அவை இந்த பட்டியலில் இல்லாததற்கு ஒரு காரணம் உண்டு. இது எனக்கு பிடித்த பாடல்களின் பட்டியல் அல்ல. (இவற்றுள், பல பாடல்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்குள் எவ்வித ரசனையை தூண்டாத பாடல்கள் ஒரு சிலவும், வெறுமனே நிகழ்வுகளின் தொடர்போடு கடந்து சென்ற பாடல்களும் உண்டு). இந்தப் பாடல்கள் எங்கேயோ, எப்போதோ கேட்டும், ஏதோ ஒரு வகையில் மனதின் உள்ளில் போய் உட்கார்ந்து கொண்டவற்றின்  தொகுப்பே.  
மற்றொரு விஷயம். பாடல்கள் திரைக்கோ அல்லது தொலைக்காட்சிக்கோ வந்த கால வரிசைக்கும் நானவற்றை முதன் முதல் கேட்ட காலத்திற்கும் சம்பந்தமில்லை. பாடல் வந்து ஐந்தாறு வருடம் கழித்து முதல் தடவை கேட்ட பாடல்களும் உண்டு, வாழ்வில் ஓரிரு தடவைகள் மட்டுமே கேட்ட பாடல்களும் உண்டு. 

இனி நானும் சில பாடல்களும்...

ராயபேட்டையில் குடியிருந்தார்கள் என் பெற்றோர். நான் மதுரையில் பிறந்து சென்னைக்கு என் அம்மா என்னைத் தூக்கிக் கொண்டு வந்த பிறகு இரு வேறு வீடுகளில் வசித்தோம். அவற்றிலொன்று ஐஸ் ஹௌஸ் அருகே முஸ்லிம்களும் தெருவின் கடைசியில் குயவர்களும் வசித்த ஒரு தெருவிலிருந்த வீடு. ஞாயிற்று கிழமை ஆனால் பானை செய்வோர் சூட்டம் போடுவார்கள். தெருவே நல்ல வெயில் காயும் அந்த நேரத்தில் வெண்ணிற புகை படர்ந்து கண்களையும் தொண்டையையும் எரிய வைக்கும். தணிந்து முடிந்த சாயங்காலங்களில், அந்த வெக்கை, காற்றில் சுற்றித் திரியத் தான் கூட்டாளிகளுடன் விளையாடுவது. வீட்டுக்கு எதிரே, வாசலில் பசு மாடு கட்டியிருக்கும், அந்த வீட்டினுள்ளே பல முஸ்லிம் குடும்பங்கள் குடியிருந்தன. அவர்களுக்கே உரித்தான நிறங்களில் உடைகள், வாசனைகள், உணவுகள்...

அந்தக் குடும்பத்திலொன்று பீடி சுற்றுவார்கள். இரவும் பகலும். முற்றத்தை ஒட்டி  இருக்கும் இருளடர்ந்த தூண்களில் ஆளுக்கொன்றாக சாய்ந்து கொண்டு, பக்கத்தில் வானொலியை வைத்து கொண்டு, முறத்தில் பீடி இலைகளையும், தூளையும், செந்நிற மெல்லிய நூலையும் கொண்டு கருமமே கண்ணாக பீடிகள் உருமாறும். வெளியே தெருவில் திருடன் போலீஸ் ஆடும்போது, மாநகராட்சி குழல் விளக்கின் ஒளியில் இருந்து தப்பிக்க அந்த வீட்டுக்குள் அடிக்கடி ஒளிவதுண்டு. மூன்று அல்லது நான்கு வயதிருக்கும் அந்த நேரத்தில் தான் அந்த பாடலை பீடிக்காரகளின் வானொலியில் கேட்டேன்.  
'என்னருகே நீயிருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்

அப்போது அதை பாடியது பி.பி.எஸ், சுசீலா என்றெல்லாம் தெரியாது. ஆனால் நினைவு தெரிந்து நினைவில் பதிந்த முதல் பாடல் என்ற பெருமை அந்த பாடலுக்கே உண்டு. முஸ்லிம் பின்னணி, இருள் சூழல், பாடல் ஆரம்பத்தில் வரும் பேஞ்சோ-வோ அல்லது புல் புல் தாரா - வோ, மிக இனிமையான மிக துரித கதி இசைக் கோர்வை - இவை தான் காரணமாக இருக்க வேண்டும்.  அந்த பாடலை எப்போது கேட்க நேர்ந்தாலும் வெக்கை சூழ்ந்த அந்த அந்திப் பொழுதும், அதனூடாக காற்றில் வந்த அந்த பாடலும், பீடி மணம் கமழும் இருண்ட வீடும் தெளிவாக என் மனக்கண்ணில்  காண முடிகிறது.

பைலட் திரையரங்கு அப்போது ஒரு வரப்பிரசாதம். நல்ல சிவாஜி படங்கள் அங்கு வெளியாகும். அப்பா அம்மா இருவரும் சிவாஜி ரசிகர்கள். எனவே பைலட்டுக்கோ கொஞ்சம் தள்ளி மவுண்ட் ரோடிலிருந்த சாந்திக்கோ மாதொருமுறை கணேசன் படத்திற்கு (அப்பா அப்படித்தான் உரிமையாக அழைப்பது) அழைத்து செல்வார். அதற்கு விதிவிலக்காக பைலட்டில் 'தீர்க்க சுமங்கலி' (முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்தது) படம் பார்க்கப் போனோம். அம்மாவுக்கு விஜயாவையும் அப்பாவுக்கு முத்துராமனையும் பிடிக்கும் என்பதை தவிர அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்த மற்றொரு காரணமும் நினைவில் இருக்கிறது. 'ஒரு அருமையான பாட்டு இருக்கு படத்தில'.
'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
என்று துவங்கும் வாணி ஜெயராம் பாடிய அந்த பாடலின் ஆரம்ப இசை எம்.எஸ்.வியின் மேதைமைக்கு ஒரு சான்று. பெண்ணின் அருகாமையும் மல்லிகை மலரின் மணமும் அறிந்தவர்கள் அந்த இசைக் கோர்வையின் இனிமையை நுகராமல்  இருக்க முடியாது.  குழல், வயலின் கூட்டமைப்பு, ரிதம் கிடாரின் 2x2நடை பின்னி மெதுவே தளர் நடை பயிலும் பாடல். அகண்ட திரையில் பாடல் படமாக்கப்பட்ட விதமும், அச்சிறு வயதில், ப்ராயிட் கூறுவது போல் ஏதோவொரு கிளர்ச்சியான பாலுணர்வை சுரக்கச் செய்திருக்க வேண்டும்.

 அங்கிருந்து சிறிது தொலைவில் இருந்த மற்றொரு வீட்டில் தான் என் பெற்றோர் நான் பிறப்பதற்கு முன் குடியிருந்தார்கள். பெரியம்மா என்று நான் அழைத்த ஒரு முதியவர் தான் குடும்பத்தலைவி. திருமணம் செய்து கொள்ளாதவர். அவரது தம்பியும் (அப்போதே ரயில்வேயில் இருந்து ரிடையராகி விட்டிருந்தார்), மற்றொரு விதவைத் தங்கையும் அவரது மூன்று மகன்கள், மற்றுமொரு மகளுமென பெரிய குடும்பமாக வசித்தார்கள். அந்த வீட்டிலிருந்த மற்றொரு போர்ஷனில் குடியிருந்து பிறகு வேறொரு வீடிற்கு சென்ற பிறகும் இரு குடும்பத்தின் நட்பு தொடர்ந்ததற்கு இரு காரணங்கள்: ஒன்று குழந்தையான நான், மற்றொன்று இன்னொரு குழந்தையான என் அம்மா (ஆம், என் அம்மா அப்போது படு வெகுளியாக இருந்ததாக சொல்லக் கேள்வி). 

சனியன்று என் தந்தை வேலைக்கு செல்லும் வழியில் என்னை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு செல்வார்; மறுபடியும் ஞாயிறு மாலை வந்து அழைத்து கொள்வார். அதுவரை சிறு பிள்ளை இல்லாத வீட்டில் நான் தான் ராஜா. அப்படிக் கொஞ்சுவார்கள் என்னை. எனக்கென்று ஒரு பெரிய சைஸ் மரத் தொட்டில் இருக்கும். அதற்குள் தின் பண்டங்களோடு ஏற்றி விட்டுவிட்டு பக்கத்தில் வீட்டின் ஆண்கள் சீட்டு விளையாடுவார்கள். ஞாயிறு மாலை நான்கு மணிக்கு யார் எங்கிருந்தாலும் வானொலியை சத்தமாக வைத்து விட்டு வேலைகள் நடக்கும். 'நேயர் விருப்பம்' - முழ நீளத்திற்கு விரும்பிக் கேட்டவர்கள் பெயர்களை வாசித்து விட்டு புதுப் பாடல்களை ஒரு மணி நேரம் ஒலிபரப்புவார்கள். 

மறக்க முடியாமல் பதிந்து போன சில பாடல்கள் அப்போது கேட்டவையே. கமல் ஹாசன் முதன் முதலில் பாடிய 'அந்தரங்கம்' பட, 'ஞாயிறு ஒளி மழையில்', எஸ்.பி.பி பாடிய 'உத்தமன்' பட 'படகு படகு ஆசைப் படகு' பாடல் வரிசையில் அபூர்வ ராகங்கள் பட பாடலான ' அதிசய ராகம் ஆனந்த ராகம்'.

ராஜாவும் சரி, விஸ்வநாதனும் சரி நல்ல மெட்டாக இருந்தால் வழக்கமான இரண்டு சரணங்களுக்கு பதிலாக மூன்று அல்லது நான்கு சரணங்கள் அமைப்பதை பார்த்திருப்பீர்கள். அதில்  அதிசய ராகம் ஆனந்த ராகம் உண்மையிலே ஒரு அபூர்வ பாடல். யேசுதாசின் கந்தர்வ குரலும், வயலின் இசைக் கோர்வைகளும், சரணத்துக்கு சரணம் மாறும் மெட்டும்... மைதிலி, மாதவி போன்ற அழகான பெயர்களை முதன் முதல் கேட்ட அனுபவமும் காரணமாக இருக்கலாம்.

படகு படகு ஆசைப் படகு - அப்போது கேட்ட மற்றொரு பாடல். மூன்று சரணங்களுடன், பாடலின் நடுவே, அரேபிய இசைப் பாணியில் எஸ். பி. பி. 'லைலா'  என்று இழுத்து ஏற்ற பாலைவன பின்னணி இசையுடன் படுவது ஒரு மாதிரி 'ஹான்டிங்' ஆக நினைவில் இருக்கிறது. பல மூடுகள் மாறும் அந்தப் பாட்டு எங்கும் கேட்க முடியாத அபூர்வம். 


Sunday, May 16, 2010

Janaki Jaane

During my college days (1986 - 90), I had a friend named Dr. Hariharan, who had just then returned after completing his BAMS degree, an ayurvedic medical course from Kerala.

His family was originally from Palakkad, the border town between Tamil Nadu and Kerala. The people from the area spoke Tamil with an heavy accent of Malayalam and Malayalam with an equally heavy accent of Tamil, leading at times to a heady confusion to listeners as to what language they are being conversed with. Hari, was no different and as one could witness, the best of both these intertwined cultures, existed amicably in their lifestyle.

We shared a lot of common interests - music, poetry, photography and aspired to explore the possibilities of being a creator in all these, all the time. He used to share with me the best songs of Malayalam films - KJ Yesudoss, MG Srikumar, Hariharan (then a budding Ghazal singer - not into the films) and I introduced him to the nuances of Ilaiyaraja's mesmerising compositions.

It is during this period, I once came across a bajan-like film song on Lord Rama, rendered by K J Yesudoss with the opening line, 'Janaki Jaane'. Luckily that day, now I could recall, there were none in his house, where we were chatting one evening discussing music and it is in his good audio system that this casette was playing.

The setting was perfect; it was a pleasant sunset, cool breeze winding through the well-lit spacious living room and the song was mellifluously oozing and pervading the room.

Engrossed in our discussions, I was slowly taken over by the reverberating voice of Yesudoss. The voice! It occupied my mind and before the song could enter the stanzas or charanam, as it is called, and reach its crescendo, I was totally taken aback by the beauty of the composition and the selfless spiritual rendering of Yesudoss.

I am not sure whether the entire intricacy and beauty of the song sank into me then, but I am equally convinced that the song remained etched in my memories, stayed dormant for more than decades and surfaced when it had to.

Yesterday, as I was searching for a famous long forgotten old number of K J Yesudoss, I suddenly remembered this Rama bhajan, searched and found it in Youtube. As I played and started to listen for the first time after almost 22 years, I lost my entire spatial interaction and was taken into the soul of the song almost immediately.

Tears kept rolling all through the song and neither could I open my eyes.
Yesudoss' mastery and perfection in rendition can never be questioned. His quivering voice and his utter surrender and devotion to Lord Rama is expressed in unparalleled fashion in Janaki Jane. Without an absolute and unquestioned surrender to the Lord Supreme, whichever religion it may be, creativity of that sort from an accomplised, highly self-esteemed creator is impossible, I felt and believed.

It was as though I could vividly remember all the verses, instantaneously transporting me into a realm of nostaligic quagmire.

I remained silent for few minutes after the song ended and kept listening to it a number of times as if I was afraid that I might lose it back for decades...

When the logical and argumentative part of my senses regained, I searched and found that it was song from film called, "Dhavani" (Tone), a Malayalam film. Interestingly, the hindu devotional song on Lord Rama in Sanskrit, was penned by Yusuf Ali Kecheri, a Muslim lyricist and the music was composed by the legendary film composer, Noushad, a Muslim too! K J Yesudoss, a Chrisitian by birth, had transformed his soul into this evergreen bhajan! What a combination!

Is he not the Gaana Ghandarvan!

Now, dissolve into this endless ocean of devotion as Jesudoss navigates one through his voice...

"Janaki Jaane"

Thursday, January 7, 2010

இளையராஜாவின் 'இசையில் தொடங்குதம்மா'



சில வருடங்களுக்கு பிறகு, ஹே ராம் படத்தில் வரும் 'இசையில் தொடங்குதம்மா' என்ற பாடலை மீண்டும் அனுபவிக்க நேர்ந்தது. இரண்டு நாட்களுக்கு வேறு பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை என்பது மட்டுமல்ல, இளையராஜாவின் இசை ஆளுமையை நேர்கொண்ட உற்சாகம் அவரது உன்னதத்தை உணர வைத்தது.


பல்லாயிரம் பாடல்கள், பல்வேறு இசைகோவைகள் தந்த ராஜாவின் மிக அற்புத பாடல்கள் என்று யார் ஒரு பட்டியலிட்டாலும் 'இசையில் தொடங்குதம்மா' அப்பட்டியலில் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. பல காரணங்கள். மிக அபூர்வமாக இசைக்கப்படும் விவாஹப்ரியா ராகம் எப்படி கையாண்டிருக்கிறார், சாஸ்திரிய ஹிந்துஸ்தானி இசை எப்படி கலந்திருக்கிறது என்பது போன்ற வல்லுனர்கள் கூற வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் அந்த பாடலில் இருக்கலாம்.

என்னை போன்ற ஒரு சாதாரண ராஜா ரசிகனின் பார்வையிலும் அந்த பாடல் உள்ளத்தை உறைய வைப்பதற்கு சில காரணங்கள் உண்டு. அந்த பாடலை எழுதியதும் ராஜாதான். பாடியது பண்டிட் அஜய் சக்ரபோர்த்தி. படத்தில் அந்த பாடல் இடம் பெறும் சூழ்நிலையை இங்கே விவரிக்க வேண்டும். நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆண்டாள் பாசுரம் பாடும் தீவிர வைணவ குடும்பத்து இளைஞன்; புதிதாக திருமணமானவன்; மிக அழகிய, அவனை தவிர வேறொன்றும் அறியாத, மேலெங்கும் அறியாமை போர்த்திய மனைவி; இந்து இயக்க புரவலரான (இந்தியாவின் மேற்கில் ஒரு) மகாராஜா தரும் விருந்து; சூழலில் மது; திடீரென சமூக தளத்தில் கிடைக்க பெறும் அந்தஸ்து, கவனிப்பு - இந்த பின்புலத்தில் நடக்கும் இராவண வதம் விழாவில், இடம்பெறும் பாடல் அது.

இயக்குனர் கமல் ஹாசன் ராஜாவிடம் என்ன சொல்லியிருக்க முடியும், எவ்வளவு சொல்லியிருக்க முடியும் என எண்ணிப் பார்க்கிறேன். மதுவின் போதை, அழகி மனைவியின் போதை, ஒரு வகையில் தீவிரவாத அதிகாரம் தரும் போதை என்று நாயகன் தடுமாறுகிறான். காமம் அவனை சுழற்றுகிறது. சுற்றிலும் ஆட்டம், களி, வண்ணங்கள், விழாவின் மயக்கம் தரும் சைகெடலிக் குழப்பம்.

பாடல் ஒரு பின்னணி இசை போல அங்கே துவங்குகிறது. அவனது பேசும் குரல்கள் முன்னணியில் ஒலிக்கின்றன. மனைவி அறியாமையின் அழகோடு வாசனையோடு அருகே இருக்கிறாள். சோம பானம் அவனை வெறிகொள்ள செய்கிறது. இந்த மனநிலை, இந்த கலாசார பின்புலம்,  நாட்டின் தனித்தன்மை வாய்ந்த ஒரு பகுதியில் நடைபெறும் நிகழ்வின் பாடல்.

'இசையில் தொடங்குதம்மா' வில் வேறுபட்ட ராஜாவை காண்கிறோம்.

நௌஷாத் மற்றும் சலீல் சௌதுரி போன்ற மேதைகள் வெறும் தாள வாத்தியங்களின் ரிதம் அமைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு மாபெரும் வெற்றி பாடல்களை உருவாக்கினார்கள். ராஜாவும் சில பாடல்கள் அப்படி தந்திருக்கிறார். அதில் 'இசையில் தொடங்குதம்மா' உச்சத்தில் இருக்கும். நாயகனை சுழற்றியடிக்கும் பல்வேறு போதைகள் பாடலிலும் சுழல்கின்றன, தாள வாத்தியங்களின் விரைந்த அடுக்குகள், ஒன்றின் மேல் மற்றொன்று என ஒரு காம்ப்ளெக்ஸ் கோர்வையாக அமைக்கபட்டிருக்கிறது. தோலக், தபலா, முழவுகள், ராம லீலா உர்ச்சவத்தின் போது இசைக்கப்படும் கொட்டுகள் மற்றும் சிம்பல்கள்... முன்னெப்போதும் ராஜாவின் பாடல்களில் கேட்டிராத நரம்புகளை சுண்டும், உடலை பதற செய்யும் ஒரு தாளம்.

பொதுவாக ராஜாவின் பாடல்கள் அனைத்திலும் ஒரு கிரியேடிவ் ரஷ் தெரியும், முன்னிசை அல்லது இடையிசை ஆகட்டும், ஒரு ஸ்ட்ரிங், ஒரு விண்ட், ஒரு பெர்குஷன், மீண்டும் ஒரு ஸ்ட்ரிங் Orchestration என அடுத்தடுத்து இசைகோர்வைகள் ஒன்றை தொடர்ந்து இன்னொன்று வந்து கொண்டேயிருக்கும். அவற்றில் ஒரு பீஸ் 8 - 10 நொடிகளுக்குள் முடிந்து விடும். உதாரணங்கள் - தென்றல் வந்து என்னை தொடும், நினைவெல்லாம் நித்யா பாடல்கள்.

ஆனால் ஹே ராம் பட பாடலில், ராஜா அந்த கிரியேடிவ் ரஷ்ஷை முறைபடுத்தி, ஒரு கட்டுக்குள் வெளிபடுத்தியிருக்கிறார். முதல் interlude இல், ஒரு ஷெனாய்; இரண்டாவது interlude இல், ஒற்றை வயலின், பின்னால் ஒரு வட இந்திய நரம்பு கருவி (சாரங்கி / தில்ரூபா?). அவ்வளவுதான். அதுவும் ஒரு இண்டர்லுடில் ஒரே ஒரு அசைவு/movement . மற்றபடி பாடல் முழுதும் மிக சிக்கலான தாளம், தாளம் மட்டுமே. இது ராஜாவின் பாடல்களில் அபூர்வம். இரண்டாவது இடை இசையில் 12 தாள அளவுக்கு எந்த accompaniment -இம் இல்லாமல் தாளம் மட்டும் இயங்குவது ராஜாவின் வேறெந்த பாடலிலும் கேட்டதில்லை. இந்த கிரியேடிவ் அமைதியை ராஜா கைகொண்ட பாடல்கள் எல்லாம் (மிகசிலவேயானாலும்) அற்புதமான அமைப்புகள்: கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை), தூரத்தில் நான் கண்ட உன் மனம் (நிழல்கள்), தாலாட்டுதே வானம் (கடல் மீன்கள்)....

இவற்றிலும் மற்றும் மிகப் பல பாடல்களிலும், ரிதம் ஸ்டார்ட் - ஸ்டாப் முன்னிசை, இடை இசைகளுக்குள், சரணத்தில் என தாள நடை நின்று, நடை மாறுவதும், நின்று வேறு வாத்தியங்கள் துவங்குவதும் ராஜாவின் ஓர் உத்தி. 'இசையில் தொடங்குதம்மா' அதிலும் மாறுபட்ட பாடல். துவக்கத்திலிருந்து முடிவு வரை தாளம் எங்கும் நிற்பதில்லை. சுழன்று சுழன்று ஓர் உச்சத்திற்கு செல்வதும் சரணம் துவங்கியதும் மயங்கி மயங்கி கீழே சரிவதும் என அலகிலா மருகுதலாகவே இசை நிகழ்கிறது.

'நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே
உயிர்களே
உலகிலே இன்பத்தை தேடி தேடி
தேகத்தில் வந்ததே'

- இது இரண்டாவது சரணம். இதற்கு முன்னும் பின்னும் வரும் சுர சங்கதிகளில் அஜய் சக்ரபர்தியும் தாளமும் பிரிக்க முடியாதபடி பின்னி துள்ளுவது எழுத்தில் வடிக்க முடியாத அழகு.

உலக இசையை விடுங்கள், இந்திய இசையில், இந்த சூழ்நிலைக்கு, இந்த பாத்திரப் படைப்புக்கு, இந்தக் கலாச்சார பின்புலத்திற்கு இசை வேறு யாரால் சிந்தித்திருக்க முடியும்? எவ்வளவு ஓர் ஆழமான புரிதலும், உள்வாங்குதலும், மேதைமையும் இருப்பின், இந்த பாடல் பிறந்திருக்கும்? கை கூப்பி தொழத் தோன்றியது, அந்த பாடலை எத்தனையாவது முறையாகவோ அந்த நள்ளிரவில் கேட்ட போது...

இனி 'இசையில் தொடங்குதம்மா'....



IsayilThodanguthamma.mp3












Sunday, September 20, 2009

ஓ! எந்தோ!

ஜெயமோகன் ஒரு தடவை அவரது வலைப்பதிவில் திரைப்பாடல்கள் குறித்து எழுதி இருந்தார். சில பாடல்கள் அல்லது இசை துணுக்குகள் அல்லது சில வரிகள் கேட்கும் போது நாம் ரசித்து கொண்டிருப்போம். மெல்ல உள்ளே நுழைந்து நமக்கே தெரியாமல் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு விடும் அவை, பிறகு நமது எல்லா வேலைகளிலும் பின்னணி இசை போல மூளைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும்.


காலை கண் விழித்தவுடன் மனதில் முதலில் ஓடும் அந்த பாடல் வரியாகத்தான் இருக்கும்; பல் தேய்க்கும் போது; குளிக்கையில், உணவருந்தும் போது, பணிக்கு செல்லும் போதும் என தொடர்ந்து மனதின் மூலையில் ஒலித்து கூடவே வரும் அந்த சலனம் சில சமயம் தவிர்க்க கடினமாக இருந்திருக்கிறது. மூன்று நான்கு நாட்கள் கூட சில பாடல்கள் இவ்வாறு ஒலிப்பது உண்டு. மற்ற பாடல்களையோ இசையையோ நுழைய விடாமல் எண்ணத்தை அடைகாக்கும் ஆளுமை இவற்றிற்கு இருப்பதை அவதானிக்கிறேன்.

இவை ஒரு வகை என்றால், இன்னொரு வகை, எப்போதோ எங்கோ கேட்ட அற்புதமான அபூர்வமான சில திரைப்பாடல்கள் அப்படியே மனதின் உச்சக்கட்ட ஆழத்தில் உறைந்து போய் கிடப்பது.

அப்படிப்பட்ட, என்னில் சிறு வயது முதல் எதற்காகவோ பதிந்து, இன்றும் நான் தேடும் இரண்டு பாடல்களை பற்றி...

என்னுடைய பதின்ம வயதில் இளையராஜா தமிழ் திரைஇசையில் அசைக்க முடியாத இடத்துக்கு வந்து விட்டார். அப்போதிருந்து கேட்டு வந்த பாடல்களில் நான் மேற்கூறிய, சிறு வயது பொதிந்து, பின் தேடும் நிகழ்வு ஏற்படவில்லை. ஊடகங்கள் கூடி விட்ட காரணமோ, அன்றி ரசிப்பில் ஏற்பட்ட தெளிவோ நானறியேன்.

ராஜாவின் காலத்துக்கு முந்தைய பாடல்கள் அவை. எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம். என்றால் 1975. விஸ்வநாதனின் காலம். ரசித்து கேட்ட அவரின் அத்தனை பாடல்களையும் இன்றும் நினைவுகூர முடிகிறது, அவ்வப்போது கேட்ட முடிகிறது. மிக பெரும்பாலான பாடல்களை பல்வேறு தொகுப்புகளின் கீழ் நானே சேகரித்து வைத்துமிருக்கிறேன்.

ஆனால் இந்தப்பாடல்கள்?

முதல் பாடல் - ஒரு டூயட். பி. சுசீலாவும், ஆண்குரல் யாரென்று ஞாபகமில்லை, யேசுதாசாக இருக்கலாம். வீடுகளில் டேப் ரெக்கார்டர்கள் இல்லாத காலம். எனது வீட்டில் இருந்ததும் ஒரு ரேடியோ மற்றும் ரெகார்ட் பிளேயர் மட்டுமே. அப்போது ஆல் இந்தியா ரேடியோவின் விவித் பாரதி வர்த்தக ஒலி பரப்பில் கேட்டது அந்த பாடல்.

"பெற்றெடுத்தல் அன்னை கடன்
மற்றதெல்லாம் தந்தை கடன் - ஆண் குரல்

பிறந்தேன் ஒரு பிறவி - கண்ணா
உன்னை பெற்றெடுத்தேன் மறு பிறவி - சுசீலா

இது பல்லவி.

மிக எளிமையான வரிகள். வெறும் தபலா மட்டும் ஓடும் இந்த நான்கு வரிகள் மட்டுமே நினைவில் இருக்கிறது. சரணமோ, இடை இசையோ, படத்தின் பெயரோ, இசை அமைப்பாளரின் பெயரோ ஒன்றுமே தெரியாமல் என் நினைவில் நிற்கும் இந்த நான்கு வரிகள் முப்பது வருடங்களுக்கும் மேலாக கூடவே வந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு வியப்புடன் குறிப்பாக சொல்லக் காரணம், மிக மிக பெரும்பாலான பாடல்கள், எனக்கு பிடித்தவையாக இருந்தால், அத்தனை விவரங்கள், வரிகள், இடை இசை, அனைத்தும் பதிந்து விடும் எனக்கு, இந்த பாடல் குறித்த வேறு ஒன்றுமே தெரியாமல் போனது வியப்பு மட்டுமல்லாமல் வேதனையும் கூட.

திரை இசையில் அகராதிகளாக வலம் வந்து கொண்டிருந்த, கொண்டிருக்கும் எனது பல நண்பர்களுக்கு கூட இந்தப் பாடல் குறித்து ஒன்றும் தெரியவில்லை. சிறு வயதில் தொலைந்து போன பிள்ளையின் மிகச் சில சாயல்களை மட்டும் நினைவில் கொண்டு திரியும் தகப்பனைப் போல காத்திருக்கிறேன்.

அடுத்த பாடல் இந்தளவுக்கு துரதிர்ஷ்டம் இல்லை. படம் - பாலச்சந்தரின் நான் அவனில்லை. பாடியவர்கள், ஜெயச்சந்திரன், எல். ஆர். ஈஸ்வரி. இசை- எம்.எஸ்.விஸ்வநாதன். அதே காலக் கட்டத்தில் கேட்டதுதான் இந்தப் பாடலும்.

'மந்தார மலரே, மந்தார மலரே,
நீராட்டு கழினல்லே
மன்மத ஷேத்ரத்தில்
எந்நாளும் பூஜா
நீகூட வருமில்லே - எல். ஆர். ஈஸ்வரி

பிறகு, ஜெயச்சந்திரன், மலையாளத்தில், "மன்மதன் இவிடே தன்னே உண்டு" என்பார்.

ஒரு விரிவான வயலின் இசை கோர்வைக்கு பின், ஈஸ்வரி, " ஓ, எந்தோ!" என்பார் பாருங்கள்!

அந்த இரு வார்த்தைகளின் அசைவுகள், அவற்றிலிருந்த பெண்மை - என்னை மயக்கி விட்டன. மனதில் செதுக்கி இருந்த அந்த இரு வார்த்தைகள்!

இந்தப் பாடலையும் முப்பது வருடங்களுக்கும் மேலாக நான் கேட்கவேயில்லை. மிக யதேச்சையாக இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பாடலை ஒரு வலைத்தளத்தில் கேட்ட போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

மந்தார மலரே என்ற இந்த பாடல் பல விஷயங்களுக்காக தனித்துவமான ஒரு பாடல். தமிழில் அதற்க்கு முன்பு இப்படி தமிழும் மலையாளமும் மணிப்ப்ரவாலமாக கலந்தொரு பாடலை நான் கேட்டதில்லை. வரிகளும் மிக உயரிய கவிதைச் சித்திரம். சண்டை மேளம், குழல் என்று விஸ்வநாதன் கொடுத்திருக்கும் மலையாள பண் அசல் கேரள வாசனை வீசும் ஒரு படைப்பு.

மீண்டும் இந்தப் பாடலை கேட்டதும் ஒரு நாளெல்லாம் அனுபவித்து கொண்டிருந்தேன்.

ஓ! எந்தோ!
mandhara malare.mp3

Pandit Venkatesh Kumar and Raag Hameer