Saturday, January 1, 2011

அவன்

அவன் முன் நிற்க
காத்திருந்தேன்
நடுவே திரை

நானும் அவனும்
பேசிக்கொள்ள
திரை தடை அல்ல
என்றபோதும்
திரைகள் சடங்குகள்
என அதுவொரு
விளையாட்டு

சுற்றிலும்
மானுட துக்கங்களின்
உச்சங்கள்

நான் காத்திருந்தேன்

திரை விலகியது
உரையாடல் நின்றது

உதிர்ந்தது
உலகின்
துன்பங்கள் எல்லாவற்றிற்குமான
ஒரு துளி கண்ணீர்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer