Wednesday, January 20, 2016

அற்றது கேட்கின்



குறுகித் திணிந்த
முடியா துவாரம்

பத்திரம் தேடி
நுழைய வேண்டுமொரு யோனி

ஓயத் துரத்தும்
அருவங்கள்

விழுந்தும் தீரா
இருளடர்ந்த ஆழம் 

கால்கள் தளைத்தும்
படுக்கை நனைக்கும் நனவு 

சளைத்து அறும்
உடலவயங்கள்

தொடவியலா முலைகள்
விழித்து எழினும் அதே

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer