Sunday, May 10, 2020

புலன்

புலன் 


வலது கையில்லை
வலது காலில்லை
இழுபடும் நடை
மெதுமெதுவே குறைந்து
படுக்கைவசம்
சன்னலருகே பின்னொளியில்
அசைவற்ற சித்திரம்போல்
உணர்வின்றி துவளும் கரத்தைத்
எப்போதும் தாங்கும் இடக்கை
அருகமரும்
என்தலை கோதவே
தன் பிடிதளரும்
எனைப்பிரிந்து
இத்தனை வருடம் கழிந்தும்
உடல் ஒருபுறம் இழுபட
கனிந்த முகமும்
கலங்கிய விழிகளும்
சாலையில் காணுந்தோறும்
அவளையன்றி
வேறாரும் காணேன்
வேறொன்றும் உணரேன்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer