Monday, February 20, 2017

எதிரே ஓடும் நதி

எதிரே ஓடிக் கொண்டிருந்த 
நதியைப் போலொரு பெருக்கு 
என்னுள்ளும் 


உயர்ந்து அமிழ்ந்து 
மறைந்து போயினும் 
காலாதீதமாய் விரைந்த தடம் 
காணக்கிடக்கிறது 

உயிர் அருந்தி 
வறண்ட கரைகளில் 
விடாது அள்ளினாலும் 
என் தடம் மறைய 
ஆகும் இன்னும் 
ஆயிரம் காலம் 

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer